skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

செவ்வாய், 29 ஜூன், 2010

முன்னாள் காத‌லி

அழ‌கான‌ அமைதியுட‌ன்‌ இல்ல‌ம்
அன்பான அனுச‌ரணையுட‌ன் இல்லாள்
ஆசைக்கொன்றும் ஆஸ்திக்கொன்றுமாக‌
இரு பிள்ளைக‌ள்
கை நெறைய‌ ச‌ம்ப‌ளத்துட‌ன்
உத்யோக‌ம்
ப‌ழையன‌ எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்து
ந‌ல்லாத்தாண்டி இருந்தேன்

"ந‌ல்லாயிருக்கியா"னு நீ கேட்ப‌த‌ற்கு
முந்தைய‌ நொடி வ‌ரை.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:36 PM 14 comments
Labels: க‌விதை

புதன், 23 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010

கோவையில் இன்று 23-06-2010 முத‌ல் 27-06-2010 வ‌ரை ந‌ட‌க்க‌ப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்ப‌டும் ப‌ய‌ன் என்ன‌?ம‌க்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌ம் தான் வீணாகிற‌து என்று சில‌ ப‌திவ‌ர்க‌ள் இடுகை போட்டுள்ளார்க‌ள். 27ந் தேதி மாநாடு முடிவ‌டைகிற‌து,28 ந் தேதி ந‌ட‌க்கப் போகும் அதிச‌ய‌ங்க‌ள் குறித்து அர‌சு வெளியிட‌ப் போகும் அறிக்கை இதோ......

செம்மொழி மாநாட்டால் விளைந்த‌ ந‌ன்மைக‌ள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் ம‌ட்ட‌த்தை 149 அடியாக‌ உய‌ர்த்திக் கொள்ள‌ கேர‌ள‌ அர‌சு ச‌ம்ம‌த‌ம் தெரிவித்துள்ள‌து.அத‌ற்கான‌ க‌டிதத்தை கேர‌ள‌ நீர்ப்பாச‌ன‌ துறை அமைச்ச‌ர் பிரேம‌ச‌ந்திர‌ன் நேற்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து வ‌ழ‌ங்கினார்.

வ‌ருடா வ‌ருட‌ம் த‌மிழ‌க‌த்திற்கு சேர‌ வேண்டிய‌ த‌ண்ணீர் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌டும்,இனி எந்த‌ சூழ்நிலையிலும்,ம‌ழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற‌ மாட்டோம் என‌
க‌ர்நாட‌க‌ அர‌சு அறிவித்துள்ளது.

த‌மிழ‌க‌த்தின் அனைத்து ந‌திக‌ளும் இணைக்க‌ப்ப‌ட்டு விட்டதால் இனி விவ‌சாயிக‌ள் முப்போக‌ம் விளைவிக்க‌லாம்.அத‌ற்கு தேவையான‌ உர‌ங்க‌ளை அழ‌கிரி வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ உர‌க்கிட‌ங்கிலிருந்து பெற்றுக் கொள்ள‌லாம்,மேலும் அத‌ற்காகும் போக்குவ‌ர‌தது செல‌வை அர‌சே ஏற்றுக் கொள்ளும்.

க‌ட‌லில் மீன் பிடிக்க‌ச் செல்லும் மீன‌வ‌ர்க‌ள்,இனி இல‌ங்கை க‌ட‌ல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ள‌லாம்,அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் பிடித்த‌ மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே ச‌மைத்து சாப்பிட்டு வ‌ர‌லாம்.அத‌ற்கு தேவையான‌ அரிசி,எண்ணெய்,ம‌சாலா சாம‌ன்க‌ளை த‌ந்து உத‌வ‌ இல‌ங்கை அர‌சுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌ட்டுள்ளது.

த‌மிழ்நாட்டில் ந‌டை பெற்று வ‌ந்த‌ மின் திட்ட‌ப் ப‌ணிக‌ள் அனைத்தும் நேற்றுட‌ன் முடிந்து விட்ட‌து,ஆக‌வே இனி த‌மிழ‌க‌த்தில் மின் வெட்டு என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் த‌னியார் க‌ல்லூரிக‌ள் கூட்ட‌மைப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இன்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து இனிமேல் அனைத்து த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் எல்லாருக்கும் இல்வ‌ச‌க் க‌ல்வி அளிக்க‌ப் போவ‌தாக‌ "துண்டைப் போட்டு தாண்டி" உறுதிய‌ளித்துள்ள‌ன‌ர்.இனி அமைச்ச‌ரின் பிள்ளைக‌ளும்,ஆண்டியின் பிள்ளைக‌ளும் அருக‌ருகே அம‌ர்ந்து க‌ல்வி ப‌யிலலாம்.

பொது விநியோக‌ க‌டைக‌ளில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ 1 ரூபாய் அரிசி,இன்று முத‌ல் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்டு "பாசும‌தி" அரிசி  வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.மேலும் ப‌ருப்பு,காய்க‌றிக‌ள்,என்ணெய்,ம‌சாலாப் பொருட்க‌ள் முத‌ல் தாளிக்க‌ தேவையான‌ க‌டுகு,க‌றிவேப்பிலை வ‌ரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர் ப‌ற்றாக்குறை அற‌வே நீக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து,அதோடு ஒரு ஆசிரிய‌ருக்கு ஒரு மாற்று ஆசிரிய‌ர் (ச‌ப்ஸ்டியூட்)ஒருவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.முத‌ன்மை ஆசிரிய‌ர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவ‌ர் ப‌ணியை மேற்கொள்வார்.இத‌ன் மூல‌ம் ப‌ள்ளிக‌ளில் த‌ங்கு த‌டையில்லாம‌ல் வ‌குப்புக‌ள் ந‌டைபெறும்.

வேலைவாய்ப்பு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ப‌திவு செய்த‌ அனைவ‌ருக்கும் அர‌சு வேலை கிடைத்தாகி விட்ட‌து.இனி பள்ளிக‌ளில் ஒன்றாம் வ‌குப்பு சேரும் மாண‌வ‌ர்க‌ள்,பிற்கால‌த்தில் எந்த‌ அர‌சு அலுவ‌கல‌த்தில் வேலை செய்ய‌ விருப்ப‌மோ,அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் க‌டித‌ம் பெற்றுக் கொள்ள‌லாம்.

முத‌ல்வ‌ர்,துணை முத‌ல்வ‌ர் ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ சாலைக‌ளில் போக்குவ‌ர‌த்து ஒரு போதும் நிறுத்த‌ப்ப‌டாது.அவ‌ர்க‌ள் இனி இர‌வு ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல்,அதிகாலை ஆறு ம‌ணிக்குள் ம‌ட்டும் சாலையில் செல்வார்க‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் ப‌குதிக‌ளுக்கும் குடி த‌ண்ணீர் வ‌ழ‌ங்க‌ "அக்வாஃபீனா" நிறுவ‌ன‌த்துட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.குழாய்க‌ள் ப‌திக்கும் வேலைக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.இந்த‌ மாத‌ இறுதிக்குள் அனைவ‌ருக்கும் "அக்வாஃபீனா" த‌ண்ணீர் உறுதி.

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கும் சிற‌ப்பான ம‌ருத்துவ‌ சேவை வ‌ழ‌ங்கும் நோக்கில்,அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுட‌னும் அர‌சு ஒப்பந்த‌ம் போட்டுள்ள‌து.இனி அனைவ‌ரும் அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் இல‌வ‌ச‌ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இருண்டு கிட‌க்கும் ப‌னை விவ‌சாயிக‌ளின் வாழ்வில் ஒளியேற்ற‌, க‌ள் இற‌க்க‌ அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ க‌ல‌ய‌ம்,அரிவாள் போன்ற‌வ‌ற்றை அருகிலுள்ள காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் பெற்றுக் கொள்ள‌லாம்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துச் சாலைக‌ளும் ந‌மீதாவின் க‌ன்ன‌ம் போல் வ‌ழ‌வ‌ழ‌ப்பாக‌ மாற்ற‌ப்ப‌டும், அத‌ற்கான‌ ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இவ்வாறு அந்த‌ செய்திக்குறிப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
********************************************************************

இனி செம்மொழி மாநாடு ந‌ட‌த்திய‌தால் விளைந்த‌ "முக்கிய‌மான‌" ந‌ன்மைக‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் பிர‌ச்சினைக‌ளும் தீர்க்க‌ப்ப‌ட்டு விட்டதாலும்,அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ வேறு வ‌ழியில்லாத‌தாலும், தோன்றிய‌திலிருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை ம‌ட்டுமே செய்து வ‌ரும் திமுக‌,காங்கிர‌ஸ் த‌விர்த்த‌ அனைத்துக் க‌ட்சிக‌ளும் க‌லைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌.இதைக் கேள்விப்ப‌ட்ட‌ முத‌ல்வ‌ர்,"ம‌றப்போம் ம‌ன்னிப்போம்" என்ற‌ த‌மிழ‌ர் ப‌ண்பாட்டின் ப‌டி ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளை நேற்று அவ‌ர‌து இல்ல‌த்தில் ச‌ந்தித்தார்.இந்த‌ உண‌ர்ச்சிம‌யமான‌ ச‌ந்திப்பில் உட‌னிருந்த‌ அமைச்ச‌ர்க‌ள் துரைமுருக‌ன்,பொன்முடி,த‌யாநிதி மாற‌ன் ம‌ற்றும் ச‌சிக‌லா,வைகோ,ராம‌தாஸ், திருமா, விஜ‌ய‌காந்த்,பாண்டிய‌ன் ஆகியோர் சிந்திய‌ ஆன‌ந்த‌க் க‌ண்ணீரில் அந்த‌ ப‌குதியே வெள்ள‌க் காடான‌து.

செம்மொழி மாநாட்டோடு ந‌ட‌ந்த த‌மிழ் இணைய‌த்த‌ள‌ மாநாட்டின் மூல‌ம் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ க‌ற்றுக் கொண்ட‌ முத‌ல்வ‌ர், இனிமேல் யாருக்கும் க‌டித‌ம் எழுத‌ப் போவ‌தில்லை என‌ ச‌ப‌த‌ம் எடுத்துள்ளார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:35 PM 18 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா, புனைவு, மொக்கை

செவ்வாய், 22 ஜூன், 2010

பால்யம்



அப்பாவின் சைக்கிளில் தெருவ‌ல‌ம்
தாத்தாவின் மாட்டு வ‌ண்டியில் ஊர்வ‌ல‌ம்
அம்மா கொண்டு வ‌ரும் கொடிக்காப்ப‌ழ‌ம்
ஆச்சி வாங்கித் த‌ரும் ஆர‌ஞ்சு மிட்டாய்

க‌ள்ளன் போலிசு வெளையாட்டு
இடுப்பில் க‌யிற்றோடு கெண‌த்து நீச்ச‌ல்
அய்ய‌னார் க‌ம்மா ஆல‌ம‌ர‌ ஊஞ்ச‌ல்
திண்ணையில் கூட்டாஞ்சோறு

இவையேதும‌றியா
குழ‌ந்தையொன்று
டோராவின் ப‌ய‌ண‌ங்க‌ள் பார்த்த‌ப‌டி
கெல்லாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற‌து
த‌னியே.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:26 PM 12 comments
Labels: கவிதை

திங்கள், 21 ஜூன், 2010

வேலைவாய்ப்பு QA/QC Inspectors

QA/QC Interview Campaign
Mohammad Al Mojil Group,Saudi Arabia.

Outstanding Opportunities for Exceptional Professionals

With over US$ 800 million of projects currently in hand and a projected book order of another US$ 3 billion over the next five years, this highly respected and trusted Saudi Arabian industrial construction conglomerate is embarking on a major asset expansion phase. As part of this plan there is a need to recruit a number of outstanding construction professionals who can keep up with the firm's outstanding 50 year old record.

Position - QA/QC Inspectors (Piping,Welding,Civil,Electrical,Instrument,Painting)
CHENNAI
Date - 23-06-2010,24-06-2010
HOTEL RESIDENCY TOWER, NO 115, THAYAGRAJA ROAD, P. NAGAR, CHENNAI - 17, 

COCHIN
Date - 26-06-2010,27-06-2010
THE GATEWAY HOTEL,  SHANMUGHAM ROAD, MARINE DRIVE, COCHIN - 682011,
MUMBAI
Date - 28-06-2010,29-06-2010
HOTEL SUN N SAND, JUHU ROAD,  JUHU, MUMBAI - 57,

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:46 AM 6 comments
Labels: வேலைவாய்ப்பு

வியாழன், 17 ஜூன், 2010

அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்

த‌ன்னுடைய‌ வெளிப்ப‌டையான‌ செய‌ல்பாடுக‌ளின் மூல‌ம் பொது ம‌க்க‌ள் ம‌த்தியில் ந‌ற்பெய‌ர் பெற்றிருக்கும் நாம‌க்கல் மாவட்ட‌ ஆட்சியாளர் திரு சகாயம், கிராமங்களில் முகாம்கள் நடத்தி பட்டா, சிட்டா முதல் தேவைப்படும் அனைத்துச் சான்றிதழ்களையும் நேரடியாக மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ததுட‌ன் , கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் எனவும் கறாராக உத்தரவிட்டார்.(மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்கள், பணிபுரியும் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பது நடைமுறை விதி) இது, கிராம நிர்வாக அலுவலர்களை உசுப்பி விடவே, அவர்களில் பலரும் ஒன்று கூடி, ஆட்சியருக்கு எதிராக கடந்த 30.04.10 அன்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், இந்த விஷயம் பொதுமக்களை சீண்டிப் பார்க்கவே... சுமார் 4,000 விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
******************************************************************
தமிழக இ.எஸ்.ஐ. மருத்துவப் பிரிவின் இயக்குநரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநருமான புருஷோத்தம் விஜயகுமார் அவர்க‌ள், அவ்வ‌ப்போது மாறு வேட‌த்தில் மாநில‌ம் முழுவ‌துமுள்ள அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்குச் சென்று, ல‌ஞ்ச‌ம் வாங்குப‌வ‌ர்க‌ளுக்கும்,பணியில் க‌வ‌ன‌க்குறைவாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் த‌க்க‌ த‌ண்ட‌ணையை அளித்து வ‌ருகிறார்(கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மாறுவேடத்தில் புகுந்து சாட்டையைச் சுழற்றி வருகிறார் விஜயகுமார்).இவரது அதிரடி நடவடிக்கைகளால், மருத்துவத் துறையின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தி தெரிவிக்க... அவர்களைச் சமாதானப்படுத்தி, விஜயகுமாரைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்படி பச்சைக் கொடி காட்டுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்கிறார் புருஷோத்தம் விஜயகுமார்!

 ந‌ன்றி விக‌ட‌ன்

அண்மையில் ந‌டைபெற்ற‌ முத‌ல்வ‌ரின் ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பு நூல்க‌ள் வெளியீட்டு விழாவில் பேசிய‌ சென்னைப் ப‌ல்க‌லைக்"க‌ழ‌க‌" துணைவேந்த‌ர் திருவாச‌க‌ம் "முத‌ல் அமைச்ச‌ர் க‌ருணாநிதியின் எழுத்துக்க‌ள்தான் நோப‌ல் ப‌ரிசு பெற‌ த‌குதியான‌வை" என்று அல்ல‌க்கைக‌ளே கூச்ச‌ப்ப‌டும் ப‌டி ஒரு ப‌னிக்க‌ட்டி ம‌லையை வைத்தார்.இப்ப‌டிப்ப‌ட்ட‌ அதிகாரிக‌ள் ம‌த்தியில் திரு.ச‌காய‌ம் போன்ற‌வ‌ர்க‌ள் ந‌ம‌க்கு கிடைப்ப‌து அத்தி பூத்தாற் போல‌த்தான்.

க‌ட‌மையைச் செய்யும் இவ‌ரைப் போன்ற‌ அதிகாரிக‌ளை எதிர்ப்ப‌து என்ன‌ நியாய‌ம்???
********************************************************************************
நான் த‌மிழ்நாடு மின்சார‌ வாரிய‌த்தில் ஒரு வ‌ருட‌ ப‌யிற்சியில் இருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌மிது.

த‌மிழ்நாடு மின்சார‌ வாரிய‌த்தில் மாவ‌ட்ட‌ந்தோறும் MRT (Meter & Relay Testing ) என்றொரு பிரிவுண்டு.அந்த‌ மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ துணை மின் நிலைய‌ங்க‌ளின் தொழில்நுட்ப‌ ப‌ராம‌ரிப்பு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ ஒரு குழுவும்,‌ தொழிற்சாலைக‌ளின் (HT Service,LTCT Service) மின் அளவிக‌ள் க‌ண்காணிப்பு,சோத‌னை ம‌ற்றும் ப‌ராம‌ரிப்புக‌ளை மேற்கொள்ள‌ ம‌ற்றொரு குழுவும், த‌னித்த‌னி உத‌விப் பொறியாள‌ர் த‌லைமையில் இய‌ங்கும். தின‌ந்தோறும் ஒவ்வொரு தொழிற்சாலை அல்ல‌து துணை மின் நிலைய‌ம் என‌ அட்ட‌வ‌ணை வைத்துக் கொண்டு மாவ‌ட்ட‌ம் முழுவ‌தும்,சுழ‌ற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருப்பார்க‌ள்.இரு குழுவுக்கும் த‌னித்த‌னி வாக‌ன‌ வ‌ச‌திக‌ளுண்டு.இதில் துணை மின் நிலைய‌ங்க‌ள் செல்லும் குழு,குடிப்ப‌த‌ற்கு த‌ண்ணீர் முத‌ல் கொண்டு அலுவ‌ல‌த்திலிருந்தே எடுத்துச் செல்ல‌ வேண்டும். அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ மேல் வ‌ருமான‌மும் கிடையாது.

தொழிற்சாலைக‌ளுக்கு செல்லும் குழு கையை வீசிக் கொண்டு செல்வார்க‌ள்.எந்த‌ ஊருக்குச் செல்கிறார்க‌ளோ,அந்த‌ ஊரின் பிர‌ப‌ல‌மான் உண‌வ‌க‌த்தில் ம‌திய‌ உண‌வு தொழிற்சாலையின் சார்பாக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு விடும்.உதார‌ண‌த்திற்கு ராஜபாளைய‌ம் கூரைக்க‌டை, அருப்புகோட்டை குறிஞ்சி,சிவகாசி பெல் ம‌ற்றும் ப‌ல‌.இது த‌விர‌ மேல் வ‌ருமான‌மும் உண்டு.  இந்த‌ குழுவின் உத‌விப் பொறியாள‌ர் குறைந்த‌து தின‌மும் ஆயிர‌ம் ரூபாய் கிம்ப‌ள‌ம் இல்லாமல் வீடு செல்ல மாட்டார் என்ப‌து செவி வ‌ழிச் செய்தி.

இந்நிலையில் இரு உத‌விப் பொறியாள‌ர்க‌ளுக்கும் ச‌ண்டை மூண்ட‌து ப‌ல‌ர் பார்க்க‌.எத்த‌னை நாளைக்கு நான் ம‌ட்டும் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல‌??? நாற்காலியை மாற்றிக் கொள்ள‌லாம் என்று அவ‌ர் சொல்ல‌,நான் இந்த‌ ப‌த‌விக்கு வ‌ந்தே ஒரு வ‌ருட‌ம் தான் ஆகிற‌து முடியாது என‌ இவ‌ர் சொல்ல நில‌வ‌ர‌ம் க‌ல‌வ‌ர‌மான‌து.அன்றைய‌ தின‌ம் மாலையில் சமாதான‌ப் பேச்சுவார்த்தை செய‌ற்பொறியாள‌ர் முன்னிலையில் ந‌டைபெற்ற‌து.இரு உத‌விப் பொறியாள‌ர்க‌ளும் த‌த்த‌ம‌து ச‌ங்க‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.ஒருவ‌ர் நேர‌டியாக‌ உத‌விப் பொறியாள‌ர் ப‌ணிக்கு வ‌ந்த‌வ‌ர்,இவ‌ர் "ப‌ட்ட‌தாரிக‌ள்" ச‌ங்க‌த்தைச் சார்ந்த‌வ‌ர்.ம‌ற்றொருவ‌ர் ப‌த‌வி உய‌ர்வின் மூல‌ம் உத‌விப் பொறியாள‌ர் ப‌ணிக்கு வ‌ந்த‌வ‌ர்,இவ‌ர் "ப‌ட்ட‌ய‌தாரிக‌ள்" ச‌ங்க‌த்தைச் சார்ந்த‌வ‌ர்.பூட்டிய‌ அறைக்குள் ந‌ட‌ந்த‌ பேச்சுவார்த்தையின் முடிவில், இருவ‌ரும் இப்போதைக்கு அப்ப‌டியே தொட‌ர்வ‌தாக‌வும்,ஆறு மாத‌த்திற்கு பின்னர் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் நாற்காலிக‌ளை மாற்றிக் கொள்ளலாம் என‌வும் க‌டுமையான‌ விவாத‌த்திற்கு பின் முடிவாகியாக‌தாக‌ பின்ன‌ர் அறிந்தேன்.

இதில் இர‌ண்டு ச‌ங்க‌மும் ல‌ஞ்ச‌ம் வாங்க‌ கூடாது என்றெல்லாம் கூற‌வில்லை,ச‌ண்டை போட்டுக் கொள்ளாம‌ல் ச‌ரி ச‌ம‌மாக‌ பிரித்துக் கொள்ளுங்க‌ள் என்று தான் சொல்கின்ற‌ன‌!! அதுவும் ல‌ஞ்ச‌ காசில் வாங்கி குடுத்த‌ காபியையும்,போண்டாவையும் சாப்பிட்டு ஏப்ப‌ம் விட்ட‌ப‌டி.

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் ஸ்டாண்டில் உள்ள‌ ஆட்டோவைக் ம‌டிப்பாக்க‌த்திற்கு கூப்பிட்டால் 100 ரூபாய் சொல்வார்கள்,அதே நேர‌த்தில் சைதாப்பேட்டையிலிருந்து வ‌ரும் ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் 70 ரூபாய் தான் அதே இட‌த்திற்கு செல்ல‌.சில‌ நேர‌ங்க‌ளில் 20 ரூபாய் தான் 4 பேர் சேர்ந்து ப‌ய‌ணித்தால்.ரோட்டில் வேறு ஆட்டோவை நிறுத்தினால் ஸ்டாண்டிலிருந்து ஒருவ‌ர் ஓடி வ‌ந்து ஆட்டோவின் பின்புற‌ம் த‌ட்டுவார் "போ போ இங்க‌ நின்னு ஆள் ஏத்தாதே" என்று.ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ குறைந்த‌ ரேட்டுக்கு வ‌ராது,வ‌ருகிற‌ ம‌ற்ற‌ ஆட்டோக்க‌ளையும் வ‌ர‌ விட‌ மாட்டார்க‌ள்.இங்கு ம‌ட்டும‌ல்ல‌ சென்னையில் எல்லா ஏரியாக்க‌ளிலும் தின‌மும் காண‌க் கிடைக்கும் ஒரு நிக‌ழ்ச்சி.

இதே சென்னையில் மீட்ட‌ர் போட்டு ஆட்டோ ஓட்டுப‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ பாராவின் ப‌திவு.
ல‌க்கிலுக்கின் ப‌திவு.

பெரும்பாலான ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ள் சிஐடியு ச‌ங்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ள்.ஏழை எளிய‌ ம‌க்க‌ளின் ந‌ல்வாழ்வுக்குப் போராடும்? தோழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ச‌ங்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளை மாற்றலாமே? மீட்ட‌ர் போட்டு ஓட்டாவிட்டாலும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் நியாய‌மான‌ ரேட்டிலாவ‌து ஓட்ட‌ச் செய்யலாமே??ஒரு வேளை ஆட்டோவில் செல்ப‌வ‌ர்க‌ள் எல்லாரும் அம்பானிக‌ள் என்று நினைத்து விட்டார்க‌ளோ என்ன‌வோ?

எல்லாருமே தொழிலாள‌ர்க‌ளின் உரிமையைப் பாதுகாக்க‌ போராடுகிறோம்னு சொல்றாங்க‌!ச‌ரி அதிலாவ‌து ஒற்றுமையா இருக்காங்க‌ள‌ன்னு பார்த்தா அதுவும் கிடையாது.ஒவ்வொரு க‌ட்சிக்கும் த‌னித்த‌னியே தொழிற்ச‌ங்க‌ங்க‌ள்! நாளித‌ழின் ஒரு ப‌க்க‌த்தில் அர‌சை எதிர்த்து ஒரு ச‌ங்க‌ம் போராட்ட‌ அறிவிப்பு செய்தால்,அதே நாளித‌ழின் ம‌ற்றொரு ப‌க்க‌த்தில் எங்க‌ள் ச‌ங்க‌ம் போராட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளாது என்று வேறொரு ச‌ங்க‌த்தின் அறிவிப்பு.

இதில் சில‌ ச‌ங்க‌ங்க‌ள் தேர்த‌ல் நெருக்க‌த்தில் க‌ழ‌க‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு தெரிவித்து வெளிப்ப‌டையாக‌ அறிக்கைக‌ள் வேறு விடுகின்ற‌ன‌.

ஜ‌ன‌நாயக‌ நாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் என்கிறீர்க‌ளா?? அதுவும் ச‌ரிதான்.!‌
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:48 AM 4 comments
Labels: அர‌சிய‌ல், அனுப‌வ‌ம்

வியாழன், 10 ஜூன், 2010

ப‌ட்ச‌ணக் க‌டை


என்ன‌ தான் ந‌ம்மூரு "ப‌வ‌ன்" வ‌கைய‌றா ஹோட்ட‌ல்க‌ள் இங்க‌ இருந்தாலும்,அவை முனியாண்டி விலாசுக‌ளுக்கு ஈடாகா!குறிப்பாக‌ ச‌ர‌க்க‌டித்து விட்டுச் செல்லும் ச‌ம‌ய‌ங்க‌ளில்.......எங்கூட‌ ப‌ணி எடுக்கும் சேட்ட‌ன் ஒருவ‌ர் சிக்க‌ன‌வாதி (எப்ப‌டின்னா ஆயிர‌ம் திராம்ஸ் ச‌ர‌க்குக்கு செல‌வ‌ளிக்க‌லாம் ஆனா ஒரு திராம்ஸ் கூட‌ சாப்பாட்டுக்கு எக்ஸ்ட்ரா செல‌வ‌ளிக்க‌ கூடாது)  அவ‌ருக்கு ச‌ர‌க்க‌டித்தால் க‌ண்டிப்பாக‌ மசாலா தோசை தான் வேணும் அதுவும் ரைட் சைடுல‌ சிக்க‌ன் சுக்கா,லெப்ட் சைடுல ஃபுல் பாயிலோட‌.ஒரு த‌ட‌வை போதைல‌ செட்டிநாடுக்கு கூட்டிட்டுப் போய்,ம‌று நாள் தியான‌ நிலை தெளிஞ்ச‌தும்,பில்ல‌ பார்த்து த‌மிழ்லேயே அசிங்க‌மா திட்டிட்டாரு.அதுல‌ இருந்து எப்ப‌வும் இந்த‌ க‌டைதான்.

அபுதாபி -  மிஸ்பா 

அபுதாபி டூரிஸ்ட் கிள‌ப் ஏரியால‌ எமிரேட்ஸ் பிளேசா ஹோட்ட‌ல் ப‌க்க‌த்துல‌ இருக்கு,எமிரேட்ஸ் பிளேசா ஹோட்ட‌ல் பார்ல‌ குடி(ளி)ச்சுட்டு  வெளியே வ‌ந்த‌வுட‌ன் வ‌ல‌து ப‌க்க‌ம் திரும்புனா மிஸ்பா தெரியும்.ஹோட்ட‌ல் முத‌லாளி சேட்ட‌னா இருந்தாலும் த‌மிழ்ப்ப‌ற்றோட‌!! "ஹோட்ட‌ல் மிஸ்பா ‍தென்னிந்திய‌ உண‌வுக‌ள் கிடைக்கும்"னு தெளிவா எழுதி வ‌ச்சிருப்பாரு.

இட்லி,தோசை,ச‌ப்பாத்தி,ப‌ரோட்டா,சிக்க‌ன்,ம‌ட்ட‌ன்,கேர‌ளா ஸ்டைல் பீஃப் ஃபிரை என‌ எல்லாம் கெடைக்கும் ச‌காய விலையில்.அதெல்லாம் விட‌ பெரிய‌ விச‌ய‌ம் என்ன‌ அலும்பு ப‌ண்ணினாலும் க‌ண்டுக்க மாட்டாங்க‌.ந‌ம்மாளு‌ எண்ணெய் இல்லாம‌ ஒரு ஆனிய‌ன் ர‌வா,நெய் இல்லாம‌ ஒரு நெய் ரோஸ்ட்டுன்னு ஆர்ட‌ர் குடுத்தாலும் ஒகே சார்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பாங்க‌! அனுப‌வ‌ம்.ந‌ம்மாளு இருக்குற‌ நெலைமைக்கு தோச‌ க‌ல்லையே கொண்டு வ‌ந்து வ‌ச்சாலும் ஒண்ணும் தெரியாது,ஏன்னா எல்லாரும் கொஞ்ச‌மா தான் குடிப்பாங்க‌‌!

க‌த்தார் - பெய‌ரில்லா க‌டை

அல்கோரிலிருந்து ராஸ்ல‌பான்(RASLAFFAN) செல்லும் வ‌ழியில் லேப‌ர் கேம்ப் ஏரியாவில் உள்ள‌து.இந்த‌ சேட்ட‌னுக்கு எந்த‌ மொழிப் ப‌ற்றுமே கிடையாது.ஆமாங்க‌ க‌டைக்கே பேரே கிடையாது!பேர் இல்லாவிட்டாலும் எல்லாரும் அழைப்ப‌து க‌றிமீன் ஹோட்ட‌ல்.இங்க‌ க‌றிமீன் பிரை தான் ஸ்பெச‌ல்,வியாழ‌ன் ம‌ற்றும் வெள்ளி இர‌வுக‌ளில் இதுக்காக‌ ஒரு கூட்ட‌மே காத்துக் கெட‌க்கும்.மசாலால‌ ஊற‌ப்போட்டு ரெடியா வ‌ச்சுருப்பாங்க‌,ஆர்ட‌ர் குடுத்த‌துக்க‌ப்புற‌ம் பிரை ப‌ண்ணி த‌ருவாங்க‌.சாதாரண‌மான‌ நாளில் 15 நிமிஷ‌ம் ஆகும்.வியாழ‌ன் அல்ல‌து வெள்ளின்னா ந‌ம்ம‌ அதிர்ஷ்ட‌த்த‌ பொறுத்தது.ஒரு பிரை,ரெண்டு ப‌ரோட்டா சாப்பிட்டா சும்மா கும்முன்னு இருக்கும்.

ஒரு பிரையோட‌ விலை 8 க‌த்தார் ரியால்.ந‌ம்மூர் காசுக்கு குத்து ம‌திப்பா 96 ரூபா வ‌ரும்.(சென்னை ம‌டிப்பாக்க‌த்திலுள்ள‌ ஓரிய‌ன் ரெஸ்ட்டாரெண்டில் ஒரு க‌‌றிமீன் பிரை 250 ரூபாய்........ ம் ந‌ல்லாருங்க‌டே ம‌க்கா)

ச‌வுதி - லெப‌னான்

என்ன‌டா இவ‌ன் ச‌வுதின்னு சொல்லிட்டு லெப‌னான்னும் சொல்றான்னு குழ‌ம்புறிங்க‌ளா?? இந்த‌ க‌டை ச‌வுதில‌தான் இருக்கு,க‌டை பேர் லெப‌னான் 
இங்க‌ ச‌ர‌க்க‌டிச்சுட்டு (ச‌ர‌க்கே கெடைக்காது) போக‌ முடியாது, ஒரு வேளை ச‌திக்கி (ந‌ம்மூரு ப‌ட்டை த‌ராளாமா கிடைக்கும்)அடிச்சாலும் போக‌ முடியாது.இப்ப‌டிப்ப‌ட்ட‌ குடிம‌க‌ன்க‌ளுக்காக‌ ஹோம் டெலிவ‌ரி வ‌ச‌தி உண்டு.

ச‌வுதி முழுக்க கிளைக‌ள் இருக்குன்னு சொல்றாங்க‌.நான் த‌மாம் ம‌ற்றும் ர‌ஹிமா கிளைக‌ளில் சாப்பிட்டுருக்கேன்.இது ஒரு அர‌பு ஹோட்ட‌ல், ரோஸ்ட‌டு  சிக்க‌ன்  சாப்பிட‌ ம‌ட்டும் இங்கு போவோம்.ரோஸ்ட‌டு சிக்க‌ன் கேஎஃப்சி மாதிரி தான் இருக்கும், ஆனா கேஎப்சிய‌ விட‌ ந‌ல்லாருக்கும். ப‌ன்னுக்குப் ப‌திலா சுட‌ச்சுட‌ ரொட்டி மூங்கில் கூடைல‌ வ‌ச்சு குடுத்துட்டே இருப்பாங்க‌.பூண்டு ச‌ட்னி கெட்டியா, சூப்பரா இருக்கும். கேஎஃப்சி மாதிரி சுண்ணாம்பு ட‌ப்பால‌ வ‌ச்சு குடுக்காம‌ எவ்ளோ கேட்டாலும் குடுப்பாங்க‌.விலையும் கேஎஃப்சியோட‌ ஒப்பிடுகையில் குறைவுதான்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:15 AM 10 comments
Labels: அனுப‌வ‌ம்
Widget by Abu-farhan
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ▼  ஜூன் (6)
      • முன்னாள் காத‌லி
      • செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010
      • பால்யம்
      • வேலைவாய்ப்பு QA/QC Inspectors
      • அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்
      • ப‌ட்ச‌ணக் க‌டை
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio