skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 29 ஜூலை, 2010

ப‌ட்டப்பெய‌ர்

பொட்ட‌ப்புள்ளையா ல‌ட்ச‌ண‌மா ஒரு
எட‌த்துல‌ இருக்கிறியா க‌ழுத‌ன்னு
வ‌ஞ்சுகிட்டே மீச‌ தாத்தா என‌க்கிட்ட‌
பெயர் "ஆடுகாலி"

கள்ளனை தொட‌ரும் காப்பான்
போல‌ அது என்னைத் தொட‌ர்ந்த‌து
நான் விரும்பாவிட்டாலும்

யாரும‌றியா ஒரு ந‌ள்ளிர‌வில்
என்னை விரும்பிய‌வ‌னோடு
ஊர் விட்ட‌ பொழுதில்
தொட‌ர்த‌லை நிறுத்தி விட்ட‌து

ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து
சொந்த‌ ம‌ண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொட‌ர‌ ஆர‌ம்பித்த‌து

விசாரிக்கையில் தான் தெரிந்த‌து
அது ஆடுகாலி அல்ல‌
"ஓடுகாலி" என்று
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:17 AM 5 comments
Labels: க‌விதை

புதன், 21 ஜூலை, 2010

ஊர்க்காசு

சிறு வ‌ய‌தில்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெள‌ம்பும்
போதெல்லாம்

தாத்தாவுக்கு தெரியாம‌ல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாம‌ல்
மாமாவும்
ச‌ட்டைப் பையில் திணிப்பார்க‌ள்

சில‌தில் க‌ந்த‌க‌ வாசனை
சில‌தில் வெத்த‌லை வாச‌னை

இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து
என் பைய‌னுக்கும் கிடைக்கிற‌து
பை நெறைய ஊர்க்காசு
அதே வாச‌னைக‌ளோடு

இங்கு வ‌ருமுன்பு

இந்த‌ ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செல‌வு
ப‌ண்ணி அத‌யும் இத‌யும்
வாங்குறீங்க‌ன்னு கேட்ட‌
என் ம‌னைவிக்கு இப்போவாது
புரியுமென‌ நெனைக்கிறேன்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:51 AM 23 comments
Labels: கவிதை

செவ்வாய், 20 ஜூலை, 2010

க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌

எப்ப‌ பாத்தாலும் க‌ப்பா,ம‌த்திக்க‌றி,ப‌ரோட்டா,பீஃப் ஃபிரைனு வ‌ழ‌க்க‌மான‌ அயிட்ட‌ங்க‌ளா சாப்பிட்டு போர‌டிக்குது.வேற‌ எதாவ‌து ஸ்பெஷ‌ல் அயிட்ட‌ங்க‌ள் கெடைக்கிற‌ க‌டைக்கு கூட்டிட்டு போங்க‌ன்னு நான் சொன்ன‌த‌ கேட்டு, சேட்ட‌ன் (என் கூட‌ வேலை செய்ப‌வ‌ர்) கொண்டு போன‌து தான் இந்த‌க் க‌டை.கேர‌ளால‌ "த‌ட்டுக்க‌ட‌"ன்னா ந‌ம்மூரு கையேந்தி ப‌வ‌ன் மாதிரி.கையேந்தி ப‌வ‌னா ஆர‌ம்பிச்சு இப்ப‌ அமீர‌க‌த்துல‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் ரெஸ்ட்டாரெண்ட் வ‌ச்சிருக்காங்க‌.பேர‌க் கேட்ட‌தும் "எங்க‌ நின்னுக்கிட்ட‌ சாப்பிட‌ விட்ருவாங்க‌ளோன்னு ப‌ய‌ந்துகிட்டே போனேன்.நான் நினைச்ச‌ மாதிரியில்லை,செட்டப் எல்லாம் ந‌ல்லாத்தான் இருந்த‌து.

புட்டுப் பிரியாணி

புட்டு செஞ்சு..அத‌ உதிர்த்து விட்டு,அதுல‌ சிக்க‌ன் கொழ‌ம்பு சேர்த்து தோசைக் க‌ல்லில் போட்டு கொத்தி எடுத்தா அது தான் புட்டுப் பிரியாணி.ந‌ம்ம‌ கொத்துப் ப‌ரோட்டா மாதிரி தான். பாக்குற‌துக்கு சிக்க‌ன் உப்புமா மாதிரி இருந்தாலும் ப‌ய‌ங்க‌ர‌ டேஸ்ட்.தொட்டுக்கிற‌துக்கு ஊறுகாய், தயிர் வெங்காய‌ம் குடுக்குறாங்க‌.சிக்க‌ன் இல்லாம‌.. பீஃப் அல்ல‌து ம‌ட்ட‌ன் சேர்த்தும் கிடைக்கிற‌து

சிக்க‌ன் 5000

பேரே டெர்ர‌ரா இருக்குல்ல.உண்மையில் இதுக்கு இன்னும் பெயர் சூட்ட‌ப்ப‌ட‌வில்லை.இந்த‌ அயிட்ட‌ம் ஆர்ட‌ர் ப‌ண்ணினால் கொண்டு வ‌ரும் போதே கையோட‌ ஒரு கூப்ப‌னும் கொண்டு வர்றாங்க‌.சாப்பிட்டு பார்த்துட்டு நாம தான் இதுக்கு பேர் வைக்க‌ணும்..ந‌ம்ம‌ முக‌வ‌ரி எழுதி கூப்ப‌ன‌ அங்க‌ இருக்குற‌ பெட்டியில‌ போட்டுட்டு வ‌ந்துர‌ணும்.குலுக்க‌லில் ந‌ம்ம‌ வ‌ச்ச‌ பேரு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டால் 5000 திராம்ஸ் ப‌ரிசு.(ஸ்ஸ்.. அப்பா எப்ப‌டியெல்லாம் விள‌ம்ப‌ர‌ம் ப‌ண்றானுக‌..)

ஆர்வ‌க் கோளாறுல‌ வாங்கிப் பார்த்தா வ‌ழ‌க்க‌மான‌ சிக்க‌ன் ஃபிரை மேல‌ கொஞ்ச‌ம் தேங்காய் துருவ‌ல் தூவி விட்டுருக்கானுக‌,அவ்ள‌ தான்.

ம‌ற்ற‌ப‌டி புட்டு,க‌ட‌லைக்க‌றி,க‌ப்பா,ம‌த்திக்க‌றி,ம‌த்தி ஃபிரை,ஆப்ப‌ம்,ஃபீப் ஃபிரை போன்ற‌ வ‌ழ‌க்க‌மான‌ கேர‌ள‌ அயிட்ட‌ங்க‌ள் கிடைக்கின்றன‌.

இங்க‌ சாப்பிடும் போது சேட்ட‌ன் ச‌காவு இந்த‌ மேட்ட‌ர‌ சொன்னார்.கேர‌ளாவில் சுவையான உண‌வுக‌ள் கிடைப்ப‌து க‌ள்ளு ஷாப்புக‌ளில் தானாம்.



இதுக்காக‌வாது அடுத்த‌ விடுமுறையில் கேர‌ளா செல்ல‌ வேண்டும்!
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:11 AM 7 comments
Labels: அனுப‌வ‌ம், உண‌வு

சனி, 17 ஜூலை, 2010

சின்ன‌ சைக்கிள்




சனிக்கெழ‌ம‌ காலங்காத்தாலே
எந்திச்சு கோட்டு வாய‌க் கூட‌
க‌ழுவாம‌ ம‌ணி சைக்கிள் க‌டைக்கு
ஓடுவேன் அம்மாகிட்ட‌
கெஞ்சி வாங்குன‌ ஒத்த‌ ரூபாயோட‌
அங்க‌ன‌ போய் பாத்தா
என‌க்கு முன்னாடியே
ஊளமூக்க‌ன் சைக்கிள
எடுத்துட்டு போயிருப்பான்
ஒரு ம‌ணி நேர‌ம் காத்துக்
கெட‌ந்து சைக்கிள் கைக்கு
வ‌ந்த‌தும் ச‌ந்தோச‌ம்
பிளேனே கெட‌ச்ச‌ மாதிரி
வ‌ண்டிப்பாத‌,க‌ம்மாக்க‌ரை
க‌ள‌த்து மேடு,க‌ரிச‌க் காடுன்னு
சுத்தினாலும் அப்ப‌ப்போ
ம‌ணி அண்ண‌ன் க‌டையில‌ போய்
ம‌ணி பாத்துக்கிடுவேன்
வெள்ளன‌ காட்டுக்கு போய்ட்ட‌
தாத்தாவுக்கு க‌ஞ்சி கொண்டு
போற‌து,ரேஷ‌ன் க‌டையில‌ போய்
ச‌க்க‌ர‌ வாங்குற‌து எல்லாம்
இந்த‌ சைக்கிள்ள‌ தான்
த‌ண்ணி குடிக்காம‌ நீச்ச‌ல்
ப‌ழ‌க‌ முடியாது
முட்டி உடைக்காம சைக்கிள்
பழக முடியாதுன்னு ஊர்ல‌
சொல்வாங்க‌
முட்டில‌ அடிபட்டா ர‌த்த‌ம்
நிக்கிற‌துக்கு க‌ர‌ம்ப‌ ம‌ண்ணுதான்
ம‌ருந்து அப்ப‌வும் சைக்கிள்
நிக்காது
ம‌க்காடு,பெல்லு,பிரேக்
கேரிய‌ல் எதுவுமே இல்லாத‌
ஒரு வாட‌கை சைக்கிள் தான்
என‌க்கு கெட‌ச்ச‌து ப‌ழ‌க‌ற‌துக்கு
இப்ப‌ எங்க‌க்கா ம‌க‌னுக்கு வாங்குன‌
சைக்கிள்ள எல்லாமே
இருக்கு
ஆனா
ஓட்டிப் ப‌ழ‌க‌த்தான் இட‌மில்ல‌
கிச்ச‌னுக்கும் ஹாலுக்கும்
இடைப்ப‌ட்ட‌ தூர‌த்தை த‌விர்த்து.

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:17 AM 15 comments
Labels: அனுப‌வ‌ம்

புதன், 14 ஜூலை, 2010

"அம்மா"ச்சி






ராச்சாப்பாடு முடித்த‌வுட‌ன்
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்த‌லையை நீவிக் கொண்டே
மெல்ல‌ ஆர‌ம்பிக்கும் ஆச்சி
"உங்க‌ம்மாவை நெனைச்சுப்பியா ராசா"

என் மொற‌ப்ப‌ க‌ண்ட‌தும்
அதுக்கில்ல‌ப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்த‌வ‌தான் ஆனா
ஒரு புள்ளய‌க் கூட‌
அவ‌ வ‌ள‌த்த மாதிரி
வ‌ள‌க்க‌ல‌ப்பா

தரையில‌ விட‌ ச‌ம்ம‌திக்க‌
மாட்ட‌ப்பா ஒன்னைய
‌தூக்கி சொம‌ந்திருப்பாளே
கொஞ்ச‌மா ந‌ஞ்ச‌மா

ஒரு நாளலெல்லாம் ஒன‌க்கு
மேலுக்குச் சரியில்லை
நொச்சு நொச்சுனு ஒரே அழுகை
அன்னிக்கி ஒரு பொட்டுத்
தூக்க‌மில்லை புள்ளைக்கு

ராத்திரி பூரா தோள்ல‌ போட்டு
ந‌ட‌ந்துகிட்டே இருந்தாப்பா
பெரியாச்சி வீட்ட‌ப் பாத்து
கைய‌க் காட்டி அழுவ‌
தூக்கிட்டு ஒடுவா அந்த‌
ராத்திரில‌

அங்க‌ போய் செத்த‌ நேர‌ம்
ஆன‌தும் இங்க‌ பாத்து
கைய‌க் காட்டுவ‌
ம‌றுக்கா இங்க‌ தூக்கிட்டு
வ‌ருவா

ஏலேன்னு கூப்பிட‌
மாட்டாப்பா ஒன்னைய‌
த‌ம்பி த‌ம்பின்னுதான்
உருகுவா

ஒரு த‌ர‌ம் ஒன் மாம‌ன்கார‌ன்
"ஏலேன்னு" கூப்பிட்ட‌துக்கு
என்ன‌ ச‌ண்டை போட்டா
தெரியுமா?

என் வெத்த‌லைப் பைய‌
நீ ஒளிச்சு வ‌க்கிற‌த‌ப் பாத்து
வாய் கொள்ளாம சிரிப்பா

அவ‌ சாகும் போது
ஒன‌க்கு அஞ்சு வ‌ய‌சு
இந்த‌ திண்ணையில‌ தாம்பா
வ‌ச்சிருந்தோம்

ம்ம்...இன்னிக்கு இருந்தாளா
ம‌க‌ராசி ஒன்னைய‌ப் பாக்க‌
ம‌குந்து போயிருப்பா ம‌குந்து....

என்ன‌ செய்ய‌ற‌து
அவ‌ த‌லையெழுத்து அப்ப‌டி.....

த‌ன் ம‌க‌ளைப் ப‌ற்றி எத்த‌னை
முறை சொன்னாலும்
அலுத்த‌தில்லை ஆச்சிக்கு
எங்க‌ம்மாவைப் ப‌ற்றி கேட்க‌
என‌க்கும்......

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:29 PM 13 comments
Labels: புனைவு

திங்கள், 12 ஜூலை, 2010

ச்சும்மா

வெளிநாட்டுப் ப‌திவ‌ர்க‌ள் ஏதேனும் விவாத‌த்தில் க‌ருத்துச் சொன்னால்.. ஆரோக்கிய‌மாக‌ எதிர் விவாத‌ம் செய்ய‌ வேண்டும் அல்ல‌து பேசாம‌ல் இருக்க‌ வேண்டும். அதை விடுத்து ஏசி அறையில் இருந்து கொண்டு பேச‌ வேண்டாம் என‌க் கூறுவ‌து என்ன‌ நியாய‌ம் என‌த் தெரிய‌வில்லை.

த‌க‌வ‌லுக்காக‌
(circular from Bupa Middle East (Medical Insurance Company), indicating that the temperature in the major cities of the Kingdom will be rising in coming weeks, i.e. Jeddah may reach 52 C, Alkhobar / Dammam may reach 55 C & Riyadh unbelievable 59 C. )

ஐயாமார்க‌ளே..அம்மாமார்க‌ளே ஏசி என்ப‌து ந‌ம்ம‌ ஊரில் ஒரு ஸ்டேட்ட‌ஸ் சிம்ப‌லாக‌ இருக்க‌லாம்..இங்க அப்ப‌டிய‌ல்ல‌.பெரிய‌ சூப்ப‌ர் மார்க்கெட் முத‌ல் சாதார‌ண‌ ம‌ளிகை க‌டை வ‌ரை.. இவ்வ‌ள‌வு ஏன் சலூன் க‌டைக‌ளில் கூட‌ ஏசி க‌ட்டாய‌மிருக்கும் இங்குள்ள‌ வெப்ப‌த்தைச் ச‌மாளிக்க‌.ஏசி ரூமில் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌க்கார‌ர்க‌ள்.. அவ‌ர்க‌ளுக்கு அடித்த‌ட்டு ம‌க்களின் பிர‌ச்சினையில் க‌ருத்துச் சொல்ல‌ உரிமையில்லை என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு....பெரிய‌ க‌ம்பெனிக‌ளில் உய‌ர் ப‌தவிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளில் இருந்து..ம‌ளிகை க‌டை,சின்ன‌ ஹோட்ட‌ல்க‌ள், சலூன் க‌டைக‌ளில் வேலை செய்ப‌வர்க‌ள் வ‌ரை எல்லாரும் ஏசியில் தான் இருக்கிறார்க‌ள்.பெரும்பால‌னோர் ம‌த்திய‌ த‌ர‌ வ‌ர்க்க‌த்தைச் ‌சார்ந்த‌வ‌ர்க‌ள் தான்.பொழ‌ப்புக்காக‌ வெளிநாட்டில் இருக்கிறோம் அவ்வ‌ள‌வே.

இனியாவ‌து வெளிநாட்டுப் ப‌திவ‌ர்க‌ள் சொல்வ‌தில் உட‌ன்பாடில்லை எனில் விவாத‌ம் செய்யுங்க‌ள்...ஏசி யை இழுக்காம‌ல்...
******************************************************
க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிப‌ர‌ப்பாகும்.."நெஞ்ச‌ம் ம‌ற‌ப்ப‌தில்லை" நிக‌ழ்ச்சி நான் விரும்பி பார்க்கும் ஒன்று.இனிமையான குர‌ல்க‌ளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌ழைய‌ பாட‌ல்க‌ளைப் பாடுகிறார்க‌ள்.பாட‌ல் ம‌ற்றும் ப‌ட‌ம் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் சுவார‌ஸ்ய‌மாக‌ உள்ளது.உதார‌ண‌ம்.. "அத்தை ம‌டி மெத்தைய‌டி" பாட‌ல் இட‌ம் பெற்ற‌ க‌ற்ப‌க‌ம் ப‌ட‌த்தில் தான் கே ஆர் விஜ‌யா அறிமுக‌மானார்..மேலும் இந்த‌ ப‌ட‌த்தின் வெற்றிக்குப் பிற‌கு தான் புக‌ழ் பெற்ற‌ க‌ற்ப‌க‌ம் ஸ்டுடியோ உருவான‌து.பாட‌ல் ப‌ற்றிய‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளும் சுவையாக‌‌ உள்ள‌து.

"சிங்கார‌ வேல‌னே" கேட்கும் போது ஜான‌கி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வ‌ருவ‌தை த‌விர்க்க‌ முடிய‌வில்லை.
****************************************
உல‌க‌க் கோப்பையை ஸ்பெயின் வென்று விட்ட‌து.. ஆக்டோப‌ஸ்ஸின் க‌ணிப்பும் கூட‌ வென்று விட்ட‌து.நேற்றைய‌ ஆட்ட‌த்தில் விறுவிறுப்பு குறைவுதான்.ஏக‌ப்ப‌ட்ட‌ ம‌ஞ்ச‌ள் அட்டைக‌ள் காட்ட‌ப்ப‌ட்ட‌ன‌.ஐந்து கோல் அடித்த‌தோடு..மூன்று கோல்க‌ள் அடிக்க‌ உறுதுணையாயிருந்த‌ ஜெர்ம‌னியின் தாம‌ஸ் முல்ல‌ருக்கு த‌ங்க‌ கால‌ணி விருது கிடைத்த‌து.
******************************************
2050 இல் இந்தியாவின் ஜ‌ன‌த்தொகை 200 கோடியாக‌ இருக்கும்..இது அப்போதைய‌ சீனாவை விட‌ அதிக‌ம்.(த‌க‌வ‌ல் உப‌ய‌ம் ஏசியாநெட் ரேடியோ)ந‌ம்முடைய பெரு ந‌க‌ர‌ங்க‌ளின் நிலைமைய‌ நினைத்துப் பார்க்க‌வே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.வ‌ய‌ல்வெளிக‌ள் எல்லாம் பிளாட்டுக‌ளாக‌ மாறி வ‌ருகிற‌து..இன்னொரு பிர‌ச்சினை த‌ண்ணீர்ப் ப‌ஞ்ச‌ம்.அத‌ற்குள்ளாக‌ ப‌சித்தால் ஒரு மாத்திரை,தாக‌ம் எடுத்தால் ஒரு மாத்திரை என‌ ம‌க்க‌ள் பய‌ன்பாட்டிற்கு வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப‌டுவ‌தற்கில்லை.
**********************************************
பிடித்த‌ ப‌ஞ்ச் ட‌ய‌லாக்
குஜ‌ராத் ம‌க்க‌ளுக்கு மின்வெட்டு என்றால் என்ன‌வென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான‌ ம‌க்களுக்கு மின்சார‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாது.

ந‌ரேந்திர‌ மோடி
குஜ‌ராத் முத‌ல்வ‌ர்.
***********************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:05 AM 9 comments
Labels: அர‌சிய‌ல், அனுப‌வ‌ம், சமூக‌ம், சினிமா

சனி, 10 ஜூலை, 2010

ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்

ப‌திவ‌ர்க‌ளுக்குள் ந‌டைபெறும் புனைவு,எதிர் புனைவு,ச‌வால்,எதிர் சவால்க‌ள்,ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளைக் கேள்விப்ப‌ட்டு ந‌ம் த‌லைவ‌ர்க‌ள் வெளியிட்ட‌ அறிக்கைக‌ள்.

க‌லைஞ‌ர்
த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் திராவிட‌ நாக‌ரிக‌ம‌ல்ல‌(குல்லுக‌ ப‌ட்ட‌ர்,அண்ட‌ங்காக்கை எல்லாம் ஞாப‌க‌ம் வ‌ந்தால் க‌ழ‌க‌ம் பொறுப்பல்ல‌).பிண‌க்குக‌ளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.வலைப்ப‌திவாள‌ர்க‌ள் அடிக்க‌டி த‌ங்க‌ளுக்குள் பாராட்டு விழாக்க‌ள் ந‌ட‌த்திக் கொள்ள‌ வேண்டும்,இத‌ன் மூல‌ம் பிர‌ச்சினைக‌ளை வ‌ள‌ர‌ விடாம‌ல் பார்த்துக் கொள்ளலாம்.வேண்டிய‌ உத‌விக‌ளை ஜெக‌த்திட‌ம் செய்ய‌ச் சொல்லியிருக்கிறேன். வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளையும் ஒரு குடும்ப‌மாக‌க் க‌ருதி நானும் க‌ல‌ந்து கொள்வேன் என‌ உறுதிய‌ளிக்கிறேன்.இத‌ன் பிற‌கும் ச‌ண்டை,ச‌ச்ச‌ர‌வுக‌ள் தொட‌ர்ந்தால் நானும் ஒரு வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பிக்க‌ நேரிடும் என்ப‌தை எச்ச‌ரிக்கையாக‌ச் சொல்லிக் கொள்கிறேன்.

ஜெய‌ல‌லிதா
அடுத்து த‌மிழ‌க‌த்தில் அமைய‌ப் போவ‌து க‌ழ‌க‌ ஆட்சிதான்.த‌ற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வ‌ந்ததும் உங்க‌ளை நேரில் ச‌ந்தித்து பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு காணுவேன் என‌ உறுதிய‌ளிக்கிறேன்.இத‌னை மீறி யாரேனும் ச‌ண்டையில் ஈடுப‌ட்டால் ந‌ம‌து எம்ஜிஆரில் உங்க‌ள் வ‌லைப்ப‌திவு பெய‌ர் வெளியிட‌ப் ப‌டும்.

வைகோ
வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்குள் ஏற்ப‌ட்டுள்ள‌ இந்த‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளை தீர்க்கும் பொருட்டு என‌து த‌லைமையில், க‌ன்யாகும‌ரியில் இருந்து காஷ்மீர் வ‌ரை சுமார் ஆறு மாத‌ கால‌ "ம‌றும‌ல‌ர்ச்சி" ந‌டைப‌ய‌ண‌ம் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது. வ‌லைப்ப‌திவாள‌ர் அனைவ‌ரும் ந‌டைப‌ய‌ண‌த்தில் க‌ல‌ந்து கொண்டால்,ஆறு மாத‌ கால‌த்திற்கு ப‌திவு எழுத‌ யாருமேயில்லாம‌ல் ச‌ண்டை தானாக‌வே நின்று விடும் என்ப‌தை க‌ருத்தில் கொண்டே இந்த‌ ப‌ய‌ண‌ம் என‌ தெரிவித்துக் கொள்கிறேன்.

த‌மிழ்க்குடிதாங்கி
வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அணியில் நின்று, தொட‌ர்ந்து வாதாடுவாதலேயே ச‌ண்டை தொட‌ர்கிற‌து என‌க் க‌ருதுகிறேன்.மாறாக‌ ப‌திவ‌ர்க‌ள் வார‌மொருமுறை அணி மாறி வாதாடினால் ச‌ண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொட‌ர்ந்தால் காடுவெட்டி குரு க‌ள‌ம் இற‌க்கி விட‌ப்ப‌டுவார் என‌ நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன்.

இம்சை அர‌ச‌ன்
ம‌த‌ம்,சாதி,அர‌சிய‌ல்,புனைவு என‌ த‌னித்த‌னியாக‌ வ‌லைப‌திவுக‌ள் தொட‌ங்க‌ப்ப‌டும். ச‌ண்டை போட‌ விரும்புவ‌ர்க‌ள் அத‌ற்கென‌ ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ வ‌லைப‌திவுக‌ளில் சென்று ச‌ண்டையிட்டுக் கொல்ல‌(ள்ள‌)லாம்.சிற‌ந்த‌ ம‌த‌ச்ச‌ண்டை ப‌திவ‌ர்,சிற‌ந்த‌ அர‌சிய‌ல் ச்ண்டைப் ப‌திவ‌ர்,சிற‌ந்த‌ புனைவுப் ப‌திவ‌ர் போன்ற‌ விருதுக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு, விருது பெறுப‌வ‌ர்க‌ளுக்குப் ப‌ரிசாக‌ அக்காமாலா ம‌ற்றும் க‌ப்சியில் ஊற‌ப்போட்ட‌ பாம்புச்ச‌ட்டை,முய‌ல் போன்ற‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

பொறுப்பி :  முன் ஜாமீன் மாதிரி,முன் ம‌ன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் ச‌ண்டைக்கு வ‌ந்துராதீங்க‌ சாமிக‌ளா!!!
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:11 PM 11 comments
Labels: அர‌சிய‌ல், ப‌திவுல‌க‌ம், மொக்கை

வியாழன், 8 ஜூலை, 2010

முர‌ண்

உத‌ட்டுச்சுழிப்பு
செல்ல‌க்குட்டு
ஊதாத் தாவ‌ணி
தி(இ)ருட்டு முத்த‌ம்

தின‌மும்
ம‌ற‌க்காம‌ல் இருக்க‌னும் என
நினைப்ப‌வைக‌ளையெல்லாம்
நினைக்காம‌ல் ம‌ற‌ந்து விடுகிறேன்.

திரும‌ண‌ம் 
சாராய‌க்கடை
அறிவுரைக‌ள்
இட‌மாற்ற‌ம்

தின‌மும்
நினைக்காமல் இருக்க‌னும் என‌
நினைப்ப‌வைக‌ளையெல்லாம்
ம‌ற‌க்காமல் நினைத்து விடுகிறேன்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:58 PM 8 comments
Labels: கவிதை

புதன், 7 ஜூலை, 2010

ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)

ஹ‌ய் டாடி வ‌ந்தாச்சு

என்ன‌ங்க‌ இவ்ளோ லேட்? சிக்ஸ் ஓ கிளாக்கே கெள‌ம்புரேன்னு கால் ப‌ண்ணீங்க‌

பைக்க‌ ச‌ர்வீஸ் விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வ‌ந்தேம்மா அதான் லேட்

என்ன‌ பாப்பா இன்னிக்கு டீயூச‌ன் இல்லையா??

இல்ல‌ டாடி.. எங்க‌ மிஸ் வீட்ல‌ ஒரு ப‌ங்ஷ‌ன்

ஹோம் வொர்க் ப‌ண்ண‌ வைக்கிற‌ பொறுப்பு என் த‌லைல‌ ஹ‌ய்யோ எவளோ இருக்குதுங்க‌? இங்கிலிஷ் ,ஹிந்தி முடிஞ்ச‌து, இன்னும் கொஞ்ச‌ம் ரைம்ஸ் சொல்ல‌ வைக்க‌னும் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு பாப்பாவுக்கு

ஓகே நான் கொஞ்ச‌ம் பிர‌ஷ் ஆயிட்டு வாரேன் காபி எடுத்து வையேன்
.
.
.
.
அந்த‌ டிவியை கொஞ்ச‌ம் ஆன் ப‌ண்ணேன்,நீயூஸ் பார்க்க‌லாம்

என்ன‌ங்க‌ போன் பில் க‌ட்னீங்க‌ளா??

லேண்ட் லைன் பில் என் செல் பில் ரெண்டுமே க‌ட்டியாச்சு

அப்புற‌ம் ஹ‌வுஸ் ஓன‌ர் வ‌ந்திருந்தாருங்க‌..நாம‌ இங்க‌ வ‌ந்து டூ இய‌ர்ஸ் க‌ம்ப்ளீட் ஆயிருச்சுல்ல‌? நெக்ஸ்ட் ம‌ன்த்ல‌ இருந்து ரென்ட் த‌வுச‌ண்ட் ரூபிஸ் அதிக‌ம் வேணுமாம்..

இது வேற‌யா ?? ரென்ட் க‌ம்மியா இருந்தாலும் வாட்ட‌ர்,க‌ர‌ண்ட்,மெயின்டென‌ண்ஸ்னு த‌னித் த‌னியா புடுங்குறாங்க‌ள்ள‌...சீக்கிர‌ம் வேற‌ ஹ‌வுஸ் பாக்க‌ணும்...ஓகே அது கெட‌க்க‌ட்டும் இன்னிக்கு என்ன‌ டிப‌ன்மா??

பாப்பாவுக்கு எக் ரைஸ் வேணுமாம்,அத‌னால‌ எல்லாருக்கும் ரைஸ்தான்.இன்னிக்கு டிப‌ன் இல்ல‌..நான் போய் குக்க‌ர் வைக்குறேன்.உங்க‌ளுக்கு வேணா உருளைக் கிழ‌ங்கு ஃபிரை ப‌ண்ண‌வா??

ம் ப‌ண்ணு.. என‌க்கு கொஞ்ச‌ம் சிஸ்ட‌த்துல‌ ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வ‌ர்றேன்

அய்யோ நீங்க‌ சிஸ்ட‌த்துல‌ உக்காந்தா எந்திக்க‌வே மாட்டீங்க‌ளே??

ஏ இல்ல‌ ஜ‌ஸ்ட் ஒரு ஹாப் அன் ஹ‌வ‌ர் தான்.அது இப்ப‌ த‌மிழ் சீச‌ன் இல்லியா?எல்லாரும் ப்யூர் த‌மிழ் போஸ்ட் போட்டு ஹிட்ஸ் அள்றாங்க‌,இன்னிக்கு என‌க்கு ஒரு ஐடியா கெடைச்ச‌து நானும் ட்ரை ப‌ண்றேன்.நீ ரைஸ் ரெடி ப‌ண்ற‌துக்குள்ள முடிச்சுருவேன்..

என்ன‌வோ ப‌ண்ணுங்க‌

ந‌ம் தாய்மொழியை வ‌ள‌ர்க்க‌,அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌,அனைவ‌ரும் "ந‌ம் வீடுக‌ளில் த‌மிழை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துவோம்" என‌ உறுதி கொள்ள‌ வேணும்.......த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்தார் ந‌ம்ம‌ ப‌ச்ச‌,ம‌ஞ்ச‌,சிவ‌ப்பு, க‌ருப்பு, ரோஸ்,பிங்க் த‌மிழ்ப் ப‌திவ‌ர்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:26 AM 14 comments
Labels: மொக்கை

செவ்வாய், 6 ஜூலை, 2010

க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)

இரு வீட்டின் எதிர்ப்புக‌ளை மீறி காத‌ல் திரும‌ண‌ம் செய்து, ஒரு குழ‌ந்தையும் பெற்று ம‌கிழ்ச்சியாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும் போது தீடிரென‌ கணவ‌ன் இந்த‌ உல‌கத்தை விட்டே போய் விட்டால்?
அதுவும் அந்த‌ பெண் முழுக்க‌ முழுக்க‌ க‌ண‌வ‌னின் ச‌ம்பாத்திய‌த்தை ம‌ட்டும் சார்ந்து வாழும் சூழ்நிலையில்???

இப்ப‌டித்தான் ஆர‌ம்பிக்கிற‌து ச‌த்ய‌ன் அந்திக்காடு இய‌க்கிய‌  "க‌த‌ துட‌ருன்னு"  ப‌ட‌ம். குடும்ப‌க் க‌தைக‌ளை கொஞ்ச‌ம் காமெடி க‌ல‌ந்து சொல்வ‌து இவ‌ர‌து பாணி.இதுவும் அப்ப‌டியே.

வித்யா (ம‌ம்தா மோக‌ன்தாஸ்),ஷ‌நாவாஸ்(ஆசிப் அலி) இருவ‌ரும் காத‌ல் திரும‌ண‌ம் புரிந்து த‌னியே வாழ்ப‌வ‌ர்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கு ஒரே ம‌க‌ள் ல‌யா.வித்யா த‌ன் ம‌ருத்துவ‌ ப‌டிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஷ‌நாவாஸை காத‌லித்து க‌ல்யாண‌ம் செய்து கொண்ட‌வ‌ள்.ஒர் ம‌ழைக்கால‌ இர‌வில் ம‌க‌ள் ஆசைப்ப‌ட்ட‌ மாம்ப‌ழ‌ம் வாங்க‌ சென்ற‌ ஷ‌நாவாஸ்,ஆள் மாறாட்ட‌த்தில் கொலை செய்ய‌ப்ப‌ட்டு விடுகிறான்.வித்யாவின் வாழ்க்கை அந்த‌ ஓரிர‌வில் த‌லைகீழாக‌ மாறிவிடுகிற‌து.மெல்ல‌ இய‌ல்பு வாழ்க்கைக்கு திரும்ப‌ முற்ப‌டும் போதுதான் பண‌த்தேவை புரிகிற‌து.

க‌ண‌வ‌னின் வ‌ருமான‌ம் நின்று விட்ட‌ சூழ்நிலையில்,தான் ஒரு வேலைக்கு முய‌ற்சி செய்ய‌ க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ம் ஏற்ப‌டுகிற‌து. செல‌வுக‌ளை ச‌மாளிக்க‌ த‌ன் ந‌கைக‌ளை விற்கிறாள், குழ‌ந்தையின் ப‌ள்ளிப் பேருந்தை நிறுத்தி விட்டு,தானே தின‌மும் ந‌ட‌த்தி கூட்டிச் செல்கிறாள்.வாட‌கை கொடுக்க‌ முடியாத‌ நிலையில் வீட்டு ஓன‌ர்க்கு ப‌ய‌ந்து பார்க்குக‌ளில் நேர‌ம் க‌ட‌த்துகிறார்க‌ள் அம்மாவும், குழ‌ந்தையும்.வாட‌கை குடுக்க‌ முடியாம‌ல், இருந்த‌ வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷ‌ன் பிளாட்ஃபார்ம்க்கு மாறுகிறார்க‌ள்.

எதிர்பாராத‌ த‌ருண‌த்தில் வாட‌கை ஆட்டோ ஓட்டும் பிரேம‌னை (ஜெய‌ராம்) ச‌ந்திக்க‌,இவ‌ர்க‌ளின் க‌தையை கேட்ட‌ அவ‌ன், த‌ன் கால‌னிக்கு அழைத்துச் சென்று ப‌க்க‌த்து வீட்டில் த‌ங்க‌ வைக்கிறான்.இத‌ற்கிடையில், வித்யாவின் க‌ண‌வ‌ன் இற‌ந்த‌ பிற‌கு குழ‌ந்தை த‌ங்க‌ளிட‌ம் தான் வ‌ள‌ர‌ வேண்டும் என்று க‌ண‌வ‌ன் வீட்டாரின் மிர‌ட்ட‌ல் வேறு.

வித்யா எப்ப‌டி இந்த‌ நிலையிலிருந்து மீண்டு ஜெயிக்கிறாள் என்ப‌தே மீதி க‌தை.

ம‌ம்தாவுக்கு பாச‌ஞ்ச‌ர் ப‌ட‌த்திற்கு அப்புற‌ம் ப‌ட‌ம் முழுதும் வ‌ரும்ப‌டியாக‌  ஒரு ந‌ல்ல‌ வாய்ப்பு இந்த‌ப் ப‌ட‌ம்.ஜெய‌ராமுக்கு ஹீரோயின் கிடையாது,ச‌ண்டை கிடையாது,ஒரு கேர‌க்ட‌ராக‌ ம‌ட்டும் வ‌ந்து போகிறார்.
இவ‌ர்க‌ள் த‌விர‌ கேபிஏசி ல‌லிதா,ம‌ம்முக்கோயா போன்றோரும் உண்டு.

ராஜாவின் இசையில் பாட‌ல்க‌ள் அட்ட‌காச‌ம்,"ஆரோ" என்று தொட‌ங்கும் முத‌ல் பாட‌ல் சூப்ப‌ரோ சூப்ப‌ர்.

என‌க்குப் பிடித்த‌ காட்சிக‌ள்
இட‌ம் வாங்க‌வே ப‌ணம் இல்லாத‌ போது புரோக்க‌ருட‌ன் வீடு க‌ட்ட‌ இட‌ம் பார்ப்ப‌து,இங்க‌ தான்  பெட்ரூம்,இல்ல‌ இங்க‌ தான் என‌ க‌ண‌வ‌னும், ம‌னைவியும் இல்லாத‌ வீட்டுக்கு ச‌ண்டை போட்டுக் கொள்வ‌து.

கால‌னியில் த‌னித்து வ‌சிக்கும் இன்னொசென்ட், ம‌க‌ன் வீட்டை விட்டு வெளியேற்றிட‌, வ‌ய‌தான‌ கால‌த்திலும் சைக்கிளில் லாட்ட‌ரி விற்றுப் பிழைக்கிறார்,இவ‌ர‌து ம‌னைவி வேறோரிட‌த்தில் வேலை செய்கிறார்.எல்லாத்தையும் உள்ளுக்குள் சுருட்டி வைத்து விட்டு,வெளியே ம‌கிழ்ச்சியாக‌ அலைகிறார் இன்னொசென்ட்.ம‌னுஷ‌ன் திரையில் வ‌ந்தாலே தியேட்ட‌ரில் விசில் ப‌ற‌க்கிற‌து.

தின‌ம் ஒரு யூனிஃபார்ம்,தின‌ம் ஒரு க‌ட்சிக் கொடி என‌ எல்லா க‌ட்சி பொதுக்கூட்ட‌ங்க‌ளுக்கும் ஆ‌ள் ச‌ப்ளை செய்ப‌வ‌ராக‌ ம‌ம்முக்கோயா.250 ரூபாய்,ஒரு குவார்ட்ட‌ர்,ஒரு பிரியாணி பொட்ட‌ல‌ம் இது தான் கேர‌ளா முழுக்க‌ ஸ்டாண்ட‌ர்டு ரேட்,அதுக்கு மேல‌ குடுக்க‌ முடியாதுன்னு சொல்லும் காட்சி.

ரியாலிட்டி ஷோவில் பைய‌ன் "எலிமினேட்" ஆகிய‌த‌ற்க்காக‌,தெருவே அந்த‌ வீட்டில் கூடி ஏதோ எழ‌வு வீடு மாதிரி சோக‌மாக‌ உட்கார்ந்திருப்ப‌து.

"பொண்ணுங்க‌ன்னா என் பொண்ணு மாதிரி இருக்க‌ணும்,தேவையில்லாம‌ வெளியே எங்கேயும் போக மாட்டா,கோயிலுக்கு போற‌தோட‌ ச‌ரி" இப்ப‌டி அடிக்க‌டி சொல்லிக் கொண்டிருக்கும் கேபிஏசி ல‌லிதாவின் ம‌க‌ள் கோயில் பூசாரியோடு ஓடிப் போவ‌து.

வ‌ழ‌க்க‌மான‌ ச‌த்ய‌ன் அந்திக்காடு ப‌ட‌ம்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 2:23 PM 5 comments
Labels: சினிமா, ம‌லையாளம்
Widget by Abu-farhan
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ▼  ஜூலை (10)
      • ப‌ட்டப்பெய‌ர்
      • ஊர்க்காசு
      • க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌
      • சின்ன‌ சைக்கிள்
      • "அம்மா"ச்சி
      • ச்சும்மா
      • ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்
      • முர‌ண்
      • ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)
      • க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio