திங்கள், 21 பிப்ரவரி, 2011
சனி, 4 செப்டம்பர், 2010
எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே!
அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்! 
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!
இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்
ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரை
Thanks - Vikatan.com
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
வியாழன், 29 ஜூலை, 2010
பட்டப்பெயர்
பொட்டப்புள்ளையா லட்சணமா ஒரு
எடத்துல இருக்கிறியா கழுதன்னு
வஞ்சுகிட்டே மீச தாத்தா எனக்கிட்ட
பெயர் "ஆடுகாலி"
கள்ளனை தொடரும் காப்பான்
போல அது என்னைத் தொடர்ந்தது
நான் விரும்பாவிட்டாலும்
யாருமறியா ஒரு நள்ளிரவில்
என்னை விரும்பியவனோடு
ஊர் விட்ட பொழுதில்
தொடர்தலை நிறுத்தி விட்டது
பத்து வருடங்கள் கழித்து
சொந்த மண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொடர ஆரம்பித்தது
விசாரிக்கையில் தான் தெரிந்தது
அது ஆடுகாலி அல்ல
"ஓடுகாலி" என்று
எடத்துல இருக்கிறியா கழுதன்னு
வஞ்சுகிட்டே மீச தாத்தா எனக்கிட்ட
பெயர் "ஆடுகாலி"
கள்ளனை தொடரும் காப்பான்
போல அது என்னைத் தொடர்ந்தது
நான் விரும்பாவிட்டாலும்
யாருமறியா ஒரு நள்ளிரவில்
என்னை விரும்பியவனோடு
ஊர் விட்ட பொழுதில்
தொடர்தலை நிறுத்தி விட்டது
பத்து வருடங்கள் கழித்து
சொந்த மண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொடர ஆரம்பித்தது
விசாரிக்கையில் தான் தெரிந்தது
அது ஆடுகாலி அல்ல
"ஓடுகாலி" என்று
புதன், 21 ஜூலை, 2010
ஊர்க்காசு
சிறு வயதில்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெளம்பும்
போதெல்லாம்
தாத்தாவுக்கு தெரியாமல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாமல்
மாமாவும்
சட்டைப் பையில் திணிப்பார்கள்
சிலதில் கந்தக வாசனை
சிலதில் வெத்தலை வாசனை
இத்தனை வருடங்கள் கழித்து
என் பையனுக்கும் கிடைக்கிறது
பை நெறைய ஊர்க்காசு
அதே வாசனைகளோடு
இங்கு வருமுன்பு
இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செலவு
பண்ணி அதயும் இதயும்
வாங்குறீங்கன்னு கேட்ட
என் மனைவிக்கு இப்போவாது
புரியுமென நெனைக்கிறேன்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெளம்பும்
போதெல்லாம்
தாத்தாவுக்கு தெரியாமல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாமல்
மாமாவும்
சட்டைப் பையில் திணிப்பார்கள்
சிலதில் கந்தக வாசனை
சிலதில் வெத்தலை வாசனை
இத்தனை வருடங்கள் கழித்து
என் பையனுக்கும் கிடைக்கிறது
பை நெறைய ஊர்க்காசு
அதே வாசனைகளோடு
இங்கு வருமுன்பு
இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செலவு
பண்ணி அதயும் இதயும்
வாங்குறீங்கன்னு கேட்ட
என் மனைவிக்கு இப்போவாது
புரியுமென நெனைக்கிறேன்
செவ்வாய், 20 ஜூலை, 2010
கஃபூர்காஸ் தட்டுக்கட
எப்ப பாத்தாலும் கப்பா,மத்திக்கறி,பரோட்டா,பீஃப் ஃபிரைனு வழக்கமான அயிட்டங்களா சாப்பிட்டு போரடிக்குது.வேற எதாவது ஸ்பெஷல் அயிட்டங்கள் கெடைக்கிற கடைக்கு கூட்டிட்டு போங்கன்னு நான் சொன்னத கேட்டு, சேட்டன் (என் கூட வேலை செய்பவர்) கொண்டு போனது தான் இந்தக் கடை.கேரளால "தட்டுக்கட"ன்னா நம்மூரு கையேந்தி பவன் மாதிரி.கையேந்தி பவனா ஆரம்பிச்சு இப்ப அமீரகத்துல பல இடங்களில் ரெஸ்ட்டாரெண்ட் வச்சிருக்காங்க.பேரக் கேட்டதும் "எங்க நின்னுக்கிட்ட சாப்பிட விட்ருவாங்களோன்னு பயந்துகிட்டே போனேன்.நான் நினைச்ச மாதிரியில்லை,செட்டப் எல்லாம் நல்லாத்தான் இருந்தது.
புட்டுப் பிரியாணி
புட்டு செஞ்சு..அத உதிர்த்து விட்டு,அதுல சிக்கன் கொழம்பு சேர்த்து தோசைக் கல்லில் போட்டு கொத்தி எடுத்தா அது தான் புட்டுப் பிரியாணி.நம்ம கொத்துப் பரோட்டா மாதிரி தான். பாக்குறதுக்கு சிக்கன் உப்புமா மாதிரி இருந்தாலும் பயங்கர டேஸ்ட்.தொட்டுக்கிறதுக்கு ஊறுகாய், தயிர் வெங்காயம் குடுக்குறாங்க.சிக்கன் இல்லாம.. பீஃப் அல்லது மட்டன் சேர்த்தும் கிடைக்கிறது
சிக்கன் 5000
பேரே டெர்ரரா இருக்குல்ல.உண்மையில் இதுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இந்த அயிட்டம் ஆர்டர் பண்ணினால் கொண்டு வரும் போதே கையோட ஒரு கூப்பனும் கொண்டு வர்றாங்க.சாப்பிட்டு பார்த்துட்டு நாம தான் இதுக்கு பேர் வைக்கணும்..நம்ம முகவரி எழுதி கூப்பன அங்க இருக்குற பெட்டியில போட்டுட்டு வந்துரணும்.குலுக்கலில் நம்ம வச்ச பேரு தேர்ந்தெடுக்கப்பட்டால் 5000 திராம்ஸ் பரிசு.(ஸ்ஸ்.. அப்பா எப்படியெல்லாம் விளம்பரம் பண்றானுக..)
ஆர்வக் கோளாறுல வாங்கிப் பார்த்தா வழக்கமான சிக்கன் ஃபிரை மேல கொஞ்சம் தேங்காய் துருவல் தூவி விட்டுருக்கானுக,அவ்ள தான்.
மற்றபடி புட்டு,கடலைக்கறி,கப்பா,மத்திக்கறி,மத்தி ஃபிரை,ஆப்பம்,ஃபீப் ஃபிரை போன்ற வழக்கமான கேரள அயிட்டங்கள் கிடைக்கின்றன.
இங்க சாப்பிடும் போது சேட்டன் சகாவு இந்த மேட்டர சொன்னார்.கேரளாவில் சுவையான உணவுகள் கிடைப்பது கள்ளு ஷாப்புகளில் தானாம்.
இதுக்காகவாது அடுத்த விடுமுறையில் கேரளா செல்ல வேண்டும்!
புட்டுப் பிரியாணி
புட்டு செஞ்சு..அத உதிர்த்து விட்டு,அதுல சிக்கன் கொழம்பு சேர்த்து தோசைக் கல்லில் போட்டு கொத்தி எடுத்தா அது தான் புட்டுப் பிரியாணி.நம்ம கொத்துப் பரோட்டா மாதிரி தான். பாக்குறதுக்கு சிக்கன் உப்புமா மாதிரி இருந்தாலும் பயங்கர டேஸ்ட்.தொட்டுக்கிறதுக்கு ஊறுகாய், தயிர் வெங்காயம் குடுக்குறாங்க.சிக்கன் இல்லாம.. பீஃப் அல்லது மட்டன் சேர்த்தும் கிடைக்கிறது
சிக்கன் 5000
பேரே டெர்ரரா இருக்குல்ல.உண்மையில் இதுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இந்த அயிட்டம் ஆர்டர் பண்ணினால் கொண்டு வரும் போதே கையோட ஒரு கூப்பனும் கொண்டு வர்றாங்க.சாப்பிட்டு பார்த்துட்டு நாம தான் இதுக்கு பேர் வைக்கணும்..நம்ம முகவரி எழுதி கூப்பன அங்க இருக்குற பெட்டியில போட்டுட்டு வந்துரணும்.குலுக்கலில் நம்ம வச்ச பேரு தேர்ந்தெடுக்கப்பட்டால் 5000 திராம்ஸ் பரிசு.(ஸ்ஸ்.. அப்பா எப்படியெல்லாம் விளம்பரம் பண்றானுக..)
ஆர்வக் கோளாறுல வாங்கிப் பார்த்தா வழக்கமான சிக்கன் ஃபிரை மேல கொஞ்சம் தேங்காய் துருவல் தூவி விட்டுருக்கானுக,அவ்ள தான்.
மற்றபடி புட்டு,கடலைக்கறி,கப்பா,மத்திக்கறி,மத்தி ஃபிரை,ஆப்பம்,ஃபீப் ஃபிரை போன்ற வழக்கமான கேரள அயிட்டங்கள் கிடைக்கின்றன.
இங்க சாப்பிடும் போது சேட்டன் சகாவு இந்த மேட்டர சொன்னார்.கேரளாவில் சுவையான உணவுகள் கிடைப்பது கள்ளு ஷாப்புகளில் தானாம்.
இதுக்காகவாது அடுத்த விடுமுறையில் கேரளா செல்ல வேண்டும்!
சனி, 17 ஜூலை, 2010
சின்ன சைக்கிள்
சனிக்கெழம காலங்காத்தாலே
எந்திச்சு கோட்டு வாயக் கூட
கழுவாம மணி சைக்கிள் கடைக்கு
ஓடுவேன் அம்மாகிட்ட
கெஞ்சி வாங்குன ஒத்த ரூபாயோட
அங்கன போய் பாத்தா
எனக்கு முன்னாடியே
ஊளமூக்கன் சைக்கிள
எடுத்துட்டு போயிருப்பான்
களத்து மேடு,கரிசக் காடுன்னு
சுத்தினாலும் அப்பப்போ
மணி அண்ணன் கடையில போய்
மணி பாத்துக்கிடுவேன்
வெள்ளன காட்டுக்கு போய்ட்ட
தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு
போறது,ரேஷன் கடையில போய்
சக்கர வாங்குறது எல்லாம்
இந்த சைக்கிள்ள தான்
தண்ணி குடிக்காம நீச்சல்
பழக முடியாது
முட்டி உடைக்காம சைக்கிள்
பழக முடியாதுன்னு ஊர்ல
சொல்வாங்க
முட்டில அடிபட்டா ரத்தம்
நிக்கிறதுக்கு கரம்ப மண்ணுதான்
மருந்து அப்பவும் சைக்கிள்
நிக்காது
மக்காடு,பெல்லு,பிரேக்
கேரியல் எதுவுமே இல்லாத
ஒரு வாடகை சைக்கிள் தான்
எனக்கு கெடச்சது பழகறதுக்கு
இப்ப எங்கக்கா மகனுக்கு வாங்குன
சைக்கிள்ள எல்லாமே
இருக்கு
ஆனா
ஓட்டிப் பழகத்தான் இடமில்ல
கிச்சனுக்கும் ஹாலுக்கும்
இடைப்பட்ட தூரத்தை தவிர்த்து.
எந்திச்சு கோட்டு வாயக் கூட
கழுவாம மணி சைக்கிள் கடைக்கு
ஓடுவேன் அம்மாகிட்ட
கெஞ்சி வாங்குன ஒத்த ரூபாயோட
அங்கன போய் பாத்தா
எனக்கு முன்னாடியே
ஊளமூக்கன் சைக்கிள
எடுத்துட்டு போயிருப்பான்
ஒரு மணி நேரம் காத்துக்
கெடந்து சைக்கிள் கைக்கு
கெடந்து சைக்கிள் கைக்கு
வந்ததும் சந்தோசம்
பிளேனே கெடச்ச மாதிரி
வண்டிப்பாத,கம்மாக்கரைபிளேனே கெடச்ச மாதிரி
களத்து மேடு,கரிசக் காடுன்னு
சுத்தினாலும் அப்பப்போ
மணி அண்ணன் கடையில போய்
மணி பாத்துக்கிடுவேன்
வெள்ளன காட்டுக்கு போய்ட்ட
தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு
போறது,ரேஷன் கடையில போய்
சக்கர வாங்குறது எல்லாம்
இந்த சைக்கிள்ள தான்
தண்ணி குடிக்காம நீச்சல்
பழக முடியாது
முட்டி உடைக்காம சைக்கிள்
பழக முடியாதுன்னு ஊர்ல
சொல்வாங்க
முட்டில அடிபட்டா ரத்தம்
நிக்கிறதுக்கு கரம்ப மண்ணுதான்
மருந்து அப்பவும் சைக்கிள்
நிக்காது
மக்காடு,பெல்லு,பிரேக்
கேரியல் எதுவுமே இல்லாத
ஒரு வாடகை சைக்கிள் தான்
எனக்கு கெடச்சது பழகறதுக்கு
இப்ப எங்கக்கா மகனுக்கு வாங்குன
சைக்கிள்ள எல்லாமே
இருக்கு
ஆனா
ஓட்டிப் பழகத்தான் இடமில்ல
கிச்சனுக்கும் ஹாலுக்கும்
இடைப்பட்ட தூரத்தை தவிர்த்து.
புதன், 14 ஜூலை, 2010
"அம்மா"ச்சி
ராச்சாப்பாடு முடித்தவுடன்
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்தலையை நீவிக் கொண்டே
மெல்ல ஆரம்பிக்கும் ஆச்சி
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்தலையை நீவிக் கொண்டே
மெல்ல ஆரம்பிக்கும் ஆச்சி
"உங்கம்மாவை நெனைச்சுப்பியா ராசா"
என் மொறப்ப கண்டதும்
அதுக்கில்லப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்தவதான் ஆனா
ஒரு புள்ளயக் கூட
அவ வளத்த மாதிரி
வளக்கலப்பா
தரையில விட சம்மதிக்க
மாட்டப்பா ஒன்னைய
தூக்கி சொமந்திருப்பாளே
கொஞ்சமா நஞ்சமா
என் மொறப்ப கண்டதும்
அதுக்கில்லப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்தவதான் ஆனா
ஒரு புள்ளயக் கூட
அவ வளத்த மாதிரி
வளக்கலப்பா
தரையில விட சம்மதிக்க
மாட்டப்பா ஒன்னைய
தூக்கி சொமந்திருப்பாளே
கொஞ்சமா நஞ்சமா
ஒரு நாளலெல்லாம் ஒனக்கு
மேலுக்குச் சரியில்லை
நொச்சு நொச்சுனு ஒரே அழுகை
அன்னிக்கி ஒரு பொட்டுத்
தூக்கமில்லை புள்ளைக்கு
ராத்திரி பூரா தோள்ல போட்டு
நடந்துகிட்டே இருந்தாப்பா
பெரியாச்சி வீட்டப் பாத்து
கையக் காட்டி அழுவ
தூக்கிட்டு ஒடுவா அந்த
ராத்திரில
அங்க போய் செத்த நேரம்
ஆனதும் இங்க பாத்து
கையக் காட்டுவ
மறுக்கா இங்க தூக்கிட்டு
வருவா
ஏலேன்னு கூப்பிட
மாட்டாப்பா ஒன்னைய
தம்பி தம்பின்னுதான்
உருகுவா
ஒரு தரம் ஒன் மாமன்காரன்
"ஏலேன்னு" கூப்பிட்டதுக்கு
என்ன சண்டை போட்டா
தெரியுமா?
என் வெத்தலைப் பைய
நீ ஒளிச்சு வக்கிறதப் பாத்து
வாய் கொள்ளாம சிரிப்பா
அவ சாகும் போது
ஒனக்கு அஞ்சு வயசு
இந்த திண்ணையில தாம்பா
வச்சிருந்தோம்
ம்ம்...இன்னிக்கு இருந்தாளா
மகராசி ஒன்னையப் பாக்க
மகுந்து போயிருப்பா மகுந்து....
என்ன செய்யறது
அவ தலையெழுத்து அப்படி.....
தன் மகளைப் பற்றி எத்தனை
முறை சொன்னாலும்
அலுத்ததில்லை ஆச்சிக்கு
எங்கம்மாவைப் பற்றி கேட்க
எனக்கும்......
திங்கள், 12 ஜூலை, 2010
ச்சும்மா
வெளிநாட்டுப் பதிவர்கள் ஏதேனும் விவாதத்தில் கருத்துச் சொன்னால்.. ஆரோக்கியமாக எதிர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும். அதை விடுத்து ஏசி அறையில் இருந்து கொண்டு பேச வேண்டாம் எனக் கூறுவது என்ன நியாயம் எனத் தெரியவில்லை.
தகவலுக்காக
தகவலுக்காக
(circular from Bupa Middle East (Medical Insurance Company), indicating that the temperature in the major cities of the Kingdom will be rising in coming weeks, i.e. Jeddah may reach 52 C, Alkhobar / Dammam may reach 55 C & Riyadh unbelievable 59 C. )
ஐயாமார்களே..அம்மாமார்களே ஏசி என்பது நம்ம ஊரில் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருக்கலாம்..இங்க அப்படியல்ல.பெரிய சூப்பர் மார்க்கெட் முதல் சாதாரண மளிகை கடை வரை.. இவ்வளவு ஏன் சலூன் கடைகளில் கூட ஏசி கட்டாயமிருக்கும் இங்குள்ள வெப்பத்தைச் சமாளிக்க.ஏசி ரூமில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள்.. அவர்களுக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சினையில் கருத்துச் சொல்ல உரிமையில்லை என நினைப்பவர்களுக்கு....பெரிய கம்பெனிகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களில் இருந்து..மளிகை கடை,சின்ன ஹோட்டல்கள், சலூன் கடைகளில் வேலை செய்பவர்கள் வரை எல்லாரும் ஏசியில் தான் இருக்கிறார்கள்.பெரும்பாலனோர் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான்.பொழப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறோம் அவ்வளவே.
இனியாவது வெளிநாட்டுப் பதிவர்கள் சொல்வதில் உடன்பாடில்லை எனில் விவாதம் செய்யுங்கள்...ஏசி யை இழுக்காமல்...
ஐயாமார்களே..அம்மாமார்களே ஏசி என்பது நம்ம ஊரில் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருக்கலாம்..இங்க அப்படியல்ல.பெரிய சூப்பர் மார்க்கெட் முதல் சாதாரண மளிகை கடை வரை.. இவ்வளவு ஏன் சலூன் கடைகளில் கூட ஏசி கட்டாயமிருக்கும் இங்குள்ள வெப்பத்தைச் சமாளிக்க.ஏசி ரூமில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள்.. அவர்களுக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சினையில் கருத்துச் சொல்ல உரிமையில்லை என நினைப்பவர்களுக்கு....பெரிய கம்பெனிகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களில் இருந்து..மளிகை கடை,சின்ன ஹோட்டல்கள், சலூன் கடைகளில் வேலை செய்பவர்கள் வரை எல்லாரும் ஏசியில் தான் இருக்கிறார்கள்.பெரும்பாலனோர் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான்.பொழப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறோம் அவ்வளவே.
இனியாவது வெளிநாட்டுப் பதிவர்கள் சொல்வதில் உடன்பாடில்லை எனில் விவாதம் செய்யுங்கள்...ஏசி யை இழுக்காமல்...
******************************************************
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும்.."நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சி நான் விரும்பி பார்க்கும் ஒன்று.இனிமையான குரல்களில் மறக்க முடியாத பழைய பாடல்களைப் பாடுகிறார்கள்.பாடல் மற்றும் படம் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமாக உள்ளது.உதாரணம்.. "அத்தை மடி மெத்தையடி" பாடல் இடம் பெற்ற கற்பகம் படத்தில் தான் கே ஆர் விஜயா அறிமுகமானார்..மேலும் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் புகழ் பெற்ற கற்பகம் ஸ்டுடியோ உருவானது.பாடல் பற்றிய பிரபலங்களின் கருத்துக்களும் சுவையாக உள்ளது.
"சிங்கார வேலனே" கேட்கும் போது ஜானகி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வருவதை தவிர்க்க முடியவில்லை.
"சிங்கார வேலனே" கேட்கும் போது ஜானகி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வருவதை தவிர்க்க முடியவில்லை.
****************************************
உலகக் கோப்பையை ஸ்பெயின் வென்று விட்டது.. ஆக்டோபஸ்ஸின் கணிப்பும் கூட வென்று விட்டது.நேற்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவுதான்.ஏகப்பட்ட மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.ஐந்து கோல் அடித்ததோடு..மூன்று கோல்கள் அடிக்க உறுதுணையாயிருந்த ஜெர்மனியின் தாமஸ் முல்லருக்கு தங்க காலணி விருது கிடைத்தது.
******************************************
2050 இல் இந்தியாவின் ஜனத்தொகை 200 கோடியாக இருக்கும்..இது அப்போதைய சீனாவை விட அதிகம்.(தகவல் உபயம் ஏசியாநெட் ரேடியோ)நம்முடைய பெரு நகரங்களின் நிலைமைய நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.வயல்வெளிகள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி வருகிறது..இன்னொரு பிரச்சினை தண்ணீர்ப் பஞ்சம்.அதற்குள்ளாக பசித்தால் ஒரு மாத்திரை,தாகம் எடுத்தால் ஒரு மாத்திரை என மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
**********************************************
பிடித்த பஞ்ச் டயலாக்
குஜராத் மக்களுக்கு மின்வெட்டு என்றால் என்னவென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது.
குஜராத் மக்களுக்கு மின்வெட்டு என்றால் என்னவென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது.
நரேந்திர மோடி
குஜராத் முதல்வர்.
***********************************************
சனி, 10 ஜூலை, 2010
பதிவுலக சண்டை - தலைவர்கள் வேண்டுகோள்
பதிவர்களுக்குள் நடைபெறும் புனைவு,எதிர் புனைவு,சவால்,எதிர் சவால்கள்,சண்டை சச்சரவுகளைக் கேள்விப்பட்டு நம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்.
கலைஞர்
கலைஞர்
தனி மனித தாக்குதல் திராவிட நாகரிகமல்ல(குல்லுக பட்டர்,அண்டங்காக்கை எல்லாம் ஞாபகம் வந்தால் கழகம் பொறுப்பல்ல).பிணக்குகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.வலைப்பதிவாளர்கள் அடிக்கடி தங்களுக்குள் பாராட்டு விழாக்கள் நடத்திக் கொள்ள வேண்டும்,இதன் மூலம் பிரச்சினைகளை வளர விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.வேண்டிய உதவிகளை ஜெகத்திடம் செய்யச் சொல்லியிருக்கிறேன். வலைப்பதிவாளர்களையும் ஒரு குடும்பமாகக் கருதி நானும் கலந்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.இதன் பிறகும் சண்டை,சச்சரவுகள் தொடர்ந்தால் நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
ஜெயலலிதா
அடுத்து தமிழகத்தில் அமையப் போவது கழக ஆட்சிதான்.தற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வந்ததும் உங்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவேன் என உறுதியளிக்கிறேன்.இதனை மீறி யாரேனும் சண்டையில் ஈடுபட்டால் நமது எம்ஜிஆரில் உங்கள் வலைப்பதிவு பெயர் வெளியிடப் படும்.
வைகோ
வலைப்பதிவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த சச்சரவுகளை தீர்க்கும் பொருட்டு எனது தலைமையில், கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் ஆறு மாத கால "மறுமலர்ச்சி" நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர் அனைவரும் நடைபயணத்தில் கலந்து கொண்டால்,ஆறு மாத காலத்திற்கு பதிவு எழுத யாருமேயில்லாமல் சண்டை தானாகவே நின்று விடும் என்பதை கருத்தில் கொண்டே இந்த பயணம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க்குடிதாங்கி
வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட அணியில் நின்று, தொடர்ந்து வாதாடுவாதலேயே சண்டை தொடர்கிறது எனக் கருதுகிறேன்.மாறாக பதிவர்கள் வாரமொருமுறை அணி மாறி வாதாடினால் சண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொடர்ந்தால் காடுவெட்டி குரு களம் இறக்கி விடப்படுவார் என நினைவு படுத்த விரும்புகிறேன்.
இம்சை அரசன்
ஜெயலலிதா
அடுத்து தமிழகத்தில் அமையப் போவது கழக ஆட்சிதான்.தற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வந்ததும் உங்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவேன் என உறுதியளிக்கிறேன்.இதனை மீறி யாரேனும் சண்டையில் ஈடுபட்டால் நமது எம்ஜிஆரில் உங்கள் வலைப்பதிவு பெயர் வெளியிடப் படும்.
வைகோ
வலைப்பதிவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த சச்சரவுகளை தீர்க்கும் பொருட்டு எனது தலைமையில், கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் ஆறு மாத கால "மறுமலர்ச்சி" நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர் அனைவரும் நடைபயணத்தில் கலந்து கொண்டால்,ஆறு மாத காலத்திற்கு பதிவு எழுத யாருமேயில்லாமல் சண்டை தானாகவே நின்று விடும் என்பதை கருத்தில் கொண்டே இந்த பயணம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க்குடிதாங்கி
வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட அணியில் நின்று, தொடர்ந்து வாதாடுவாதலேயே சண்டை தொடர்கிறது எனக் கருதுகிறேன்.மாறாக பதிவர்கள் வாரமொருமுறை அணி மாறி வாதாடினால் சண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொடர்ந்தால் காடுவெட்டி குரு களம் இறக்கி விடப்படுவார் என நினைவு படுத்த விரும்புகிறேன்.
இம்சை அரசன்
மதம்,சாதி,அரசியல்,புனைவு என தனித்தனியாக வலைபதிவுகள் தொடங்கப்படும். சண்டை போட விரும்புவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வலைபதிவுகளில் சென்று சண்டையிட்டுக் கொல்ல(ள்ள)லாம்.சிறந்த மதச்சண்டை பதிவர்,சிறந்த அரசியல் ச்ண்டைப் பதிவர்,சிறந்த புனைவுப் பதிவர் போன்ற விருதுகள் உருவாக்கப்பட்டு, விருது பெறுபவர்களுக்குப் பரிசாக அக்காமாலா மற்றும் கப்சியில் ஊறப்போட்ட பாம்புச்சட்டை,முயல் போன்றவை வழங்கப்படும்.
பொறுப்பி : முன் ஜாமீன் மாதிரி,முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் சண்டைக்கு வந்துராதீங்க சாமிகளா!!!
பொறுப்பி : முன் ஜாமீன் மாதிரி,முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் சண்டைக்கு வந்துராதீங்க சாமிகளா!!!
வியாழன், 8 ஜூலை, 2010
முரண்
உதட்டுச்சுழிப்பு
செல்லக்குட்டு
ஊதாத் தாவணி
தி(இ)ருட்டு முத்தம்
தினமும்
செல்லக்குட்டு
ஊதாத் தாவணி
தி(இ)ருட்டு முத்தம்
தினமும்
மறக்காமல் இருக்கனும் என
நினைப்பவைகளையெல்லாம்
நினைக்காமல் மறந்து விடுகிறேன்.
திருமணம்
நினைக்காமல் மறந்து விடுகிறேன்.
திருமணம்
சாராயக்கடை
அறிவுரைகள்
இடமாற்றம்
தினமும்
இடமாற்றம்
தினமும்
நினைக்காமல் இருக்கனும் என
நினைப்பவைகளையெல்லாம்
மறக்காமல் நினைத்து விடுகிறேன்.
மறக்காமல் நினைத்து விடுகிறேன்.
புதன், 7 ஜூலை, 2010
பச்ச.. மஞ்ச.. சிவப்பு...(பொனைவு)
ஹய் டாடி வந்தாச்சு
என்னங்க இவ்ளோ லேட்? சிக்ஸ் ஓ கிளாக்கே கெளம்புரேன்னு கால் பண்ணீங்க
பைக்க சர்வீஸ் விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வந்தேம்மா அதான் லேட்
என்ன பாப்பா இன்னிக்கு டீயூசன் இல்லையா??
இல்ல டாடி.. எங்க மிஸ் வீட்ல ஒரு பங்ஷன்
ஹோம் வொர்க் பண்ண வைக்கிற பொறுப்பு என் தலைல ஹய்யோ எவளோ இருக்குதுங்க? இங்கிலிஷ் ,ஹிந்தி முடிஞ்சது, இன்னும் கொஞ்சம் ரைம்ஸ் சொல்ல வைக்கனும் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு பாப்பாவுக்கு
ஓகே நான் கொஞ்சம் பிரஷ் ஆயிட்டு வாரேன் காபி எடுத்து வையேன்
.
.
.
.
அந்த டிவியை கொஞ்சம் ஆன் பண்ணேன்,நீயூஸ் பார்க்கலாம்
என்னங்க போன் பில் கட்னீங்களா??
லேண்ட் லைன் பில் என் செல் பில் ரெண்டுமே கட்டியாச்சு
அப்புறம் ஹவுஸ் ஓனர் வந்திருந்தாருங்க..நாம இங்க வந்து டூ இயர்ஸ் கம்ப்ளீட் ஆயிருச்சுல்ல? நெக்ஸ்ட் மன்த்ல இருந்து ரென்ட் தவுசண்ட் ரூபிஸ் அதிகம் வேணுமாம்..
இது வேறயா ?? ரென்ட் கம்மியா இருந்தாலும் வாட்டர்,கரண்ட்,மெயின்டெனண்ஸ்னு தனித் தனியா புடுங்குறாங்கள்ள...சீக்கிரம் வேற ஹவுஸ் பாக்கணும்...ஓகே அது கெடக்கட்டும் இன்னிக்கு என்ன டிபன்மா??
பாப்பாவுக்கு எக் ரைஸ் வேணுமாம்,அதனால எல்லாருக்கும் ரைஸ்தான்.இன்னிக்கு டிபன் இல்ல..நான் போய் குக்கர் வைக்குறேன்.உங்களுக்கு வேணா உருளைக் கிழங்கு ஃபிரை பண்ணவா??
ம் பண்ணு.. எனக்கு கொஞ்சம் சிஸ்டத்துல ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வர்றேன்
அய்யோ நீங்க சிஸ்டத்துல உக்காந்தா எந்திக்கவே மாட்டீங்களே??
ஏ இல்ல ஜஸ்ட் ஒரு ஹாப் அன் ஹவர் தான்.அது இப்ப தமிழ் சீசன் இல்லியா?எல்லாரும் ப்யூர் தமிழ் போஸ்ட் போட்டு ஹிட்ஸ் அள்றாங்க,இன்னிக்கு எனக்கு ஒரு ஐடியா கெடைச்சது நானும் ட்ரை பண்றேன்.நீ ரைஸ் ரெடி பண்றதுக்குள்ள முடிச்சுருவேன்..
என்னவோ பண்ணுங்க
நம் தாய்மொழியை வளர்க்க,அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல,அனைவரும் "நம் வீடுகளில் தமிழை மட்டும் பயன்படுத்துவோம்" என உறுதி கொள்ள வேணும்.......தட்டச்சு செய்ய ஆரம்பித்தார் நம்ம பச்ச,மஞ்ச,சிவப்பு, கருப்பு, ரோஸ்,பிங்க் தமிழ்ப் பதிவர்.
என்னங்க இவ்ளோ லேட்? சிக்ஸ் ஓ கிளாக்கே கெளம்புரேன்னு கால் பண்ணீங்க
பைக்க சர்வீஸ் விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வந்தேம்மா அதான் லேட்
என்ன பாப்பா இன்னிக்கு டீயூசன் இல்லையா??
இல்ல டாடி.. எங்க மிஸ் வீட்ல ஒரு பங்ஷன்
ஹோம் வொர்க் பண்ண வைக்கிற பொறுப்பு என் தலைல ஹய்யோ எவளோ இருக்குதுங்க? இங்கிலிஷ் ,ஹிந்தி முடிஞ்சது, இன்னும் கொஞ்சம் ரைம்ஸ் சொல்ல வைக்கனும் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு பாப்பாவுக்கு
ஓகே நான் கொஞ்சம் பிரஷ் ஆயிட்டு வாரேன் காபி எடுத்து வையேன்
.
.
.
.
அந்த டிவியை கொஞ்சம் ஆன் பண்ணேன்,நீயூஸ் பார்க்கலாம்
என்னங்க போன் பில் கட்னீங்களா??
லேண்ட் லைன் பில் என் செல் பில் ரெண்டுமே கட்டியாச்சு
அப்புறம் ஹவுஸ் ஓனர் வந்திருந்தாருங்க..நாம இங்க வந்து டூ இயர்ஸ் கம்ப்ளீட் ஆயிருச்சுல்ல? நெக்ஸ்ட் மன்த்ல இருந்து ரென்ட் தவுசண்ட் ரூபிஸ் அதிகம் வேணுமாம்..
இது வேறயா ?? ரென்ட் கம்மியா இருந்தாலும் வாட்டர்,கரண்ட்,மெயின்டெனண்ஸ்னு தனித் தனியா புடுங்குறாங்கள்ள...சீக்கிரம் வேற ஹவுஸ் பாக்கணும்...ஓகே அது கெடக்கட்டும் இன்னிக்கு என்ன டிபன்மா??
பாப்பாவுக்கு எக் ரைஸ் வேணுமாம்,அதனால எல்லாருக்கும் ரைஸ்தான்.இன்னிக்கு டிபன் இல்ல..நான் போய் குக்கர் வைக்குறேன்.உங்களுக்கு வேணா உருளைக் கிழங்கு ஃபிரை பண்ணவா??
ம் பண்ணு.. எனக்கு கொஞ்சம் சிஸ்டத்துல ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வர்றேன்
அய்யோ நீங்க சிஸ்டத்துல உக்காந்தா எந்திக்கவே மாட்டீங்களே??
ஏ இல்ல ஜஸ்ட் ஒரு ஹாப் அன் ஹவர் தான்.அது இப்ப தமிழ் சீசன் இல்லியா?எல்லாரும் ப்யூர் தமிழ் போஸ்ட் போட்டு ஹிட்ஸ் அள்றாங்க,இன்னிக்கு எனக்கு ஒரு ஐடியா கெடைச்சது நானும் ட்ரை பண்றேன்.நீ ரைஸ் ரெடி பண்றதுக்குள்ள முடிச்சுருவேன்..
என்னவோ பண்ணுங்க
நம் தாய்மொழியை வளர்க்க,அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல,அனைவரும் "நம் வீடுகளில் தமிழை மட்டும் பயன்படுத்துவோம்" என உறுதி கொள்ள வேணும்.......தட்டச்சு செய்ய ஆரம்பித்தார் நம்ம பச்ச,மஞ்ச,சிவப்பு, கருப்பு, ரோஸ்,பிங்க் தமிழ்ப் பதிவர்.
செவ்வாய், 6 ஜூலை, 2010
கத துடருன்னு (மலையாளம்)
இரு வீட்டின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து, ஒரு குழந்தையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது தீடிரென கணவன் இந்த உலகத்தை விட்டே போய் விட்டால்?
அதுவும் அந்த பெண் முழுக்க முழுக்க கணவனின் சம்பாத்தியத்தை மட்டும் சார்ந்து வாழும் சூழ்நிலையில்???
இப்படித்தான் ஆரம்பிக்கிறது சத்யன் அந்திக்காடு இயக்கிய "கத துடருன்னு" படம். குடும்பக் கதைகளை கொஞ்சம் காமெடி கலந்து சொல்வது இவரது பாணி.இதுவும் அப்படியே.
வித்யா (மம்தா மோகன்தாஸ்),ஷநாவாஸ்(ஆசிப் அலி) இருவரும் காதல் திருமணம் புரிந்து தனியே வாழ்பவர்கள்.அவர்களுக்கு ஒரே மகள் லயா.வித்யா தன் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஷநாவாஸை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவள்.ஒர் மழைக்கால இரவில் மகள் ஆசைப்பட்ட மாம்பழம் வாங்க சென்ற ஷநாவாஸ்,ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டு விடுகிறான்.வித்யாவின் வாழ்க்கை அந்த ஓரிரவில் தலைகீழாக மாறிவிடுகிறது.மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முற்படும் போதுதான் பணத்தேவை புரிகிறது.
கணவனின் வருமானம் நின்று விட்ட சூழ்நிலையில்,தான் ஒரு வேலைக்கு முயற்சி செய்ய கசப்பான அனுபவம் ஏற்படுகிறது. செலவுகளை சமாளிக்க தன் நகைகளை விற்கிறாள், குழந்தையின் பள்ளிப் பேருந்தை நிறுத்தி விட்டு,தானே தினமும் நடத்தி கூட்டிச் செல்கிறாள்.வாடகை கொடுக்க முடியாத நிலையில் வீட்டு ஓனர்க்கு பயந்து பார்க்குகளில் நேரம் கடத்துகிறார்கள் அம்மாவும், குழந்தையும்.வாடகை குடுக்க முடியாமல், இருந்த வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்ம்க்கு மாறுகிறார்கள்.
எதிர்பாராத தருணத்தில் வாடகை ஆட்டோ ஓட்டும் பிரேமனை (ஜெயராம்) சந்திக்க,இவர்களின் கதையை கேட்ட அவன், தன் காலனிக்கு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டில் தங்க வைக்கிறான்.இதற்கிடையில், வித்யாவின் கணவன் இறந்த பிறகு குழந்தை தங்களிடம் தான் வளர வேண்டும் என்று கணவன் வீட்டாரின் மிரட்டல் வேறு.
வித்யா எப்படி இந்த நிலையிலிருந்து மீண்டு ஜெயிக்கிறாள் என்பதே மீதி கதை.
மம்தாவுக்கு பாசஞ்சர் படத்திற்கு அப்புறம் படம் முழுதும் வரும்படியாக ஒரு நல்ல வாய்ப்பு இந்தப் படம்.ஜெயராமுக்கு ஹீரோயின் கிடையாது,சண்டை கிடையாது,ஒரு கேரக்டராக மட்டும் வந்து போகிறார்.
இப்படித்தான் ஆரம்பிக்கிறது சத்யன் அந்திக்காடு இயக்கிய "கத துடருன்னு" படம். குடும்பக் கதைகளை கொஞ்சம் காமெடி கலந்து சொல்வது இவரது பாணி.இதுவும் அப்படியே.
வித்யா (மம்தா மோகன்தாஸ்),ஷநாவாஸ்(ஆசிப் அலி) இருவரும் காதல் திருமணம் புரிந்து தனியே வாழ்பவர்கள்.அவர்களுக்கு ஒரே மகள் லயா.வித்யா தன் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஷநாவாஸை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவள்.ஒர் மழைக்கால இரவில் மகள் ஆசைப்பட்ட மாம்பழம் வாங்க சென்ற ஷநாவாஸ்,ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டு விடுகிறான்.வித்யாவின் வாழ்க்கை அந்த ஓரிரவில் தலைகீழாக மாறிவிடுகிறது.மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முற்படும் போதுதான் பணத்தேவை புரிகிறது.
கணவனின் வருமானம் நின்று விட்ட சூழ்நிலையில்,தான் ஒரு வேலைக்கு முயற்சி செய்ய கசப்பான அனுபவம் ஏற்படுகிறது. செலவுகளை சமாளிக்க தன் நகைகளை விற்கிறாள், குழந்தையின் பள்ளிப் பேருந்தை நிறுத்தி விட்டு,தானே தினமும் நடத்தி கூட்டிச் செல்கிறாள்.வாடகை கொடுக்க முடியாத நிலையில் வீட்டு ஓனர்க்கு பயந்து பார்க்குகளில் நேரம் கடத்துகிறார்கள் அம்மாவும், குழந்தையும்.வாடகை குடுக்க முடியாமல், இருந்த வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்ம்க்கு மாறுகிறார்கள்.
எதிர்பாராத தருணத்தில் வாடகை ஆட்டோ ஓட்டும் பிரேமனை (ஜெயராம்) சந்திக்க,இவர்களின் கதையை கேட்ட அவன், தன் காலனிக்கு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டில் தங்க வைக்கிறான்.இதற்கிடையில், வித்யாவின் கணவன் இறந்த பிறகு குழந்தை தங்களிடம் தான் வளர வேண்டும் என்று கணவன் வீட்டாரின் மிரட்டல் வேறு.
வித்யா எப்படி இந்த நிலையிலிருந்து மீண்டு ஜெயிக்கிறாள் என்பதே மீதி கதை.
மம்தாவுக்கு பாசஞ்சர் படத்திற்கு அப்புறம் படம் முழுதும் வரும்படியாக ஒரு நல்ல வாய்ப்பு இந்தப் படம்.ஜெயராமுக்கு ஹீரோயின் கிடையாது,சண்டை கிடையாது,ஒரு கேரக்டராக மட்டும் வந்து போகிறார்.
இவர்கள் தவிர கேபிஏசி லலிதா,மம்முக்கோயா போன்றோரும் உண்டு.
ராஜாவின் இசையில் பாடல்கள் அட்டகாசம்,"ஆரோ" என்று தொடங்கும் முதல் பாடல் சூப்பரோ சூப்பர்.
எனக்குப் பிடித்த காட்சிகள்
இடம் வாங்கவே பணம் இல்லாத போது புரோக்கருடன் வீடு கட்ட இடம் பார்ப்பது,இங்க தான் பெட்ரூம்,இல்ல இங்க தான் என கணவனும், மனைவியும் இல்லாத வீட்டுக்கு சண்டை போட்டுக் கொள்வது.
காலனியில் தனித்து வசிக்கும் இன்னொசென்ட், மகன் வீட்டை விட்டு வெளியேற்றிட, வயதான காலத்திலும் சைக்கிளில் லாட்டரி விற்றுப் பிழைக்கிறார்,இவரது மனைவி வேறோரிடத்தில் வேலை செய்கிறார்.எல்லாத்தையும் உள்ளுக்குள் சுருட்டி வைத்து விட்டு,வெளியே மகிழ்ச்சியாக அலைகிறார் இன்னொசென்ட்.மனுஷன் திரையில் வந்தாலே தியேட்டரில் விசில் பறக்கிறது.
தினம் ஒரு யூனிஃபார்ம்,தினம் ஒரு கட்சிக் கொடி என எல்லா கட்சி பொதுக்கூட்டங்களுக்கும் ஆள் சப்ளை செய்பவராக மம்முக்கோயா.250 ரூபாய்,ஒரு குவார்ட்டர்,ஒரு பிரியாணி பொட்டலம் இது தான் கேரளா முழுக்க ஸ்டாண்டர்டு ரேட்,அதுக்கு மேல குடுக்க முடியாதுன்னு சொல்லும் காட்சி.
ரியாலிட்டி ஷோவில் பையன் "எலிமினேட்" ஆகியதற்க்காக,தெருவே அந்த வீட்டில் கூடி ஏதோ எழவு வீடு மாதிரி சோகமாக உட்கார்ந்திருப்பது.
"பொண்ணுங்கன்னா என் பொண்ணு மாதிரி இருக்கணும்,தேவையில்லாம வெளியே எங்கேயும் போக மாட்டா,கோயிலுக்கு போறதோட சரி" இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் கேபிஏசி லலிதாவின் மகள் கோயில் பூசாரியோடு ஓடிப் போவது.
வழக்கமான சத்யன் அந்திக்காடு படம்.
செவ்வாய், 29 ஜூன், 2010
புதன், 23 ஜூன், 2010
செம்மொழி மாநாட்டின் பயன்கள் - 28 சூன் 2010
கோவையில் இன்று 23-06-2010 முதல் 27-06-2010 வரை நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்படும் பயன் என்ன?மக்களின் வரிப் பணம் தான் வீணாகிறது என்று சில பதிவர்கள் இடுகை போட்டுள்ளார்கள். 27ந் தேதி மாநாடு முடிவடைகிறது,28 ந் தேதி நடக்கப் போகும் அதிசயங்கள் குறித்து அரசு வெளியிடப் போகும் அறிக்கை இதோ......
செம்மொழி மாநாட்டால் விளைந்த நன்மைகள்
செம்மொழி மாநாட்டால் விளைந்த நன்மைகள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 149 அடியாக உயர்த்திக் கொள்ள கேரள அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.அதற்கான கடிதத்தை கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன் நேற்று முதல்வரை சந்தித்து வழங்கினார்.
வருடா வருடம் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் சரியாக கொடுக்கப்படும்,இனி எந்த சூழ்நிலையிலும்,மழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற மாட்டோம் என
வருடா வருடம் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் சரியாக கொடுக்கப்படும்,இனி எந்த சூழ்நிலையிலும்,மழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற மாட்டோம் என
கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டு விட்டதால் இனி விவசாயிகள் முப்போகம் விளைவிக்கலாம்.அதற்கு தேவையான உரங்களை அழகிரி வீட்டின் பின்புறம் உள்ள உரக்கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்,மேலும் அதற்காகும் போக்குவரதது செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்,இனி இலங்கை கடல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ளலாம்,அதோடு மட்டுமில்லாமல் பிடித்த மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம்.அதற்கு தேவையான அரிசி,எண்ணெய்,மசாலா சாமன்களை தந்து உதவ இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடை பெற்று வந்த மின் திட்டப் பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்து விட்டது,ஆகவே இனி தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று முதல்வரை சந்தித்து இனிமேல் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்லாருக்கும் இல்வசக் கல்வி அளிக்கப் போவதாக "துண்டைப் போட்டு தாண்டி" உறுதியளித்துள்ளனர்.இனி அமைச்சரின் பிள்ளைகளும்,ஆண்டியின் பிள்ளைகளும் அருகருகே அமர்ந்து கல்வி பயிலலாம்.
பொது விநியோக கடைகளில் வழங்கப்பட்டு வந்த 1 ரூபாய் அரிசி,இன்று முதல் தரம் உயர்த்தப் பட்டு "பாசுமதி" அரிசி வழங்கப்படும்.மேலும் பருப்பு,காய்கறிகள்,என்ணெய்,மசாலாப் பொருட்கள் முதல் தாளிக்க தேவையான கடுகு,கறிவேப்பிலை வரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வழங்கப்படும்.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அறவே நீக்கப்பட்டு விட்டது,அதோடு ஒரு ஆசிரியருக்கு ஒரு மாற்று ஆசிரியர் (சப்ஸ்டியூட்)ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.முதன்மை ஆசிரியர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவர் பணியை மேற்கொள்வார்.இதன் மூலம் பள்ளிகளில் தங்கு தடையில்லாமல் வகுப்புகள் நடைபெறும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த அனைவருக்கும் அரசு வேலை கிடைத்தாகி விட்டது.இனி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள்,பிற்காலத்தில் எந்த அரசு அலுவகலத்தில் வேலை செய்ய விருப்பமோ,அந்த அலுவலகத்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் கடிதம் பெற்றுக் கொள்ளலாம்.
முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக சாலைகளில் போக்குவரத்து ஒரு போதும் நிறுத்தப்படாது.அவர்கள் இனி இரவு பனிரெண்டு மணிக்கு மேல்,அதிகாலை ஆறு மணிக்குள் மட்டும் சாலையில் செல்வார்கள்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடி தண்ணீர் வழங்க "அக்வாஃபீனா" நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் "அக்வாஃபீனா" தண்ணீர் உறுதி.
ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில்,அனைத்து தனியார் மருத்துவமனைகளுடனும் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.இனி அனைவரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இருண்டு கிடக்கும் பனை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற, கள் இறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான கலயம்,அரிவாள் போன்றவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தின் அனைத்துச் சாலைகளும் நமீதாவின் கன்னம் போல் வழவழப்பாக மாற்றப்படும், அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடக்கின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டு விட்டதால் இனி விவசாயிகள் முப்போகம் விளைவிக்கலாம்.அதற்கு தேவையான உரங்களை அழகிரி வீட்டின் பின்புறம் உள்ள உரக்கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்,மேலும் அதற்காகும் போக்குவரதது செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்,இனி இலங்கை கடல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ளலாம்,அதோடு மட்டுமில்லாமல் பிடித்த மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம்.அதற்கு தேவையான அரிசி,எண்ணெய்,மசாலா சாமன்களை தந்து உதவ இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடை பெற்று வந்த மின் திட்டப் பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்து விட்டது,ஆகவே இனி தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று முதல்வரை சந்தித்து இனிமேல் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்லாருக்கும் இல்வசக் கல்வி அளிக்கப் போவதாக "துண்டைப் போட்டு தாண்டி" உறுதியளித்துள்ளனர்.இனி அமைச்சரின் பிள்ளைகளும்,ஆண்டியின் பிள்ளைகளும் அருகருகே அமர்ந்து கல்வி பயிலலாம்.
பொது விநியோக கடைகளில் வழங்கப்பட்டு வந்த 1 ரூபாய் அரிசி,இன்று முதல் தரம் உயர்த்தப் பட்டு "பாசுமதி" அரிசி வழங்கப்படும்.மேலும் பருப்பு,காய்கறிகள்,என்ணெய்,மசாலாப் பொருட்கள் முதல் தாளிக்க தேவையான கடுகு,கறிவேப்பிலை வரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வழங்கப்படும்.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அறவே நீக்கப்பட்டு விட்டது,அதோடு ஒரு ஆசிரியருக்கு ஒரு மாற்று ஆசிரியர் (சப்ஸ்டியூட்)ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.முதன்மை ஆசிரியர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவர் பணியை மேற்கொள்வார்.இதன் மூலம் பள்ளிகளில் தங்கு தடையில்லாமல் வகுப்புகள் நடைபெறும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த அனைவருக்கும் அரசு வேலை கிடைத்தாகி விட்டது.இனி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள்,பிற்காலத்தில் எந்த அரசு அலுவகலத்தில் வேலை செய்ய விருப்பமோ,அந்த அலுவலகத்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் கடிதம் பெற்றுக் கொள்ளலாம்.
முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக சாலைகளில் போக்குவரத்து ஒரு போதும் நிறுத்தப்படாது.அவர்கள் இனி இரவு பனிரெண்டு மணிக்கு மேல்,அதிகாலை ஆறு மணிக்குள் மட்டும் சாலையில் செல்வார்கள்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடி தண்ணீர் வழங்க "அக்வாஃபீனா" நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் "அக்வாஃபீனா" தண்ணீர் உறுதி.
ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில்,அனைத்து தனியார் மருத்துவமனைகளுடனும் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.இனி அனைவரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இருண்டு கிடக்கும் பனை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற, கள் இறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான கலயம்,அரிவாள் போன்றவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தின் அனைத்துச் சாலைகளும் நமீதாவின் கன்னம் போல் வழவழப்பாக மாற்றப்படும், அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடக்கின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************************************************************
இனி செம்மொழி மாநாடு நடத்தியதால் விளைந்த "முக்கியமான" நன்மைகள்.
தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாலும்,அரசியல் நடத்த வேறு வழியில்லாததாலும், தோன்றியதிலிருந்து தமிழர்களுக்கு நன்மை மட்டுமே செய்து வரும் திமுக,காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கலைக்கப்பட்டு விட்டன.இதைக் கேள்விப்பட்ட முதல்வர்,"மறப்போம் மன்னிப்போம்" என்ற தமிழர் பண்பாட்டின் படி ஜெயலலிதா அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.இந்த உணர்ச்சிமயமான சந்திப்பில் உடனிருந்த அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி,தயாநிதி மாறன் மற்றும் சசிகலா,வைகோ,ராமதாஸ், திருமா, விஜயகாந்த்,பாண்டியன் ஆகியோர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் அந்த பகுதியே வெள்ளக் காடானது.
செம்மொழி மாநாட்டோடு நடந்த தமிழ் இணையத்தள மாநாட்டின் மூலம் மின்னஞ்சல் அனுப்ப கற்றுக் கொண்ட முதல்வர், இனிமேல் யாருக்கும் கடிதம் எழுதப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளார்.
செவ்வாய், 22 ஜூன், 2010
பால்யம்
அப்பாவின் சைக்கிளில் தெருவலம்
தாத்தாவின் மாட்டு வண்டியில் ஊர்வலம்
அம்மா கொண்டு வரும் கொடிக்காப்பழம்
ஆச்சி வாங்கித் தரும் ஆரஞ்சு மிட்டாய்
கள்ளன் போலிசு வெளையாட்டு
இடுப்பில் கயிற்றோடு கெணத்து நீச்சல்
அய்யனார் கம்மா ஆலமர ஊஞ்சல்
திண்ணையில் கூட்டாஞ்சோறு
இவையேதுமறியா
அய்யனார் கம்மா ஆலமர ஊஞ்சல்
திண்ணையில் கூட்டாஞ்சோறு
இவையேதுமறியா
குழந்தையொன்று
டோராவின் பயணங்கள் பார்த்தபடி
கெல்லாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது
தனியே.
டோராவின் பயணங்கள் பார்த்தபடி
கெல்லாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது
தனியே.
திங்கள், 21 ஜூன், 2010
வேலைவாய்ப்பு QA/QC Inspectors
QA/QC Interview Campaign
Mohammad Al Mojil Group,Saudi Arabia.
Outstanding Opportunities for Exceptional Professionals
With over US$ 800 million of projects currently in hand and a projected book order of another US$ 3 billion over the next five years, this highly respected and trusted Saudi Arabian industrial construction conglomerate is embarking on a major asset expansion phase. As part of this plan there is a need to recruit a number of outstanding construction professionals who can keep up with the firm's outstanding 50 year old record.
Position - QA/QC Inspectors (Piping,Welding,Civil,Electrical,Instrument,Painting)
CHENNAI
Date - 23-06-2010,24-06-2010
HOTEL RESIDENCY TOWER, NO 115, THAYAGRAJA ROAD, P. NAGAR, CHENNAI - 17,
COCHIN
Date - 26-06-2010,27-06-2010
THE GATEWAY HOTEL, SHANMUGHAM ROAD, MARINE DRIVE, COCHIN - 682011,
MUMBAI
Date - 28-06-2010,29-06-2010
HOTEL SUN N SAND, JUHU ROAD, JUHU, MUMBAI - 57,
வியாழன், 17 ஜூன், 2010
அவரவர் நியாயங்கள்
தன்னுடைய வெளிப்படையான செயல்பாடுகளின் மூலம் பொது மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் திரு சகாயம், கிராமங்களில் முகாம்கள் நடத்தி பட்டா, சிட்டா முதல் தேவைப்படும் அனைத்துச் சான்றிதழ்களையும் நேரடியாக மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் , கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் எனவும் கறாராக உத்தரவிட்டார்.(மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்கள், பணிபுரியும் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பது நடைமுறை விதி) இது, கிராம நிர்வாக அலுவலர்களை உசுப்பி விடவே, அவர்களில் பலரும் ஒன்று கூடி, ஆட்சியருக்கு எதிராக கடந்த 30.04.10 அன்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், இந்த விஷயம் பொதுமக்களை சீண்டிப் பார்க்கவே... சுமார் 4,000 விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
நன்றி விகடன்
அண்மையில் நடைபெற்ற முதல்வரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய சென்னைப் பல்கலைக்"கழக" துணைவேந்தர் திருவாசகம் "முதல் அமைச்சர் கருணாநிதியின் எழுத்துக்கள்தான் நோபல் பரிசு பெற தகுதியானவை" என்று அல்லக்கைகளே கூச்சப்படும் படி ஒரு பனிக்கட்டி மலையை வைத்தார்.இப்படிப்பட்ட அதிகாரிகள் மத்தியில் திரு.சகாயம் போன்றவர்கள் நமக்கு கிடைப்பது அத்தி பூத்தாற் போலத்தான்.
கடமையைச் செய்யும் இவரைப் போன்ற அதிகாரிகளை எதிர்ப்பது என்ன நியாயம்???
தொழிற்சாலைகளுக்கு செல்லும் குழு கையை வீசிக் கொண்டு செல்வார்கள்.எந்த ஊருக்குச் செல்கிறார்களோ,அந்த ஊரின் பிரபலமான் உணவகத்தில் மதிய உணவு தொழிற்சாலையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விடும்.உதாரணத்திற்கு ராஜபாளையம் கூரைக்கடை, அருப்புகோட்டை குறிஞ்சி,சிவகாசி பெல் மற்றும் பல.இது தவிர மேல் வருமானமும் உண்டு. இந்த குழுவின் உதவிப் பொறியாளர் குறைந்தது தினமும் ஆயிரம் ரூபாய் கிம்பளம் இல்லாமல் வீடு செல்ல மாட்டார் என்பது செவி வழிச் செய்தி.
இந்நிலையில் இரு உதவிப் பொறியாளர்களுக்கும் சண்டை மூண்டது பலர் பார்க்க.எத்தனை நாளைக்கு நான் மட்டும் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல??? நாற்காலியை மாற்றிக் கொள்ளலாம் என்று அவர் சொல்ல,நான் இந்த பதவிக்கு வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது முடியாது என இவர் சொல்ல நிலவரம் கலவரமானது.அன்றைய தினம் மாலையில் சமாதானப் பேச்சுவார்த்தை செயற்பொறியாளர் முன்னிலையில் நடைபெற்றது.இரு உதவிப் பொறியாளர்களும் தத்தமது சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.ஒருவர் நேரடியாக உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.மற்றொருவர் பதவி உயர்வின் மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டயதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இருவரும் இப்போதைக்கு அப்படியே தொடர்வதாகவும்,ஆறு மாதத்திற்கு பின்னர் பரஸ்பரம் நாற்காலிகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடுமையான விவாதத்திற்கு பின் முடிவாகியாகதாக பின்னர் அறிந்தேன்.
இதில் இரண்டு சங்கமும் லஞ்சம் வாங்க கூடாது என்றெல்லாம் கூறவில்லை,சண்டை போட்டுக் கொள்ளாமல் சரி சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றன!! அதுவும் லஞ்ச காசில் வாங்கி குடுத்த காபியையும்,போண்டாவையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவைக் மடிப்பாக்கத்திற்கு கூப்பிட்டால் 100 ரூபாய் சொல்வார்கள்,அதே நேரத்தில் சைதாப்பேட்டையிலிருந்து வரும் ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் 70 ரூபாய் தான் அதே இடத்திற்கு செல்ல.சில நேரங்களில் 20 ரூபாய் தான் 4 பேர் சேர்ந்து பயணித்தால்.ரோட்டில் வேறு ஆட்டோவை நிறுத்தினால் ஸ்டாண்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து ஆட்டோவின் பின்புறம் தட்டுவார் "போ போ இங்க நின்னு ஆள் ஏத்தாதே" என்று.ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ குறைந்த ரேட்டுக்கு வராது,வருகிற மற்ற ஆட்டோக்களையும் வர விட மாட்டார்கள்.இங்கு மட்டுமல்ல சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் தினமும் காணக் கிடைக்கும் ஒரு நிகழ்ச்சி.
இதே சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுபவர்கள் பற்றிய பாராவின் பதிவு.
ஆனால், இந்த விஷயம் பொதுமக்களை சீண்டிப் பார்க்கவே... சுமார் 4,000 விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
******************************************************************
தமிழக இ.எஸ்.ஐ. மருத்துவப் பிரிவின் இயக்குநரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநருமான புருஷோத்தம் விஜயகுமார் அவர்கள், அவ்வப்போது மாறு வேடத்தில் மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, லஞ்சம் வாங்குபவர்களுக்கும்,பணியில் கவனக்குறைவாக இருப்பவர்களுக்கும் தக்க தண்டணையை அளித்து வருகிறார்(கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மாறுவேடத்தில் புகுந்து சாட்டையைச் சுழற்றி வருகிறார் விஜயகுமார்).இவரது அதிரடி நடவடிக்கைகளால், மருத்துவத் துறையின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தி தெரிவிக்க... அவர்களைச் சமாதானப்படுத்தி, விஜயகுமாரைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்படி பச்சைக் கொடி காட்டுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்கிறார் புருஷோத்தம் விஜயகுமார்!
''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்கிறார் புருஷோத்தம் விஜயகுமார்!
நன்றி விகடன்
அண்மையில் நடைபெற்ற முதல்வரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய சென்னைப் பல்கலைக்"கழக" துணைவேந்தர் திருவாசகம் "முதல் அமைச்சர் கருணாநிதியின் எழுத்துக்கள்தான் நோபல் பரிசு பெற தகுதியானவை" என்று அல்லக்கைகளே கூச்சப்படும் படி ஒரு பனிக்கட்டி மலையை வைத்தார்.இப்படிப்பட்ட அதிகாரிகள் மத்தியில் திரு.சகாயம் போன்றவர்கள் நமக்கு கிடைப்பது அத்தி பூத்தாற் போலத்தான்.
கடமையைச் செய்யும் இவரைப் போன்ற அதிகாரிகளை எதிர்ப்பது என்ன நியாயம்???
********************************************************************************
நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு வருட பயிற்சியில் இருந்த போது நடந்த சம்பவமிது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாவட்டந்தோறும் MRT (Meter & Relay Testing ) என்றொரு பிரிவுண்டு.அந்த மாவட்டத்திலுள்ள துணை மின் நிலையங்களின் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒரு குழுவும், தொழிற்சாலைகளின் (HT Service,LTCT Service) மின் அளவிகள் கண்காணிப்பு,சோதனை மற்றும் பராமரிப்புகளை மேற்கொள்ள மற்றொரு குழுவும், தனித்தனி உதவிப் பொறியாளர் தலைமையில் இயங்கும். தினந்தோறும் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது துணை மின் நிலையம் என அட்டவணை வைத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும்,சுழற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.இரு குழுவுக்கும் தனித்தனி வாகன வசதிகளுண்டு.இதில் துணை மின் நிலையங்கள் செல்லும் குழு,குடிப்பதற்கு தண்ணீர் முதல் கொண்டு அலுவலத்திலிருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எந்த மேல் வருமானமும் கிடையாது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாவட்டந்தோறும் MRT (Meter & Relay Testing ) என்றொரு பிரிவுண்டு.அந்த மாவட்டத்திலுள்ள துணை மின் நிலையங்களின் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒரு குழுவும், தொழிற்சாலைகளின் (HT Service,LTCT Service) மின் அளவிகள் கண்காணிப்பு,சோதனை மற்றும் பராமரிப்புகளை மேற்கொள்ள மற்றொரு குழுவும், தனித்தனி உதவிப் பொறியாளர் தலைமையில் இயங்கும். தினந்தோறும் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது துணை மின் நிலையம் என அட்டவணை வைத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும்,சுழற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.இரு குழுவுக்கும் தனித்தனி வாகன வசதிகளுண்டு.இதில் துணை மின் நிலையங்கள் செல்லும் குழு,குடிப்பதற்கு தண்ணீர் முதல் கொண்டு அலுவலத்திலிருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எந்த மேல் வருமானமும் கிடையாது.
தொழிற்சாலைகளுக்கு செல்லும் குழு கையை வீசிக் கொண்டு செல்வார்கள்.எந்த ஊருக்குச் செல்கிறார்களோ,அந்த ஊரின் பிரபலமான் உணவகத்தில் மதிய உணவு தொழிற்சாலையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விடும்.உதாரணத்திற்கு ராஜபாளையம் கூரைக்கடை, அருப்புகோட்டை குறிஞ்சி,சிவகாசி பெல் மற்றும் பல.இது தவிர மேல் வருமானமும் உண்டு. இந்த குழுவின் உதவிப் பொறியாளர் குறைந்தது தினமும் ஆயிரம் ரூபாய் கிம்பளம் இல்லாமல் வீடு செல்ல மாட்டார் என்பது செவி வழிச் செய்தி.
இந்நிலையில் இரு உதவிப் பொறியாளர்களுக்கும் சண்டை மூண்டது பலர் பார்க்க.எத்தனை நாளைக்கு நான் மட்டும் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல??? நாற்காலியை மாற்றிக் கொள்ளலாம் என்று அவர் சொல்ல,நான் இந்த பதவிக்கு வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது முடியாது என இவர் சொல்ல நிலவரம் கலவரமானது.அன்றைய தினம் மாலையில் சமாதானப் பேச்சுவார்த்தை செயற்பொறியாளர் முன்னிலையில் நடைபெற்றது.இரு உதவிப் பொறியாளர்களும் தத்தமது சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.ஒருவர் நேரடியாக உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.மற்றொருவர் பதவி உயர்வின் மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டயதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இருவரும் இப்போதைக்கு அப்படியே தொடர்வதாகவும்,ஆறு மாதத்திற்கு பின்னர் பரஸ்பரம் நாற்காலிகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடுமையான விவாதத்திற்கு பின் முடிவாகியாகதாக பின்னர் அறிந்தேன்.
இதில் இரண்டு சங்கமும் லஞ்சம் வாங்க கூடாது என்றெல்லாம் கூறவில்லை,சண்டை போட்டுக் கொள்ளாமல் சரி சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றன!! அதுவும் லஞ்ச காசில் வாங்கி குடுத்த காபியையும்,போண்டாவையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவைக் மடிப்பாக்கத்திற்கு கூப்பிட்டால் 100 ரூபாய் சொல்வார்கள்,அதே நேரத்தில் சைதாப்பேட்டையிலிருந்து வரும் ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் 70 ரூபாய் தான் அதே இடத்திற்கு செல்ல.சில நேரங்களில் 20 ரூபாய் தான் 4 பேர் சேர்ந்து பயணித்தால்.ரோட்டில் வேறு ஆட்டோவை நிறுத்தினால் ஸ்டாண்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து ஆட்டோவின் பின்புறம் தட்டுவார் "போ போ இங்க நின்னு ஆள் ஏத்தாதே" என்று.ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ குறைந்த ரேட்டுக்கு வராது,வருகிற மற்ற ஆட்டோக்களையும் வர விட மாட்டார்கள்.இங்கு மட்டுமல்ல சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் தினமும் காணக் கிடைக்கும் ஒரு நிகழ்ச்சி.
இதே சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுபவர்கள் பற்றிய பாராவின் பதிவு.
லக்கிலுக்கின் பதிவு.
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சிஐடியு சங்கத்தை சார்ந்தவர்கள்.ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்குப் போராடும்? தோழர்கள் தங்கள் சங்கத்தை சார்ந்தவர்களை மாற்றலாமே? மீட்டர் போட்டு ஓட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் நியாயமான ரேட்டிலாவது ஓட்டச் செய்யலாமே??ஒரு வேளை ஆட்டோவில் செல்பவர்கள் எல்லாரும் அம்பானிகள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
எல்லாருமே தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க போராடுகிறோம்னு சொல்றாங்க!சரி அதிலாவது ஒற்றுமையா இருக்காங்களன்னு பார்த்தா அதுவும் கிடையாது.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே தொழிற்சங்கங்கள்! நாளிதழின் ஒரு பக்கத்தில் அரசை எதிர்த்து ஒரு சங்கம் போராட்ட அறிவிப்பு செய்தால்,அதே நாளிதழின் மற்றொரு பக்கத்தில் எங்கள் சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று வேறொரு சங்கத்தின் அறிவிப்பு.
இதில் சில சங்கங்கள் தேர்தல் நெருக்கத்தில் கழகங்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக அறிக்கைகள் வேறு விடுகின்றன.
ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா?? அதுவும் சரிதான்.!
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சிஐடியு சங்கத்தை சார்ந்தவர்கள்.ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்குப் போராடும்? தோழர்கள் தங்கள் சங்கத்தை சார்ந்தவர்களை மாற்றலாமே? மீட்டர் போட்டு ஓட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் நியாயமான ரேட்டிலாவது ஓட்டச் செய்யலாமே??ஒரு வேளை ஆட்டோவில் செல்பவர்கள் எல்லாரும் அம்பானிகள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
எல்லாருமே தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க போராடுகிறோம்னு சொல்றாங்க!சரி அதிலாவது ஒற்றுமையா இருக்காங்களன்னு பார்த்தா அதுவும் கிடையாது.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே தொழிற்சங்கங்கள்! நாளிதழின் ஒரு பக்கத்தில் அரசை எதிர்த்து ஒரு சங்கம் போராட்ட அறிவிப்பு செய்தால்,அதே நாளிதழின் மற்றொரு பக்கத்தில் எங்கள் சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று வேறொரு சங்கத்தின் அறிவிப்பு.
இதில் சில சங்கங்கள் தேர்தல் நெருக்கத்தில் கழகங்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக அறிக்கைகள் வேறு விடுகின்றன.
ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா?? அதுவும் சரிதான்.!
வியாழன், 10 ஜூன், 2010
பட்சணக் கடை
என்ன தான் நம்மூரு "பவன்" வகையறா ஹோட்டல்கள் இங்க இருந்தாலும்,அவை முனியாண்டி விலாசுகளுக்கு ஈடாகா!குறிப்பாக சரக்கடித்து விட்டுச் செல்லும் சமயங்களில்.......எங்கூட பணி எடுக்கும் சேட்டன் ஒருவர் சிக்கனவாதி (எப்படின்னா ஆயிரம் திராம்ஸ் சரக்குக்கு செலவளிக்கலாம் ஆனா ஒரு திராம்ஸ் கூட சாப்பாட்டுக்கு எக்ஸ்ட்ரா செலவளிக்க கூடாது) அவருக்கு சரக்கடித்தால் கண்டிப்பாக மசாலா தோசை தான் வேணும் அதுவும் ரைட் சைடுல சிக்கன் சுக்கா,லெப்ட் சைடுல ஃபுல் பாயிலோட.ஒரு தடவை போதைல செட்டிநாடுக்கு கூட்டிட்டுப் போய்,மறு நாள் தியான நிலை தெளிஞ்சதும்,பில்ல பார்த்து தமிழ்லேயே அசிங்கமா திட்டிட்டாரு.அதுல இருந்து எப்பவும் இந்த கடைதான்.
அபுதாபி - மிஸ்பா
அபுதாபி டூரிஸ்ட் கிளப் ஏரியால எமிரேட்ஸ் பிளேசா ஹோட்டல் பக்கத்துல இருக்கு,எமிரேட்ஸ் பிளேசா ஹோட்டல் பார்ல குடி(ளி)ச்சுட்டு வெளியே வந்தவுடன் வலது பக்கம் திரும்புனா மிஸ்பா தெரியும்.ஹோட்டல் முதலாளி சேட்டனா இருந்தாலும் தமிழ்ப்பற்றோட!! "ஹோட்டல் மிஸ்பா தென்னிந்திய உணவுகள் கிடைக்கும்"னு தெளிவா எழுதி வச்சிருப்பாரு.
இட்லி,தோசை,சப்பாத்தி,பரோட்டா,சிக்கன்,மட்டன்,கேரளா ஸ்டைல் பீஃப் ஃபிரை என எல்லாம் கெடைக்கும் சகாய விலையில்.அதெல்லாம் விட பெரிய விசயம் என்ன அலும்பு பண்ணினாலும் கண்டுக்க மாட்டாங்க.நம்மாளு எண்ணெய் இல்லாம ஒரு ஆனியன் ரவா,நெய் இல்லாம ஒரு நெய் ரோஸ்ட்டுன்னு ஆர்டர் குடுத்தாலும் ஒகே சார்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பாங்க! அனுபவம்.நம்மாளு இருக்குற நெலைமைக்கு தோச கல்லையே கொண்டு வந்து வச்சாலும் ஒண்ணும் தெரியாது,ஏன்னா எல்லாரும் கொஞ்சமா தான் குடிப்பாங்க!
கத்தார் - பெயரில்லா கடை
அல்கோரிலிருந்து ராஸ்லபான்(RASLAFFAN) செல்லும் வழியில் லேபர் கேம்ப் ஏரியாவில் உள்ளது.இந்த சேட்டனுக்கு எந்த மொழிப் பற்றுமே கிடையாது.ஆமாங்க கடைக்கே பேரே கிடையாது!பேர் இல்லாவிட்டாலும் எல்லாரும் அழைப்பது கறிமீன் ஹோட்டல்.இங்க கறிமீன் பிரை தான் ஸ்பெசல்,வியாழன் மற்றும் வெள்ளி இரவுகளில் இதுக்காக ஒரு கூட்டமே காத்துக் கெடக்கும்.மசாலால ஊறப்போட்டு ரெடியா வச்சுருப்பாங்க,ஆர்டர் குடுத்ததுக்கப்புறம் பிரை பண்ணி தருவாங்க.சாதாரணமான நாளில் 15 நிமிஷம் ஆகும்.வியாழன் அல்லது வெள்ளின்னா நம்ம அதிர்ஷ்டத்த பொறுத்தது.ஒரு பிரை,ரெண்டு பரோட்டா சாப்பிட்டா சும்மா கும்முன்னு இருக்கும்.
ஒரு பிரையோட விலை 8 கத்தார் ரியால்.நம்மூர் காசுக்கு குத்து மதிப்பா 96 ரூபா வரும்.(சென்னை மடிப்பாக்கத்திலுள்ள ஓரியன் ரெஸ்ட்டாரெண்டில் ஒரு கறிமீன் பிரை 250 ரூபாய்........ ம் நல்லாருங்கடே மக்கா)
சவுதி - லெபனான்
என்னடா இவன் சவுதின்னு சொல்லிட்டு லெபனான்னும் சொல்றான்னு குழம்புறிங்களா?? இந்த கடை சவுதிலதான் இருக்கு,கடை பேர் லெபனான்
இங்க சரக்கடிச்சுட்டு (சரக்கே கெடைக்காது) போக முடியாது, ஒரு வேளை சதிக்கி (நம்மூரு பட்டை தராளாமா கிடைக்கும்)அடிச்சாலும் போக முடியாது.இப்படிப்பட்ட குடிமகன்களுக்காக ஹோம் டெலிவரி வசதி உண்டு.
சவுதி முழுக்க கிளைகள் இருக்குன்னு சொல்றாங்க.நான் தமாம் மற்றும் ரஹிமா கிளைகளில் சாப்பிட்டுருக்கேன்.இது ஒரு அரபு ஹோட்டல், ரோஸ்டடு சிக்கன் சாப்பிட மட்டும் இங்கு போவோம்.ரோஸ்டடு சிக்கன் கேஎஃப்சி மாதிரி தான் இருக்கும், ஆனா கேஎப்சிய விட நல்லாருக்கும். பன்னுக்குப் பதிலா சுடச்சுட ரொட்டி மூங்கில் கூடைல வச்சு குடுத்துட்டே இருப்பாங்க.பூண்டு சட்னி கெட்டியா, சூப்பரா இருக்கும். கேஎஃப்சி மாதிரி சுண்ணாம்பு டப்பால வச்சு குடுக்காம எவ்ளோ கேட்டாலும் குடுப்பாங்க.விலையும் கேஎஃப்சியோட ஒப்பிடுகையில் குறைவுதான்.
புதன், 26 மே, 2010
மீண்டும்....(முகிலனுக்காக)
சென்ற பதிவின் தொடர்ச்சி நண்பர் முகிலனின் பின்னூட்டங்களுக்கான பதில்கள்
பகல் முழுவதும் தீப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டி,பெரிய கோணிப்பைகளை விரித்து, வெயிலில் காய வைத்திருக்கும் அம்மா, சாயந்திரம் நான் போனதும் தான் இந்த பேக்கிங் வேலைய தொடங்குவார்கள்.அம்மா முன் அமர்ந்து பத்து பத்து பெட்டியாக அடுக்கிக் கொடுக்கும் வேலை எனக்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவதற்கே எட்டு,ஒன்பது மணி ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டு,வீட்டுப் பாடம் செய்து அல்லது படித்து விட்டு படுத்தால் விடிவதே தெரியாது.
என்னுடைய பக்கத்து வீட்டு நண்பன் செல்வத்தின் குடும்பம் விவசாயக் குடும்பம்.அவன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்டத்து போய், அங்கு அவங்க அம்மா,அப்பா,அக்கா ஏற்கெனவே பறித்து வைத்த காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவனுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இரண்டு பைகளில் புடலங்காய்,இவற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் கமிஷன் மண்டியில் குடுத்துட்டு,9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க,விறுவிறுக்க வந்து சேர்வான்.
மீண்டும் ஸ்கூல் விட்டதும் கமிஷன் மண்டிக்குப் போய் கணக்கு முடித்து, காலையில் கொண்டு வந்த சாக்கு மற்றும் பைகளோடு வீடு திரும்புவான்.
படிக்கும் காலங்களில் இப்படித்தான் எங்க பொழுதுகள் போயின.எங்க ஊரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நெலமை. ஒன்னு விவசாயம் சார்ந்ததாக அல்லது தீப்பெட்டித் தொழில் சார்ந்ததாக. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்கன் ஹிந்தி படிப்பதற்கு ஏது நேரம், உண்டான பாடங்களை படித்து பாஸ் செய்வதே பெரிய விசயம். அதில் வேறொரு நெருக்கடி உண்டு, அது வெறுமனே பாஸ் மட்டும் செய்தால், பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தீப்பெட்டி வேலையும், விவசாயமும் முழு நேரத் தொழிலாக மாறி விடும் அபாயம்.அப்படி நெறைய பேருக்கு ஆகியிருக்கிறது.
ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும்.இந்த நிலைமையில் ஹிந்தி படிக்க ஆர்வமிருந்தால் மட்டும் போததாது.வசதியும்,வாய்ப்பும் கூட இருக்க வேண்டும்.ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.
சரி ஹிந்தி தெரியாதது அவ்ளோ பெரிய விஷயமா என்ன???
சென்னையில் வேலை செய்யும் வரை அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.
உன்னைய எவன் வெளிநாட்டுக்குப் போக சொன்னான் ??
படிச்ச படிப்புக்கு சொந்த ஊர்ல வேலை இல்ல,சரி நேரா அப்பாவோட கம்பெனில போய் வேலைக்கு சேரலாமான்னா எங்க அப்பாவுக்கு விஜய் மல்லையா மாதிரியோ இல்ல அம்பானி மாதிரியோ எந்த கம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த நாலு வருடங்களில் மிச்சமான காசை வைத்து நிஜ வீடு அல்ல ஒரு வீட்டோட மாடல கூட கட்ட முடியாதுன்னு தெரிஞ்சப்ப வேற என்ன பண்றது?
எப்படியும் பிறந்த ஊர்ல பிழைக்க முடியாது ,வெளியூர்க்குத் தான் போகணும்னு ஆனதுக்கப்புறம் சென்னையை விட சவுதி நல்லதா தெரிஞ்சது.அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் "நாங்க தான் இப்படி கருமாயப் பட்டுக்கிட்டு கெடக்கோம் நீயாவது ஒரு நல்ல நெலைக்கு வந்தாதான் நம்ம குடும்பம் நிமிர முடியும்,உன்னையத்தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற வார்த்தையை நிஜமாக்க வேண்டுமென்றால் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மும்பைல சிக்கி சீரழிஞ்சு, ஒரு வழியா சவுதில ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டு, தமாம்ல போய் இறங்குனா அங்க அடுத்த பிரச்சினை.நான் வேலைக்கு போன கம்பெனில "பிலிப்பைன்ஸ்" மக்கள் தான் மெஜாரிட்டி.தினம் காலையில அரைமணி நேரம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு நடக்கும், வேலையின் போது கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்,முன் தினம் நடந்த ஏதேனும் ஒரு அசம்பாவிதம்,இனி அது போல நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பற்றிப் பேசுவார்கள்.
ஒரு பக்கம் "பிலிப்பைன்ஸ்" மக்களுக்காக அவங்க மொழிலயும் (தகலாக்),இன்னொரு பக்கம் இந்தியன்,பாகிஸ்தானி,நேபாளி,வங்காள தேச மக்களுக்காக ஹிந்தியிலேயும் நடக்கும்.நமக்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன.
அவற்றில் சில
இதுபற்றி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. 'விருதுநகர் மாவட்டம் பரப்பளவில் சிறிய, அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை முன் னேறிய மாவட்டம். அதனால் அங்கே அரசு கல்லூரிகள் அமைக்கும் தேவை இப்போது இல்லை. தேவை ஏற்படும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.(நன்றி ஜூவி)
இப்படித்தான் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் திட்டமிடல்களும்,செயல் பாடுகளும்.
இவர்களை நம்பி???
//No one stopped you from learning HINDI. There were so many Hindi Matir's in each town (even small towns like Aruppukottai) which were encouraging students to learn Hindi. If you were interested you could have learnt Hindi. Only "Hindi Thinippu" was opposed. Who are they to ask me to learn one language and not the other. i have my own freedom and I should be able to learn whatever language I like. And only one's mother tongue should be forced in (Otherwise, that language would die).//
எங்களை யாரும் ஹிந்தி படிக்க கூடாதுன்னு தடுக்க வில்லை.நீங்க சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான சின்ன ஊர்களிலும் ஹிந்தி சொல்லித் தர ஆள் இருந்தும் படிக்காமல் விட்டது எங்கள் குற்றமே.
நான் படிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுடன் நேரே போகிற இடம் தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட அங்க போய் தான்.தீக்குச்சிகள் அடைக்கப்பட்ட தீப்பெட்டியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் (மைதா மாவில் காய்ச்சிய பசை தான் பயன்படுத்துவார்கள்) ஒட்டி காய வைத்து,10 தீப்பெட்டிகளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (டசன்ன்னு சொல்வார்கள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய வைத்து,அந்த 10 டசன்களை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க) செய்து,அதுக்கு மேல் கம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் சம்பளம் 40 பைசா.இது தான் எங்க அம்மாவுக்கு வேலை.
எங்களை யாரும் ஹிந்தி படிக்க கூடாதுன்னு தடுக்க வில்லை.நீங்க சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான சின்ன ஊர்களிலும் ஹிந்தி சொல்லித் தர ஆள் இருந்தும் படிக்காமல் விட்டது எங்கள் குற்றமே.
நான் படிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுடன் நேரே போகிற இடம் தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட அங்க போய் தான்.தீக்குச்சிகள் அடைக்கப்பட்ட தீப்பெட்டியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் (மைதா மாவில் காய்ச்சிய பசை தான் பயன்படுத்துவார்கள்) ஒட்டி காய வைத்து,10 தீப்பெட்டிகளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (டசன்ன்னு சொல்வார்கள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய வைத்து,அந்த 10 டசன்களை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க) செய்து,அதுக்கு மேல் கம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் சம்பளம் 40 பைசா.இது தான் எங்க அம்மாவுக்கு வேலை.
பகல் முழுவதும் தீப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டி,பெரிய கோணிப்பைகளை விரித்து, வெயிலில் காய வைத்திருக்கும் அம்மா, சாயந்திரம் நான் போனதும் தான் இந்த பேக்கிங் வேலைய தொடங்குவார்கள்.அம்மா முன் அமர்ந்து பத்து பத்து பெட்டியாக அடுக்கிக் கொடுக்கும் வேலை எனக்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவதற்கே எட்டு,ஒன்பது மணி ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டு,வீட்டுப் பாடம் செய்து அல்லது படித்து விட்டு படுத்தால் விடிவதே தெரியாது.
என்னுடைய பக்கத்து வீட்டு நண்பன் செல்வத்தின் குடும்பம் விவசாயக் குடும்பம்.அவன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்டத்து போய், அங்கு அவங்க அம்மா,அப்பா,அக்கா ஏற்கெனவே பறித்து வைத்த காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவனுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இரண்டு பைகளில் புடலங்காய்,இவற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் கமிஷன் மண்டியில் குடுத்துட்டு,9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க,விறுவிறுக்க வந்து சேர்வான்.
மீண்டும் ஸ்கூல் விட்டதும் கமிஷன் மண்டிக்குப் போய் கணக்கு முடித்து, காலையில் கொண்டு வந்த சாக்கு மற்றும் பைகளோடு வீடு திரும்புவான்.
படிக்கும் காலங்களில் இப்படித்தான் எங்க பொழுதுகள் போயின.எங்க ஊரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நெலமை. ஒன்னு விவசாயம் சார்ந்ததாக அல்லது தீப்பெட்டித் தொழில் சார்ந்ததாக. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்கன் ஹிந்தி படிப்பதற்கு ஏது நேரம், உண்டான பாடங்களை படித்து பாஸ் செய்வதே பெரிய விசயம். அதில் வேறொரு நெருக்கடி உண்டு, அது வெறுமனே பாஸ் மட்டும் செய்தால், பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தீப்பெட்டி வேலையும், விவசாயமும் முழு நேரத் தொழிலாக மாறி விடும் அபாயம்.அப்படி நெறைய பேருக்கு ஆகியிருக்கிறது.
ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும்.இந்த நிலைமையில் ஹிந்தி படிக்க ஆர்வமிருந்தால் மட்டும் போததாது.வசதியும்,வாய்ப்பும் கூட இருக்க வேண்டும்.ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.
சரி ஹிந்தி தெரியாதது அவ்ளோ பெரிய விஷயமா என்ன???
சென்னையில் வேலை செய்யும் வரை அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.
உன்னைய எவன் வெளிநாட்டுக்குப் போக சொன்னான் ??
படிச்ச படிப்புக்கு சொந்த ஊர்ல வேலை இல்ல,சரி நேரா அப்பாவோட கம்பெனில போய் வேலைக்கு சேரலாமான்னா எங்க அப்பாவுக்கு விஜய் மல்லையா மாதிரியோ இல்ல அம்பானி மாதிரியோ எந்த கம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த நாலு வருடங்களில் மிச்சமான காசை வைத்து நிஜ வீடு அல்ல ஒரு வீட்டோட மாடல கூட கட்ட முடியாதுன்னு தெரிஞ்சப்ப வேற என்ன பண்றது?
எப்படியும் பிறந்த ஊர்ல பிழைக்க முடியாது ,வெளியூர்க்குத் தான் போகணும்னு ஆனதுக்கப்புறம் சென்னையை விட சவுதி நல்லதா தெரிஞ்சது.அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் "நாங்க தான் இப்படி கருமாயப் பட்டுக்கிட்டு கெடக்கோம் நீயாவது ஒரு நல்ல நெலைக்கு வந்தாதான் நம்ம குடும்பம் நிமிர முடியும்,உன்னையத்தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற வார்த்தையை நிஜமாக்க வேண்டுமென்றால் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மும்பைல சிக்கி சீரழிஞ்சு, ஒரு வழியா சவுதில ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டு, தமாம்ல போய் இறங்குனா அங்க அடுத்த பிரச்சினை.நான் வேலைக்கு போன கம்பெனில "பிலிப்பைன்ஸ்" மக்கள் தான் மெஜாரிட்டி.தினம் காலையில அரைமணி நேரம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு நடக்கும், வேலையின் போது கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்,முன் தினம் நடந்த ஏதேனும் ஒரு அசம்பாவிதம்,இனி அது போல நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பற்றிப் பேசுவார்கள்.
ஒரு பக்கம் "பிலிப்பைன்ஸ்" மக்களுக்காக அவங்க மொழிலயும் (தகலாக்),இன்னொரு பக்கம் இந்தியன்,பாகிஸ்தானி,நேபாளி,வங்காள தேச மக்களுக்காக ஹிந்தியிலேயும் நடக்கும்.நமக்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன.
நமக்கு கீழே வேலை செய்ற அம்பது பேரை அவங்க மொழி தெரியாமல் வேலை வாங்குவதென்பது கஷ்டம்.ஹிந்தி கற்றுக் கொள்வது ஒண்ணும் பெரிய விஷயமில்லை என்பவர்களுக்கு,உண்மைதான், இந்த ஆரம்ப நிலை தடுமாற்றங்களை தாக்குப்பிடித்து நின்றால் மட்டுமே அது சாத்தியம்..
*******************************************
முகிலன் சொன்னது…
//தமிழ் வழியில் கல்வி கற்றால் வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வேலை பார்க்க முடியாது என்று சொன்னால் அது அறிவின்மை.
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது//
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது//
//And Dr.Mannar Jawahar also says, they will teach English to these Tamil Medium students for the first three years. I assume they would teach spoken english and communication skills in these years. (I don't think we need to know anything other than these).//
மற்ற துறைகளில் எப்படியோ நான் வேலை செய்யும் பெட்ரோலியத்துறையில் (Oil & Gas) வெறும் டிகிரி மட்டும் போததாது.மற்ற சில சர்வதேச தரமுள்ள சான்றிதழ் படிப்புகளும் தேவை
மற்ற துறைகளில் எப்படியோ நான் வேலை செய்யும் பெட்ரோலியத்துறையில் (Oil & Gas) வெறும் டிகிரி மட்டும் போததாது.மற்ற சில சர்வதேச தரமுள்ள சான்றிதழ் படிப்புகளும் தேவை
அவற்றில் சில
*API
*NACE
*BGAS
EDUCATION:
► BE mechanical engineering (1983)
► CSWIP 3.2 by TWI, UK
► CSWIP Painting B Gas Gr3
► Certified Welding Inspector by AWS(1993-2002)
► ISO9001-Lead Assessor course
► ISO9001-Lead Assessor course
► Internal Auditor course
► ASNT Level II in RT,UT,MT,PT
► RT Film interpretation course
இது எல்லாம் படிக்காவிடில் இந்த துறையில் வேலையே கிடைக்காதா என்ன?
இது எல்லாம் படிக்காவிடில் இந்த துறையில் வேலையே கிடைக்காதா என்ன?
கிடைக்கலாம்,பெரும்பாலான நல்ல கம்பெனிகளில் பணிபுரிய இவை அவசியம் தேவை.சாப்ட்வேர் எஞ்சினியராக, காமா சோமா இன்போடெக் என்ற வெளியே தெரியாத கம்பெனியில் வேலை செய்வதற்கும்,அதே சாப்ட்வேர் எஞ்சினியராக இன்போசிஸ்,டிசிஸ்,விப்ரோ போன்ற கம்பெனிகளில்வேலை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா???
மேலும் அந்த காமா சோமா கம்பெனிகளில் கூட ,ஒரு எஞ்சினியர் அடுத்த நிலைக்கு உயர வேண்டுமென்றால் இவை அவசியம்.ஏனெனில் இவை எல்லாமே கிளையண்ட்டோட தேவைகள்.
மேல சொன்ன சான்றிதழ் படிப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.அதுவும் கிளாஸ் ரூம் கோச்சிங் எல்லாம் கிடையாது, வெறும் ஐந்து நாள் செமினார் ஸ்டார் ஹோட்டலில் (சென்னையில் சவேராவில் நடக்கும்)வைத்து நடத்தி விட்டு ஆறாவது நாள் தேர்வு வைப்பார்கள்.
இது இல்லாமல் தினசரி வேலையில் உபயோகப் படும் Method Statement,Quality Control Procedures,Inspection & Test Plan,Specifications,Factory Acceptance Test Documents (FAT),Site Acceptance Test Documents (SAT),Mechanical Completion Dossier,Pre – Commissioning Dossier,Commissioning Dossier,Provisional Acceptance Certificate Book (PAC) போன்ற எல்லா டாகுமெண்ட்களும் ஆங்கிலத்தில் தான்.
வேலைக்குப் போனால் இப்படியென்றால் மேற்படிப்பும் ஆங்கிலம் தான்.
தமிழ் வழி பொறியியல் கல்வியில்,துறை சார்ந்த பாடங்களை தமிழ் வழியிலும்,ஆங்கிலத்தை ஒரு பாடமாகவும் படிக்கும் ஒருவன், வெளியில் வந்து இத்தனை விஷயங்களை ஆங்கிலத்திலேயே எதிர் கொண்டு வெற்றி பெற முடியும் எனில்
பனிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்து விட்டு வரும் ஒருவனால், நான்கு வருட பொறியியல் பாடங்களை ஆங்கிலத்தில் எதிர் கொள்ள முடியாதா என்ன????
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடப்பதில்லை.சில குறிப்பிட்ட கல்லூரிகளில் வருடந்தோறும் நடக்கிறது,சில குறிப்பிட்ட கல்லூரிகளில் நடப்பதே இல்லை.இதே நிலை தமிழ் வழி பொறியியல் கல்லூரிகளுக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்??
இவ்வளவு அவசரமாக இதை கொண்டு வருவதற்கான காரணம் என்ன???
முடியாத வேலைக்கு கோலகாலமாக திறப்பு விழா நடத்தி விட்டு,மீண்டும் வேலையைத் தொடர இது ஒன்றும் கட்டிடமில்லை.
ஒரு அதிகாரி
மேல சொன்ன சான்றிதழ் படிப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.அதுவும் கிளாஸ் ரூம் கோச்சிங் எல்லாம் கிடையாது, வெறும் ஐந்து நாள் செமினார் ஸ்டார் ஹோட்டலில் (சென்னையில் சவேராவில் நடக்கும்)வைத்து நடத்தி விட்டு ஆறாவது நாள் தேர்வு வைப்பார்கள்.
இது இல்லாமல் தினசரி வேலையில் உபயோகப் படும் Method Statement,Quality Control Procedures,Inspection & Test Plan,Specifications,Factory Acceptance Test Documents (FAT),Site Acceptance Test Documents (SAT),Mechanical Completion Dossier,Pre – Commissioning Dossier,Commissioning Dossier,Provisional Acceptance Certificate Book (PAC) போன்ற எல்லா டாகுமெண்ட்களும் ஆங்கிலத்தில் தான்.
வேலைக்குப் போனால் இப்படியென்றால் மேற்படிப்பும் ஆங்கிலம் தான்.
தமிழ் வழி பொறியியல் கல்வியில்,துறை சார்ந்த பாடங்களை தமிழ் வழியிலும்,ஆங்கிலத்தை ஒரு பாடமாகவும் படிக்கும் ஒருவன், வெளியில் வந்து இத்தனை விஷயங்களை ஆங்கிலத்திலேயே எதிர் கொண்டு வெற்றி பெற முடியும் எனில்
பனிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்து விட்டு வரும் ஒருவனால், நான்கு வருட பொறியியல் பாடங்களை ஆங்கிலத்தில் எதிர் கொள்ள முடியாதா என்ன????
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடப்பதில்லை.சில குறிப்பிட்ட கல்லூரிகளில் வருடந்தோறும் நடக்கிறது,சில குறிப்பிட்ட கல்லூரிகளில் நடப்பதே இல்லை.இதே நிலை தமிழ் வழி பொறியியல் கல்லூரிகளுக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்??
இவ்வளவு அவசரமாக இதை கொண்டு வருவதற்கான காரணம் என்ன???
முடியாத வேலைக்கு கோலகாலமாக திறப்பு விழா நடத்தி விட்டு,மீண்டும் வேலையைத் தொடர இது ஒன்றும் கட்டிடமில்லை.
ஒரு அதிகாரி
சில மாதங்கள் முன்பு நீயா நானாவில் நடிகர் சூர்யா,எழுத்தாளர் பாமரன் ஆகியோர் கலந்து கொண்ட கல்வி சம்பந்த பட்ட ஒரு நிகழ்ச்சி.ஒரு கல்வித்துறை அதிகாரி (பெயர் ஞாபகமில்லை)எல்லாரும் தங்கள் பிள்ளகளை, அரசு பள்ளிகளில் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்.சட்டென்று கோபி "அய்யா உங்க பேரன் எங்கு படிக்கிறார்???" என்று கேட்டதும் அவருக்கு பயங்கர கோபம்.என் பையன் அரசு பள்ளியில் தான் படித்தான்,என் பேரன் என் கண்ட்ரோலில் இல்லை, அவன் என் பையனின் கண்ட்ரோலில் என்றார்.
ஒரு அமைச்சர்
ஒரு அமைச்சர்
ஒன்றல்ல இரண்டல்ல... தொடர்ந்து 25-வது ஆண்டாக 'ப்ளஸ் டூ' தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழ கத்திலேயே முதலிடத்தைப் பிடித்து மகத்தான சாதனை புரிந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்! இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17 ஆயிரத்து 871 மாணவர்களில் 17 ஆயிரத்து 145 பேர் அதாவது 95.93 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்! 10 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருப்பதும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் 94 சதவிகிதம் என்பதும் இன்னும் இனிப்பான செய்தி. 157 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் சதம் அடித்திருக்கிறார்கள். மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 1,000 மதிப்பெண்ணை கடந்து சாதித்திருக் கிறார்கள், மாநில அளவிலும் பலர் ரேங்க் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், 20 கல்லூரிகளைக் கொண்ட இந்த மாவட் டத்தில் ஓர் அரசு கல்லூரிகூட கிடையாது. பக்கத்து மாவட்டங்களில்கூட நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி யும்... ஏன் ஒரு பாலிடெக்னிக்கூட உள்ள நிலையில், கல்வி வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை.
ஆனால், 20 கல்லூரிகளைக் கொண்ட இந்த மாவட் டத்தில் ஓர் அரசு கல்லூரிகூட கிடையாது. பக்கத்து மாவட்டங்களில்கூட நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி யும்... ஏன் ஒரு பாலிடெக்னிக்கூட உள்ள நிலையில், கல்வி வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை.
இதுபற்றி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. 'விருதுநகர் மாவட்டம் பரப்பளவில் சிறிய, அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை முன் னேறிய மாவட்டம். அதனால் அங்கே அரசு கல்லூரிகள் அமைக்கும் தேவை இப்போது இல்லை. தேவை ஏற்படும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.(நன்றி ஜூவி)
இப்படித்தான் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் திட்டமிடல்களும்,செயல் பாடுகளும்.
இவர்களை நம்பி???
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










