skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 14 ஜூலை, 2010

"அம்மா"ச்சி






ராச்சாப்பாடு முடித்த‌வுட‌ன்
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்த‌லையை நீவிக் கொண்டே
மெல்ல‌ ஆர‌ம்பிக்கும் ஆச்சி
"உங்க‌ம்மாவை நெனைச்சுப்பியா ராசா"

என் மொற‌ப்ப‌ க‌ண்ட‌தும்
அதுக்கில்ல‌ப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்த‌வ‌தான் ஆனா
ஒரு புள்ளய‌க் கூட‌
அவ‌ வ‌ள‌த்த மாதிரி
வ‌ள‌க்க‌ல‌ப்பா

தரையில‌ விட‌ ச‌ம்ம‌திக்க‌
மாட்ட‌ப்பா ஒன்னைய
‌தூக்கி சொம‌ந்திருப்பாளே
கொஞ்ச‌மா ந‌ஞ்ச‌மா

ஒரு நாளலெல்லாம் ஒன‌க்கு
மேலுக்குச் சரியில்லை
நொச்சு நொச்சுனு ஒரே அழுகை
அன்னிக்கி ஒரு பொட்டுத்
தூக்க‌மில்லை புள்ளைக்கு

ராத்திரி பூரா தோள்ல‌ போட்டு
ந‌ட‌ந்துகிட்டே இருந்தாப்பா
பெரியாச்சி வீட்ட‌ப் பாத்து
கைய‌க் காட்டி அழுவ‌
தூக்கிட்டு ஒடுவா அந்த‌
ராத்திரில‌

அங்க‌ போய் செத்த‌ நேர‌ம்
ஆன‌தும் இங்க‌ பாத்து
கைய‌க் காட்டுவ‌
ம‌றுக்கா இங்க‌ தூக்கிட்டு
வ‌ருவா

ஏலேன்னு கூப்பிட‌
மாட்டாப்பா ஒன்னைய‌
த‌ம்பி த‌ம்பின்னுதான்
உருகுவா

ஒரு த‌ர‌ம் ஒன் மாம‌ன்கார‌ன்
"ஏலேன்னு" கூப்பிட்ட‌துக்கு
என்ன‌ ச‌ண்டை போட்டா
தெரியுமா?

என் வெத்த‌லைப் பைய‌
நீ ஒளிச்சு வ‌க்கிற‌த‌ப் பாத்து
வாய் கொள்ளாம சிரிப்பா

அவ‌ சாகும் போது
ஒன‌க்கு அஞ்சு வ‌ய‌சு
இந்த‌ திண்ணையில‌ தாம்பா
வ‌ச்சிருந்தோம்

ம்ம்...இன்னிக்கு இருந்தாளா
ம‌க‌ராசி ஒன்னைய‌ப் பாக்க‌
ம‌குந்து போயிருப்பா ம‌குந்து....

என்ன‌ செய்ய‌ற‌து
அவ‌ த‌லையெழுத்து அப்ப‌டி.....

த‌ன் ம‌க‌ளைப் ப‌ற்றி எத்த‌னை
முறை சொன்னாலும்
அலுத்த‌தில்லை ஆச்சிக்கு
எங்க‌ம்மாவைப் ப‌ற்றி கேட்க‌
என‌க்கும்......

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:29 PM
Labels: புனைவு

13 comments:

vasu balaji சொன்னது…

எத்தனை முறை எப்படி எழுதினாலும் படிச்சாலும் சலிக்காம அம்மா..புதுசாவே..

14 ஜூலை, 2010 அன்று 5:01 PM
VELU.G சொன்னது…

அருமை அம்மாச்சி

super

14 ஜூலை, 2010 அன்று 5:40 PM
Riyas சொன்னது…

//த‌ன் ம‌க‌ளைப் ப‌ற்றி எத்த‌னை
முறை சொன்னாலும்
அலுத்த‌தில்லை ஆச்சிக்கு
எங்க‌ம்மாவைப் ப‌ற்றி கேட்க‌
என‌க்கும்......//

அலுக்கா விசயம் தாயும் அவள் அன்பும்.. நல்ல பகிர்வு.

14 ஜூலை, 2010 அன்று 5:49 PM
Unknown சொன்னது…

beautiful..

14 ஜூலை, 2010 அன்று 5:54 PM
க ரா சொன்னது…

நல்லாருக்குங்க.

14 ஜூலை, 2010 அன்று 11:57 PM
நாடோடி சொன்னது…

அழ‌கா வ‌ந்திருக்கு க‌ரிச‌ல்...

15 ஜூலை, 2010 அன்று 2:58 AM
http://rkguru.blogspot.com/ சொன்னது…

நானும் கவிதை எழுதுனும் என்று யோசிக்கிறேன் வரமாடங்குதே......கவிதை அருமை வாழ்த்துகள்

15 ஜூலை, 2010 அன்று 5:09 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள் சார்

ந‌ன்றி வேலு

ந‌ன்றி ரியாஸ்

ந‌ன்றி முகில‌ன்

ந‌ன்றி ராம‌சாமி க‌ண்ண‌ண்

ந‌ன்றி ந‌டோடி

ந‌ன்றி குரு

15 ஜூலை, 2010 அன்று 7:00 AM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

உருக வச்சிட்டிங்க கரிசல்.

15 ஜூலை, 2010 அன்று 10:36 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@அக்ப‌ர் ந‌ன்றி ம‌க்கா

15 ஜூலை, 2010 அன்று 11:07 AM
Unknown சொன்னது…

கண்ணீர் பெருக்கும்...வலிக்கும் வரிகள் ...

15 ஜூலை, 2010 அன்று 11:31 AM
பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப பிடிச்சிருக்கு!

15 ஜூலை, 2010 அன்று 12:01 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்
ந‌ன்றி ம‌க்கா


ந‌ன்றி பாரா அண்ண‌ன்

15 ஜூலை, 2010 அன்று 1:05 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ▼  ஜூலை (10)
      • ப‌ட்டப்பெய‌ர்
      • ஊர்க்காசு
      • க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌
      • சின்ன‌ சைக்கிள்
      • "அம்மா"ச்சி
      • ச்சும்மா
      • ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்
      • முர‌ண்
      • ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)
      • க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio