skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 26 மே, 2010

மீண்டும்....(முகில‌னுக்காக‌)

சென்ற‌ ப‌திவின் தொட‌ர்ச்சி ந‌ண்ப‌ர் முகில‌னின் பின்னூட்ட‌ங்க‌ளுக்கான ப‌தில்க‌ள்

முகிலன் சொன்னது…
//No one stopped you from learning HINDI. There were so many Hindi Matir's in each town (even small towns like Aruppukottai) which were encouraging students to learn Hindi. If you were interested you could have learnt Hindi. Only "Hindi Thinippu" was opposed. Who are they to ask me to learn one language and not the other. i have my own freedom and I should be able to learn whatever language I like. And only one's mother tongue should be forced in (Otherwise, that language would die).//

எங்க‌ளை யாரும் ஹிந்தி ப‌டிக்க‌ கூடாதுன்னு த‌டுக்க‌ வில்லை.நீங்க‌ சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான‌ சின்ன‌ ஊர்க‌ளிலும் ஹிந்தி சொல்லித் த‌ர‌ ஆள் இருந்தும் ப‌டிக்காமல் விட்ட‌து எங்க‌ள் குற்றமே.

நான் ப‌டிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுட‌ன்  நேரே போகிற‌ இட‌ம்  தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட‌ அங்க‌ போய் தான்.தீக்குச்சிக‌ள் அடைக்க‌ப்ப‌ட்ட‌ தீப்பெட்டியில் ஒரு சின்ன‌ ஸ்டிக்க‌ர் (மைதா மாவில் காய்ச்சிய‌ ப‌சை தான் ப‌ய‌ன்ப‌டுத்துவார்க‌ள்) ஒட்டி காய‌ வைத்து,10 தீப்பெட்டிக‌ளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (ட‌ச‌ன்ன்னு சொல்வார்க‌ள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய‌ வைத்து,அந்த‌ 10 ட‌ச‌ன்க‌ளை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க‌) செய்து,அதுக்கு மேல் க‌ம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் ச‌ம்ப‌ள‌ம் 40 பைசா.இது தான் எங்க‌ அம்மாவுக்கு வேலை.

ப‌க‌ல் முழுவ‌தும் தீப்பெட்டியில் ஸ்டிக்க‌ர் ஒட்டி,பெரிய‌ கோணிப்பைக‌ளை விரித்து, வெயிலில் காய‌ வைத்திருக்கும் அம்மா, சாய‌ந்திர‌ம் நான் போன‌தும் தான் இந்த‌ பேக்கிங் வேலைய‌ தொட‌ங்குவார்க‌ள்.அம்மா முன் அம‌ர்ந்து ப‌த்து ப‌த்து பெட்டியாக‌ அடுக்கிக் கொடுக்கும் வேலை என‌க்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவ‌த‌ற்கே எட்டு,ஒன்ப‌து ம‌ணி ஆகி விடும். அத‌ன் பிற‌கு சாப்பிட்டு,வீட்டுப் பாட‌ம் செய்து அல்ல‌து ப‌டித்து விட்டு ப‌டுத்தால் விடிவ‌தே தெரியாது.

என்னுடைய‌ ப‌க்க‌த்து வீட்டு ந‌ண்ப‌ன் செல்வ‌த்தின் குடும்ப‌ம் விவ‌சாய‌க் குடும்ப‌ம்.அவ‌ன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்ட‌த்து போய், அங்கு அவ‌ங்க‌ அம்மா,அப்பா,அக்கா ஏற்கென‌வே ப‌றித்து வைத்த‌ காய்க‌றிக‌ளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவ‌னுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இர‌ண்டு பைக‌ளில் புட‌ல‌ங்காய்,இவ‌ற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் க‌மிஷ‌ன் ம‌ண்டியில் குடுத்துட்டு,9 ம‌ணிக்கு ஆர‌ம்பிக்கும் ப‌ள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க‌,விறுவிறுக்க‌ வ‌ந்து சேர்வான்.

மீண்டும் ஸ்கூல் விட்ட‌தும் க‌மிஷ‌ன் ம‌ண்டிக்குப் போய் க‌ண‌க்கு முடித்து, காலையில் கொண்டு வ‌ந்த‌ சாக்கு ம‌ற்றும் பைக‌ளோடு வீடு திரும்புவான்.

ப‌டிக்கும் கால‌ங்க‌ளில் இப்ப‌டித்தான் எங்க‌ பொழுதுக‌ள் போயின‌.எங்க‌ ஊரில் உள்ள‌ பெரும்பாலான குடும்ப‌ங்க‌ளில் இது தான் நெல‌மை. ஒன்னு விவசாயம் சார்ந்த‌தாக‌ அல்ல‌து தீப்பெட்டித் தொழில் சார்ந்த‌தாக‌. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்க‌ன் ஹிந்தி ப‌டிப்ப‌த‌ற்கு ஏது நேர‌ம், உண்டான‌ பாட‌ங்க‌ளை ப‌டித்து பாஸ் செய்வ‌தே பெரிய‌ விச‌ய‌ம். அதில் வேறொரு நெருக்க‌டி உண்டு, அது வெறும‌னே பாஸ் ம‌ட்டும் செய்தால், ப‌குதி நேர‌மாக‌ செய்து கொண்டிருந்த‌ தீப்பெட்டி வேலையும், விவ‌சாய‌மும் முழு நேர‌த் தொழிலாக‌ மாறி விடும் அபாய‌ம்.அப்ப‌டி நெறைய‌ பேருக்கு ஆகியிருக்கிற‌து.

ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ம‌திப்பெண்க‌ள் எடுத்தால் ம‌ட்டுமே முன்னோக்கிச் செல்ல‌ முடியும்.இந்த‌ நிலைமையில் ஹிந்தி ப‌டிக்க‌ ஆர்வ‌மிருந்தால் ம‌ட்டும் போத‌தாது.வ‌ச‌தியும்,வாய்ப்பும் கூட‌ இருக்க‌ வேண்டும்.ஒரு வேளை எல்லா ப‌ள்ளிக‌ளிலேயும் ஹிந்தியை ஒரு பாட‌மாக‌ வைத்திருந்தால் எங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளும் ப‌டித்திருப்போம்.

ச‌ரி ஹிந்தி தெரியாத‌து அவ்ளோ பெரிய‌ விஷ‌ய‌மா என்ன‌???
சென்னையில் வேலை செய்யும் வ‌ரை அது ஒரு பிர‌ச்சினையாக‌ தெரிய‌வில்லை.முத‌ன் முதலில் பிர‌ச்சினையான‌து வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற‌ போது தான்.

உன்னைய எவ‌ன் வெளிநாட்டுக்குப் போக‌ சொன்னான் ??
ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு சொந்த‌ ஊர்ல‌ வேலை இல்ல‌,ச‌ரி நேரா அப்பாவோட‌ க‌ம்பெனில‌ போய் வேலைக்கு சேர‌லாமான்னா எங்க‌ அப்பாவுக்கு விஜ‌ய் ம‌ல்லையா மாதிரியோ இல்ல‌ அம்பானி மாதிரியோ எந்த‌ க‌ம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த‌ நாலு வ‌ருட‌ங்க‌ளில் மிச்ச‌மான‌ காசை வைத்து நிஜ‌ வீடு அல்ல‌ ஒரு வீட்டோட‌ மாட‌ல‌ கூட‌ க‌ட்ட‌ முடியாதுன்னு தெரிஞ்ச‌ப்ப‌ வேற‌ என்ன‌ ப‌ண்ற‌து?

எப்ப‌டியும் பிற‌ந்த‌ ஊர்ல‌ பிழைக்க‌ முடியாது ,வெளியூர்க்குத் தான் போக‌ணும்னு ஆன‌துக்க‌ப்புற‌ம்  சென்னையை விட‌ ச‌வுதி ந‌ல்லதா தெரிஞ்ச‌து.அப்பாவும் அம்மாவும் அடிக்க‌டி சொல்லும் "நாங்க‌ தான் இப்ப‌டி க‌ருமாய‌ப் ப‌ட்டுக்கிட்டு கெட‌க்கோம் நீயாவ‌து ஒரு ந‌ல்ல‌ நெலைக்கு வ‌ந்தாதான் ந‌ம்ம‌ குடும்ப‌ம் நிமிர‌ முடியும்,உன்னைய‌த்தான் நாங்க‌ ந‌ம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற‌ வார்த்தையை நிஜ‌மாக்க‌ வேண்டுமென்றால் வெளிநாடு செல்வ‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை.

மும்பைல‌ சிக்கி சீர‌ழிஞ்சு, ஒரு வ‌ழியா ச‌வுதில‌ ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற‌ ஹிந்தி வார்த்தைக‌ள் தெரிஞ்சுகிட்டு, த‌மாம்ல‌ போய் இற‌ங்குனா அங்க‌ அடுத்த‌ பிர‌ச்சினை.நான் வேலைக்கு போன‌ க‌ம்பெனில‌ "பிலிப்பைன்ஸ்" ம‌க்க‌ள் தான் மெஜாரிட்டி.தின‌ம் காலையில அரைம‌ணி நேர‌ம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு ந‌ட‌க்கும், வேலையின் போது க‌டைப் பிடிக்க‌ வேண்டிய‌ பாதுகாப்பு விஷ‌ய‌ங்க‌ள்,முன் தின‌ம் ந‌ட‌ந்த‌ ஏதேனும் ஒரு அச‌ம்பாவித‌ம்,இனி அது போல‌ ந‌ட‌க்காமல் இருக்க‌ தேவையான முன்னெச்ச‌ரிக்கை ப‌ற்றிப் பேசுவார்க‌ள்.

ஒரு ப‌க்க‌ம் "பிலிப்பைன்ஸ்" ம‌க்க‌ளுக்காக‌ அவ‌ங்க‌ மொழில‌யும் (த‌க‌லாக்),இன்னொரு ப‌க்க‌ம் இந்திய‌ன்,பாகிஸ்தானி,நேபாளி,வ‌ங்காள‌ தேச‌ ம‌க்க‌ளுக்காக‌ ஹிந்தியிலேயும் ந‌ட‌க்கும்.ந‌ம‌க்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன‌.

ந‌ம‌க்கு கீழே வேலை செய்ற‌ அம்ப‌து பேரை அவ‌ங்க‌ மொழி தெரியாம‌ல் வேலை வாங்குவ‌தென்ப‌து க‌ஷ்ட‌ம்.ஹிந்தி க‌ற்றுக் கொள்வ‌து ஒண்ணும் பெரிய‌ விஷய‌மில்லை என்ப‌வ‌ர்க‌ளுக்கு,உண்மைதான், இந்த‌ ஆர‌ம்ப‌ நிலை த‌டுமாற்ற‌ங்க‌ளை தாக்குப்பிடித்து நின்றால் ம‌ட்டுமே அது சாத்திய‌ம்..
*******************************************
முகிலன் சொன்னது…
//தமிழ் வழியில் கல்வி கற்றால் வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வேலை பார்க்க முடியாது என்று சொன்னால் அது அறிவின்மை.
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது//
//And Dr.Mannar Jawahar also says, they will teach English to these Tamil Medium students for the first three years. I assume they would teach spoken english and communication skills in these years. (I don't think we need to know anything other than these).//

ம‌ற்ற‌ துறைக‌ளில் எப்ப‌டியோ நான் வேலை செய்யும் பெட்ரோலிய‌த்துறையில் (Oil & Gas) வெறும் டிகிரி ம‌ட்டும் போததாது.ம‌ற்ற‌ சில‌ சர்வ‌தேச‌ தர‌முள்ள சான்றித‌ழ் ப‌டிப்புக‌ளும் தேவை

அவ‌ற்றில் சில‌
*American Welding Soeiety
*CSWIP
*API
*NACE
*BGAS
*NCPCCI

ஒரு மெக்கானிக்க‌ல் எஞ்சினிய‌ரின் ப‌யோடேட்டாவிலிருந்து
EDUCATION:
►        BE  mechanical engineering (1983)
►        CSWIP 3.2 by TWI, UK
►        CSWIP Painting B Gas Gr3
►        Certified Welding Inspector by  AWS(1993-2002) 
►        ISO9001-Lead Assessor course  
►        Internal Auditor course 
►        ASNT Level II in RT,UT,MT,PT  
►        RT Film interpretation course 

இது எல்லாம் ப‌டிக்காவிடில் இந்த‌ துறையில் வேலையே கிடைக்காதா என்ன‌?
 கிடைக்க‌லாம்,பெரும்பாலான ந‌ல்ல‌ க‌ம்பெனிக‌ளில் ப‌ணிபுரிய‌ இவை அவ‌சிய‌ம் தேவை.சாப்ட்வேர் எஞ்சினிய‌ராக‌, காமா சோமா இன்போடெக் என்ற‌ வெளியே தெரியாத‌ க‌ம்பெனியில் வேலை செய்வ‌த‌ற்கும்,அதே சாப்ட்வேர் எஞ்சினிய‌ராக‌ இன்போசிஸ்,டிசிஸ்,விப்ரோ போன்ற‌ க‌ம்பெனிக‌ளில்வேலை செய்வ‌த‌ற்கும் வித்தியாச‌ம் உள்ள‌து அல்ல‌வா???
 மேலும் அந்த‌ காமா சோமா க‌ம்பெனிக‌ளில் கூட‌ ,ஒரு எஞ்சினிய‌ர் அடுத்த‌ நிலைக்கு உய‌ர‌ வேண்டுமென்றால் இவை அவ‌சிய‌ம்.ஏனெனில் இவை எல்லாமே கிளைய‌ண்ட்டோட‌ தேவைக‌ள்.

மேல‌ சொன்ன‌ சான்றித‌ழ் ப‌டிப்புக‌ள் எல்லாம்  ஆங்கில‌த்தில் ம‌ட்டுமே இருக்கும்.அதுவும் கிளாஸ் ரூம் கோச்சிங் எல்லாம் கிடையாது, வெறும் ஐந்து நாள் செமினார் ஸ்டார் ஹோட்ட‌லில் (சென்னையில் ச‌வேராவில் ந‌ட‌க்கும்)வைத்து ந‌ட‌த்தி விட்டு ஆறாவ‌து நாள் தேர்வு வைப்பார்க‌ள்.

 இது இல்லாம‌ல் தின‌சரி வேலையில் உப‌யோக‌ப் ப‌டும் Method Statement,Quality Control Procedures,Inspection & Test Plan,Specifications,Factory Acceptance Test Documents (FAT),Site Acceptance Test Documents (SAT),Mechanical Completion Dossier,Pre – Commissioning Dossier,Commissioning Dossier,Provisional Acceptance Certificate Book (PAC) போன்ற‌ எல்லா டாகுமெண்ட்க‌ளும் ஆங்கில‌த்தில் தான்.

 வேலைக்குப் போனால் இப்ப‌டியென்றால் மேற்ப‌டிப்பும் ஆங்கில‌ம் தான்.

த‌மிழ் வ‌ழி பொறியிய‌ல் க‌ல்வியில்,துறை சார்ந்த‌ பாட‌ங்க‌ளை த‌மிழ் வ‌ழியிலும்,ஆங்கில‌த்தை ஒரு பாட‌மாக‌வும் ப‌டிக்கும் ஒருவ‌ன், வெளியில் வ‌ந்து இத்த‌னை விஷ‌ய‌ங்க‌ளை ஆங்கில‌த்திலேயே எதிர் கொண்டு வெற்றி பெற‌ முடியும் எனில்

ப‌னிரெண்டு ஆண்டுக‌ள் ப‌ள்ளியில் ஆங்கில‌த்தை ஒரு பாட‌மாக‌ ப‌டித்து விட்டு வ‌ரும் ஒருவ‌னால், நான்கு வ‌ருட‌ பொறியிய‌ல் பாட‌ங்க‌ளை ஆங்கில‌த்தில் எதிர் கொள்ள முடியாதா என்ன‌????

த‌மிழ்நாட்டில் உள்ள‌ எல்லா பொறியிய‌ல் கல்லூரிக‌ளிலும் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூ ந‌ட‌ப்ப‌தில்லை.சில‌ குறிப்பிட்ட க‌ல்லூரிக‌ளில் வ‌ருட‌ந்தோறும் ந‌ட‌க்கிற‌து,சில‌ குறிப்பிட்ட‌ கல்லூரிக‌ளில் ந‌ட‌ப்ப‌தே இல்லை.இதே நிலை த‌மிழ் வ‌ழி பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ளுக்கும் வ‌ராது என்ப‌த‌ற்கு என்ன‌ நிச்ச‌ய‌ம்??

இவ்வ‌ளவு அவ‌ச‌ர‌மாக‌ இதை கொண்டு வ‌ருவ‌த‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌???

முடியாத‌ வேலைக்கு கோல‌கால‌மாக‌ திற‌ப்பு விழா ந‌ட‌த்தி விட்டு,மீண்டும் வேலையைத் தொட‌ர‌ இது ஒன்றும் கட்டிட‌மில்லை.

ஒரு அதிகாரி
சில‌ மாத‌ங்க‌ள் முன்பு நீயா நானாவில் ந‌டிக‌ர் சூர்யா,எழுத்தாள‌ர் பாம‌ர‌ன் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட க‌ல்வி ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌ ஒரு நிக‌ழ்ச்சி.ஒரு க‌ல்வித்துறை அதிகாரி (பெய‌ர் ஞாப‌க‌மில்லை)எல்லாரும் த‌ங்க‌ள் பிள்ளக‌ளை, அர‌சு ப‌ள்ளிக‌ளில் க‌ல்வி க‌ற்க‌ அனுப்ப‌ வேண்டும் என்று ஜ‌ல்லிய‌டித்துக் கொண்டிருந்தார்.ச‌ட்டென்று கோபி "அய்யா உங்க‌ பேர‌ன் எங்கு ப‌டிக்கிறார்???" என்று கேட்ட‌தும் அவ‌ருக்கு ப‌ய‌ங்க‌ர‌ கோப‌ம்.என் பைய‌ன் அர‌சு ப‌ள்ளியில் தான் ப‌டித்தான்,என் பேர‌ன் என் க‌ண்ட்ரோலில் இல்லை, அவ‌ன் என் பைய‌னின் க‌ண்ட்ரோலில் என்றார்.

ஒரு அமைச்ச‌ர்
ஒன்றல்ல இரண்டல்ல... தொடர்ந்து 25-வது ஆண்டாக 'ப்ளஸ் டூ' தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழ கத்திலேயே முதலிடத்தைப் பிடித்து மகத்தான சாதனை புரிந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்! இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17 ஆயிரத்து 871 மாணவர்களில் 17 ஆயிரத்து 145 பேர் அதாவது 95.93 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்! 10 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருப்பதும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் 94 சதவிகிதம் என்பதும் இன்னும் இனிப்பான செய்தி. 157 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் சதம் அடித்திருக்கிறார்கள். மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 1,000 மதிப்பெண்ணை கடந்து சாதித்திருக் கிறார்கள், மாநில அளவிலும் பலர் ரேங்க் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால், 20 கல்லூரிகளைக் கொண்ட இந்த மாவட் டத்தில் ஓர் அரசு கல்லூரிகூட கிடையாது. பக்கத்து மாவட்டங்களில்கூட நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி யும்... ஏன் ஒரு பாலிடெக்னிக்கூட உள்ள நிலையில், கல்வி வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை. 

இதுபற்றி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. 'விருதுநகர் மாவட்டம் பரப்பளவில் சிறிய, அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை முன் னேறிய மாவட்டம். அதனால் அங்கே அரசு கல்லூரிகள் அமைக்கும் தேவை இப்போது இல்லை. தேவை ஏற்படும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.(ந‌ன்றி ஜூவி)

இப்ப‌டித்தான் இருக்கும் அதிகார‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளின் திட்ட‌மிட‌ல்க‌ளும்,செய‌ல் பாடுக‌ளும்.

இவ‌ர்க‌ளை ந‌ம்பி???
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:54 PM 40 comments
Labels: அனுப‌வ‌ம், துறை சார்ந்த‌து

திங்கள், 24 மே, 2010

த‌மிழ் வ‌ழிக் கொலை

எல‌க்ட்ரிக‌ல் எஞ்சினிய‌ரீங் இல்  அடிப்ப‌டை Ohms Law.ஒரு எல‌க்ட்ரிக‌ல் எஞ்சினிய‌ரை தூக்க‌த்தில் எழுப்பி கேட்டாலும் இதை ச‌ரியாக‌ சொல்ல‌ணும்னு பாட‌ம் ந‌ட‌த்தும் போது எங்க‌ லெக்ச‌ர‌ர் சொல்வார்.

Ohms Law:
At Constant Temperature the current through a conductor is directly proportional to the potential difference applied across its ends.
இதை அப்ப‌டியே த‌மிழ் ப‌டுத்தினா

மாறாத‌ வெப்ப‌ நிலையில் ஒரு மின் க‌ட‌த்தியின் ஊடாக‌ செல்லும் மின்னோட்ட‌மான‌து,அத‌ன் இரு முனைக‌ளில் அளிக்க‌ப்பட்ட‌ மின்ன‌ழுத்த‌ற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

த‌மிழிங்கிலிஷ்ல‌ சொன்னா

மாறாத‌ வெப்ப‌ நிலையில் ஒரு க‌ன்ட‌க்ரின் வ‌ழியாக‌  செல்லும் க‌ர‌ண்ட்,அத‌ன் இரு முனைக‌ளில் அளிக்க‌ப்பட்ட‌ வோல்டேஜிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

என்ன‌ இப்ப‌வே க‌ண்ணைக் க‌ட்டுதா ???  இன்னும் இருக்கு பாருங்க‌

ஓம்ஸ் லாவை ப‌ய‌ன்படுத்தி  அடிப்ப‌டை ஃபார்முலா

V = I*R
I = V/R
R = V/I
இங்கு
V = VOLTAGE
I = CURRENT
R = RESISTANCE
இத‌ த‌மிழ்ல‌ சொன்னா

மி = மி*மி
மி = மி/மி
மி = மி/மி
மி = மின்ன‌ழுத்த‌ம் (Voltage)
மி‍ = மின்னோட்ட‌ம் (Current)
மி = மின்த‌டை (Resistance)

ந‌ல்லாத் தான‌டா இருந்தா ஏன் இப்ப‌டியெல்லாம்னு தோணுதா??

நான் ந‌ல்லாத்தான்  இருக்கேன் நாட்ல‌ சில‌ பேர் இப்ப‌டி ஆயிட்டாங்க‌

இங்க‌ பாருங்க‌ ந‌ம்ம‌ ம‌ன்ன‌ர் சொல்ற‌த‌
//தமிழ் வழியில் பொறியியல் படிப்பு வரும் கல்வியாண்டு முதல் துவங்கப்படுகிறது. இதற் கென 1,800 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒருசில குறியீட்டு வார்த்தைகளை நேரடியாக ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் பொறியியல் படிப்பவர்களுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு கூடுதலாக ஆங்கில வகுப்புகளும் எடுக்கப்படும்.

சீனா,ஜ‌ப்பான்,தைவான் போன்ற‌ நாடுக‌ளில் பொறியிய‌ல் க‌ல்வி உள்நாட்டு மொழியிலேயே க‌ற்றுத் த‌ர‌ப்ப‌டுகிறது.இத‌னால் பொறியிய‌ல் ப‌டிப்பில் அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை க‌ற்றுக் கொள்ளும் மாணவ‌ர்க‌ள் இத்துறையில் சிற‌ந்து விள‌ங்குகின்ற‌ன‌ர்.
ம‌ன்ன‌ர் ஜ‌வ‌ஹ‌ர் ‍ அண்ணா ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ துணை வேந்த‌ர்.//

யாருக்காக‌ இந்த‌ க‌ரிச‌னம்? கிராம‌ப்புற‌ மாண‌வ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ன்னு சொன்னா அதுக்கு ப‌திலா ம‌லையாள‌ ம‌ந்திர‌வாதியைக் கூட்டிடு வ‌ந்து எல்லாருக்கும் மொத்த‌மா பில்லி சூனிய‌ம் வ‌ச்சிர‌லாம்!என்னைப் போன்ற‌ கிராம‌ப்புற‌ மாண்வ‌ர்க‌ளுக்கு 12 வ‌ருஷ‌ம் த‌மிழ் மீடிய‌த்துல‌ ப‌டிச்சிட்டு க‌ல்லூரியில் தீடிர்னு ஆங்கில‌ மீடிய‌த்துக்கு மாறுவ‌து கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம் தான்,ஆனா ஒரு செம‌ஸ்ட‌ர்க்கு கொஞ்ச‌ம் மென‌க்கெட்டா,அப்புற‌ம் எல்லாம் ச‌க‌ஜமாயிரும்.ப‌டிக்கும் போது அத‌ விட‌ வேற‌ என்ன‌ வேலை???

நான் பாலிடெக்னிக் ப‌டிக்கும் போது எங்க‌ வ‌குப்புல‌ இருந்த‌ 32 பேர்ல‌ 6 பேரத் த‌விர‌ எல்லாரும் த‌மிழ் மீடிய‌த்துல‌ ப‌டிச்சுட்டு வ‌ந்த‌வ‌ங்க‌தான். பாலிடெக்னிக்ல‌ எல்லாரும் ஆங்கில‌ வ‌ழில‌ தான் ப‌டிச்சோம், க‌டைசி பெஞ்ச் கோயிஞ்சாமிக‌ளைத் (ந‌ன்றி பா ராக‌வ‌ன்) த‌விர‌.அவ‌ங்க‌ளை ந‌ம்பியே "சுரா ப‌ப்ளிகேஷ‌ன்ஸ்" இருந்த‌து,எல்லா புத்த‌க‌ங்க‌ளையும் அப்ப‌டியே த‌மிழிங்கிலிஷ்ல‌ மாத்தி கொடுத்துடுவாங்க‌.ந‌ம்ம‌ கோயிஞ்சாமிகள் எல்லாம் அதை ப‌டிச்சு,ம‌ன‌சுக்குள்ளேயே ஆங்கில‌த்துக்கு மொழிமாற்ற‌ம் செய்து தான் தேர்வு எழுத‌னும்.

எதுக்கு இப்ப‌டி த‌லைய‌ சுத்தி மூக்க‌ தொட‌ணும்,ஏன்னா இந்த‌ கடைசி பெஞ்ச் கோயிஞ்சாமிக‌ளும், அய்யாச்சாமிக‌ளும் எக்ஸாமுக்கு 10 நாள் முன்னாடி தான் ப‌டிக்க‌வே ஆர‌ம்பிப்பாங்க‌.ஆர‌ம்ப‌த்துல‌ இருந்தே க‌ஷ்ட‌ப் ப‌ட‌ற‌துக்கு அவ‌ங்க‌ளுக்கு க‌ஷ்ட‌ம்.

//சீனா,ஜ‌ப்பான்,தைவான் போன்ற‌ நாடுக‌ளில் பொறியிய‌ல் க‌ல்வி உள்நாட்டு மொழியிலேயே க‌ற்றுத் த‌ர‌ப்ப‌டுகிறது.இத‌னால் பொறியிய‌ல் ப‌டிப்பில் அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை க‌ற்றுக் கொள்ளும் மாணவ‌ர்க‌ள் இத்துறையில் சிற‌ந்து விள‌ங்குகின்ற‌ன‌ர்//

உண்மை தான்.ஏன்னா அங்கெல்லாம் நாடு முழுவ‌தும் ஒரே மொழிதான் ஆகவே அவ‌ங்க‌ளுக்கு அது சாத்திய‌மாகிற‌து.ஆனா இங்க‌ த‌மிழ் வ‌ழில‌ ப‌டிச்சுட்டு மும்பைக்கு வேலை தேடிப் போனா என்னாகும்?? ஹிந்தி தெரியாது (வாழ்க‌ க‌ழ‌க‌ங்க‌ள்),ஆங்கில‌மும் அறைகுறைன்னா எப்ப‌டி வேலை கிடைக்கும்??
இல்ல‌ த‌மிழ் வ‌ழில‌ ப‌டிக்கிற‌வ‌ங்க‌ளுக்கு ப‌டிப்பு முடிஞ்ச‌தும் த‌மிழ்நாட்லேயே வேலைன்னு உத்திரவாத‌ம் குடுப்பாங்க‌ளா??? அதுவும் கிடையாது.

//தமிழ் வழிக் கல்வியை கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்கள் சேரலாம். சிவில் பிரிவில் 60 மாணவர்களும், மெக்கானிக்கல் பிரிவில் 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். 15 கல்லூரிகளிலும் சேர்ந்து மொத்தத்தில் கூடுதலாக 1800 மாணாக்கர்கள் தமிழ் வழியில் சேரலாம். அது மட்டுமல்ல ஆங்கில வழியில் பொறியியல் படித்தாலும் அந்த மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதலாம்," - அமைச்சர் பொன்முடி. //

இய‌ல்பாக‌வே, ந‌ம‌க்கு இர‌ண்டு சாய்ஸ் குடுத்தா எது ஈஸியா இருக்கோ அத‌த் தான் தேர்ந்தெடுப்போம்.த‌மிழ் மீடிய‌த்துல‌ +2 முடிச்சுட்டு வ‌ர்ற‌வ‌ங்க‌,த‌மிழ் வ‌ழி பொறியிய‌ல் ப‌டிப்பில் சேர‌ வாய்ப்புக‌ள் அதிக‌ம்,அந்த‌ நேர‌த்துல‌ பின்னாடி வ‌ர‌ப் போகும் பிர‌ச்சினைக‌ளை யோசித்து முடிவெடுக்கிற‌து க‌ஷ்ட‌ம்.அப்போதைக்கு எது ஈஸியா இருக்கோ அத‌த் தான் பார்ப்பாங்க‌.

ஆங்கில‌ வ‌ழியில் ப‌டிக்கும் போது சில‌ப‌ஸ் தாண்டியும் தெரிந்து கொள்ள‌ வேண்டுமென்றால் ஏக‌ப்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ள் உண்டு,த‌மிழ்வ‌ழியில் ப‌டிக்கும் போது.........அர‌சே த‌ரும் புத்த‌க‌ம் த‌விர‌ சில‌ ம‌ன்னார் ப‌திப்ப‌க‌ங்க‌ள் த‌மிழிங்கிலிஷ் புத்த‌க‌ங்க‌ளை வெளியிடும் வாய்ப்புண்டு ஆனா அவை எல்லாமே சில‌ப‌ஸ் க‌வ‌ர் செய்வ‌தாக‌வே இருக்கும்.அதில் ச‌ந்தேக‌ங்க‌ள் வ‌ரும் போது என்ன‌ செய்ய‌??

அமைச்ச‌ரின் குடும்ப‌த்தில் இருந்தோ அல்ல‌து துணை வேந்த‌ரின் குடும்ப‌த்தில் இருந்தோ,யாரையாவ‌து தமிழ்வ‌ழி பொறியிய‌ல் ப‌டிப்பில் சேர்ப்பார்க‌ளா??

அர‌சு ம‌ருத்துவ‌னையில் எல்லா வ‌ச‌தியும் உள்ள‌து என்று முழ‌ங்கி விட்டு,சாதார‌ண‌ த‌லைவ‌லிக்கு கூட‌ அப்போல்லோ செல்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் என்ப‌தை நினைவில் கொள்க‌.

எப்ப‌டியோ ஹிந்தி எதிர்ப்புன்னு சொல்லி இர‌ண்டு த‌லைமுறைய‌ நாச‌மாக்கிய‌வ‌ர்க‌ள்,இப்ப‌ த‌மிழ‌ர்க‌ளை குண்டு ச‌ட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட‌ வைக்க‌ எடுத்துள்ள‌ ஆயுத‌ம் தான் இது....

ஹிந்தி,ஆங்கில‌ம் தெரியாத‌ ம‌த்திய‌ அமைச்ச‌ர் ப‌டும் பாட்டை பார்த்தீர்க‌ள் தானே??

ப‌ட்டும் திருந்த‌லேன்னா என்ன‌ செய்வ‌து??????????
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:54 AM 48 comments
Labels: அனுப‌வ‌ம், சமூக‌ம், துறை சார்ந்த‌து

வியாழன், 20 மே, 2010

ந‌ன்றி ந‌வில‌ல்

இப்போதெல்லாம் தின‌மும் ஏதாவ‌து ஒரு சூனா பானா ச‌ங்க‌ம் ஒண்ணுமில்லாத‌ ஒரு காரிய‌த்துக்கு ந‌ம்ம‌ முத‌ல்வ‌ருக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிற‌து‌.அவ‌ரும் அறிவால‌ய‌த்துக்கு வ‌ர‌வ‌ழைத்து,த‌ன் அமைச்ச‌ர‌வை ச‌காக்க‌ள் புடை சூழ சால்வையை ஏற்றுக் கொள்கிற‌ மாதிரி புகைப்ப‌ட‌ங்க‌ளை மீடியாக்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி ம‌கிழ்ந்து கொண்டிருக்கிறார்.,

இதே ரேஞ்சில் போனால் இன்னும் யார் யாரெல்லாம் முத‌ல்வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல வேண்டியிருக்கும்............

சீச‌ன் நேர‌ங்க‌ளில் த‌மிழ‌க‌ அர‌சு வ‌ழ‌ங்கும் இலவச‌ வேட்டி,சேலையை க‌ட‌த்தி வ‌ந்து விற்ப‌னை செய்து பிழைத்து கொண்டிருந்த‌ எங்க‌ளுக்கு,இல‌வ‌ச டிவி வ‌ழ‌ங்குவ‌த‌ன் மூல‌ம், ஆண்டு முழுவ‌தும் தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்ப‌டுத்தி, எங்க‌ள் வாழ்வில் "ஒளி" ஏற்றி வைத்த‌ "த‌மிழ‌ன‌த்த‌லைவ‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி.

த‌மிழ‌க‌ இல‌வ‌ச‌ டிவி ச‌காய‌ விலைக்கு விற்ப‌னை செய்யும் சேட்ட‌ன்க‌ள் ச‌ங்க‌ம் கேர‌ளா.
**********************************
பைசா ந‌க‌ர‌ சாய்ந்த‌ கோபுர‌த்துக்கு இணையாக‌,கோவையில் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்குக்காக‌ வீட்டு வ‌ச‌தித் துறை மூல‌ம் சாய்ந்த‌ வீடுக‌ள் க‌ட்டித் த‌ந்த‌ "ஏழைப் ப‌ங்காள‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

கோவை அம்ம‌ன்புர‌த்துக்கு குடிபுக‌ ப‌ய‌ப்ப‌டுவோர் ச‌ங்க‌ம்
**********************************
கோவை ந‌க‌ரில் போக்குவ‌ர‌த்துக்கு த‌டையாக‌ இருந்த‌ ம‌ர‌ங்க‌ளை, போர்க்கால‌ அடிப்படையில் வெட்டி,கோவையை துபாயாக‌ மாற்றிய‌ "சுற்று சூழ‌ல் காவ‌ல‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

செம்மொழி பேசுவோர் ச‌ங்க‌ம் கோவை
************************************
இந்தியாவில் எந்த‌ மாநில‌த்திலும் இல்லாத‌ முறையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வ‌ழ‌ங்கி,நொடித்துப் போன எங்க‌ள் தொழிலை ஏற்ற‌ம் காண‌ வைத்த‌ "தொழிற் துறையின் ந‌ண்ப‌ன்"  டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

இல‌வ‌ச‌ அரிசி ப‌ய‌ன்ப‌டுத்தும் ஹோட்ட‌ல் முத‌லாளிக‌ள் ச‌ங்க‌ம்
**************************************
எல்கேஜி ப‌டிக்கும் பைய‌ன் கூட‌ இ மெயில் மூல‌ம் லீவு லெட்ட‌ர் அனுப்பும் இந்த‌ கால‌த்தில், முக்கியமான‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு மத்திய‌ அர‌சை க‌டித‌ம் மூல‌ம் தொட‌ர்பு கொள்ளும் "த‌க‌வ‌ல் தொழில் நுட்ப புர‌ட்சி நாய‌க‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

தபால் துறை ஊழிய‌ர்க‌ள் ச‌ங்க‌ம்
***************************************
+2 தேர்வில், 25 ஆண்டுக‌ளாக‌ தொட‌ர்ந்து மாநில‌ அள‌வில் முத‌ல் இட‌ம் பிடித்தும்,இது வ‌ரை மாவ‌ட்ட‌த்தில் எந்த‌ ஒரு அர‌சு க‌ல்லூரிக்கும் அனும‌தி வழ‌ங்காத‌ "க‌ல்விப் புர‌ட்சி வேந்த‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

விருதுந‌க‌ர் மாவ‌ட்ட‌ த‌னியார் க‌ல்லூரிக‌ள் ச‌ங்க‌ம்
*****************************************
எங்க‌ள் ப‌ல‌த்தை நாங்க‌ளே அறியாம‌ல் ஓட்டுக்கு அம்ப‌தும்,நூறும் வாங்கி கொண்டிருந்த‌தை மாற்றி ஒரு ஓட்டுக்கு ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ளை அள்ளி வ‌ழ‌ங்கி,எப்ப‌டா ந‌ம்ம‌ எம் எல் ஏ ப‌ர‌லோக‌ம் போவார்,இடைத் தேர்த‌ல் வ‌ரும் என‌ ஏங்க‌ வைத்த‌ ‌ "ஜ‌ன‌நாய‌க‌ காவ‌ல‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

அனைத்துல‌க‌ அப்பாவி வாக்காளர்க‌ள் ச‌ங்க‌ம்.
******************************************
குறிப்பு: ஆட்டோ அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி ‍ அபுதாபியிலிருந்து வ‌ட‌மேற்கே 300 கீமீ தொலைவில் பாலைவ‌ன‌த்தில் த‌னியே த‌ன்ன‌ந்த‌னியே அமைந்துள்ள‌ மாமன்னார் & க‌ம்பெனி

பின்குறிப்பு:ஆட்டோக்கார‌ரிட‌ம் ஜிபிஎஸ் குடுத்து அனுப்ப‌ ம‌ற‌க்க‌ வேண்டாம்‌.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:14 PM 15 comments
Labels: அர‌சிய‌ல், மொக்கை

புதன், 19 மே, 2010

காண‌வில்லை

என்ன‌து ச‌ங்க‌த்த‌ காணோமா?? ஏலே என்ன‌ சொல்லுத‌??

நெச‌மாத்தான்யா சொல்லுதேன் ச‌ண்டையெல்லாம்(க‌ருத்து ச‌ண்டை???) போட்டு ஆரவாரமா ஆர‌ம்பிச்சாங்க‌ய்யா இப்ப‌ ஆறு வார‌ம் ஆயும் என்ன‌ ஆச்சுன்னு தெரிய‌ மாட்டக்கு அய்யா

பாருங்க‌ ரசீது எல்லாம் வ‌ச்சிருக்கேன் அய்யா


டிஸ்கி : லேபிள‌ சேர்த்துப் ப‌டிச்சு குருதி அழுத்த‌ம் ஏறுனா  கொம்பெனி பொறுப்ப‌ல்ல‌.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 2:05 PM 5 comments
Labels: மொக்கை ச‌ங்க‌ம்

செவ்வாய், 18 மே, 2010

ச்சும்மா

எங்க‌ ஆபிஸ்ல‌ சீனிய‌ர் ஒருத்த‌ன், ந‌ம்மை அடிமைப் ப‌டுத்தி ஆண்டாண்டு கால‌ம் ஆண்ட‌ தேச‌த்தை சேர்ந்த‌வ‌ன்.தெனம் நாங்கெல்லாம் ல‌ன்ஞ்சுக்கு கெள‌ம்புர‌ப்போ இவ‌ன் ம‌ட்டும் ஷார்ட்ஸ்,டீ ச‌ர்ட் மாத்திட்டு கையில‌ ஒரு ஃபோல்டிங் சேர்,ஒரு புக்கோட‌ ஃஆபிஸ்க்கு பின்னாடி போவான்.(ஃஆபிஸ்ஸ‌ சுத்தி ம‌ண‌லும் ம‌ண‌ல் சார்ந்த‌ இட‌மும் தான்)

தாங்க‌ முடியாம‌ ஒரு நாள் அவ‌ன்கிட்ட‌ போய் கேட்டுட்டேன்.சாப்பிட‌ கூட‌ வ‌ராம‌ அப்ப‌டி என்ன‌ தான்டா ப‌டிக்குறேன்னு.அதுக்கு அவ‌ன் சொன்ன‌ ப‌தில கேட்டு.......... ஸ் அப்பா முடிய‌ல‌.

அவ‌ன் அடுத்த‌ மாச‌ம் லீவுல‌ ஊருக்குப் போறானாம். அதான்
தென‌மும் 45 c வெயில்ல‌ ச‌ன் பாத் எடுத்து "வொயிட்" க‌ல‌ர‌ கொஞ்ச‌ம் "பிர‌வுன்" க‌ல‌ர‌ ஆக்க‌ முய‌ற்சி செய்ற‌னாம்,ஏன்னா அவ‌ன் பொண்டாட்டி ப‌ய‌ங்க‌ர‌ வொயிட் க‌ல‌ராம்,இவ‌ன் கொஞ்ச‌ம் பிர‌வுன் ஆயிட்டா அவ‌ளுக்கு இவ‌ன‌ பாத்து பொறாமை ஆயிடுமாம்.

அட‌ப்பாவி  ம‌க்கா இந்த‌ அக்குறும்ப‌ கேக்க‌ யாருமே இல்லையா???????

அவ‌ன‌வ‌ன் ப‌ய‌ங்க‌ர‌ க‌ருப்புல‌ இருந்து மீடிய‌ம் க‌ருப்பு க‌ல‌ர் ஆகிற‌துக்கு என்னென்ன‌ பாடு ப‌ட‌ வேண்டியிருக்கு.டே கீரிம்,நைட் கீரிம்,ஏஜ் மிராக்கிள்,யுவி கீரிம்ன்னு மார்கெட்ல‌ என்னென்ன‌ கீரிம் புதுசா வ‌ருதோ அதெல்லாம் வாங்கி ச‌ம்ப‌ள‌த்துல‌ பாதி காசு இதுக்கே செல‌வாகுது.
இவ‌ன் என்னட‌ன்னா.......

இதுக்குப் பேரு தான் கெர‌க‌சார‌மோ.
******************************************************** 
(ஏசியாநெட் ரேடியோவில் கேட்ட‌து)
சார் பேர் சொல்லுங்க‌ எங்கேயிருந்து பேச‌றீங்க‌

நான் சார்ஜால‌ இருந்து ராம‌சாமி

சொல்லுங்க‌ ராம‌சாமி என்ன‌ வேலை பாக்கிறீங்க‌

ம‌ன்னார் அண்ட் க‌ம்பெனியில‌ எஞ்சினிய‌ரா இருக்கேன்

ஓகே உங்க‌ளுக்காக‌ ஒரு சூப்ப‌ர் சாங் வ‌ந்துகிட்டே இருக்கு யாருக்கு "டெடிகேட்" ப‌ண்ண‌ப் போறிங்க‌

என் வொய்ஃபுக்கு

வொய்ஃபு பேரு என்ன‌,அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌

முனிய‌ம்மா,ஹ‌வுஸ் வொய்ஃப் தான்

உங்க‌ளுக்கு எத்த‌ன‌ குழ‌ந்தைக‌ள்

அய்யோ இன்னும் எங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆக‌லை,நிச்ச‌ய‌தார்த்தம் தான் முடிஞ்சிருக்கு
??????????????????
************************************************** 
 கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க‌ ரெண்டு கொடுமை  ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்.

இப்ப‌ வ‌ருகிற‌ த‌மிழ் ப‌ட‌ங்க‌ளுக்கு ப‌ய‌ந்து ம‌லையாள‌ க‌ரையோர‌ம் ஓதுங்குனா அங்க‌ அத‌ விட‌ பெரும் கொடுமையா இருக்கு.

"ச‌ட்டாம்பி நாடு"ன்னு ஒரு ப‌ட‌ம் ம‌ம்மூக்கா ந‌டித்து ஷ‌ஃபி இய‌க்கிய‌து. ச‌ட்டாம்பின்னா ர‌வுடின்னு அர்த்த‌ம்.ப‌ட‌த்த‌லைப்புக்கு நேர்மை செய்றேன் பேர்வ‌ழின்னு ப‌ட‌ம் பூரா ர‌வுடிக‌ள் தான். ம‌ம்முட்டி,சித்திக், ம‌னோஜ் கே ஜெய‌ன்,ஜ‌ணார்த்த‌ன‌ன்,ச‌லீம் குமார்,சிராஜ் இது போதாத‌ன்னு ஹீரோயின் ல‌ட்சுமி ராய் பேச‌ற‌தும் ர‌வுடி மாதிரி தான்.இதுல‌ ம‌ம்முட்டி வேற‌ க‌ன்ன‌ட‌ம் க‌ல‌ந்த‌ ம‌லையாள‌ம் பேச‌ற‌ன்னு ஒரு மாதிரி இழுத்து இழுத்து பேச‌றாரு.ம‌லைக‌ன்ன‌ட‌த்துல‌ ப‌ஞ்ச் ட‌ய‌லாக் பேசிட்டு கிள‌ம்பும் போது தீம் மியுஸிக் வேற‌....

அடுத்த‌ ம‌ம்முட்டி ப‌ட‌ம் "போக்கிரிராஜா" டிரெய்ல‌ர் பாக்கும் போதே மிர‌ட்டுது.
ம்ம் எப்ப‌டி இருந்த‌ சேட்ட‌ன்மார் இப்ப‌டி ஆயிட்டாங்க‌.
******************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:13 PM 11 comments
Labels: அனுப‌வ‌ம், சினிமா

திங்கள், 17 மே, 2010

+2வுக்கு அப்புற‌ம் ----- வ‌ழிகாட்டி



Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:43 AM 5 comments
Labels: க‌ல்வி, வ‌ழிகாட்டி

வியாழன், 13 மே, 2010

அம்மாக்க‌ளுக்கு

ப‌டித்த‌தில் பிடித்த‌து

விளையாட்டு, வேடிக்கை என்று எதுவுமில்லாமல் டி.வி, கணிணி, வீடியோ கேம்ஸ் என்று கதியாய் கிடக்கும் இன்றைய குழந்தைகளின் பால்யம், வண்ணம் இல்லாமல் வெளுத்துக்கொண்டே வருகிற‌து என்று க‌வ‌லைப் ப‌டும் அம்மாக்க‌ளுக்காக‌


அதற்கான பாஸிட்டிவ் பின்னூட்டமாக எழுதுகிறேன் இதை!

திருமணம் முடித்து வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு, என் குழந்தையின் பிள்ளைப் பருவத்தை நூறு சதவிகிதம் உயிர்ப்பானதாக ஆக்க வேண்டுமென்று ஆசை. பள்ளி, வீடு, ஹோம் வொர்க், மீண்டும் பள்ளி என்று நான் பார்த்த சில குழந்தைகளின் உலகம், 'நம்ம குழந்தையும் இப்படித்தான் மெக்கானிக்கலா ஆயிடுமா..?' என்று எனக்கு ஏற்படுத்திய பயம்தான் அந்த ஆசைக்கு வித்து.

சரி... அதற்கு என்னவெல்லாம் செய்யலாம்..? அவனின் ஒன்றரை வயதில் இருந்தே அவனுக்கு கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது ஐந்து வயதாகும் அவன், "அம்மா... ஏதாச்சும் புது கதை சொல்லுங்க..." என்று தினமும் என்னைச் சுற்றுகிறான். சொல்லும் கதைகளை கண்கள் உருட்டி உள்வாங்குகிறான். அரசர் கதைகள் மட்டுமல்ல... அவன் தாத்தா, பாட்டியின் வாழ்க்கை, என் பால்யம், அவன் அப்பாவின் கல்லூரிக் காலம் என்று அனைத்தையும் கதையாக அவனுக்கு கடத்துகிறேன்.

கிரிக்கெட், ஃபுட்பால், பேஸ்கட் பால், செஸ், லூடோ, கண்ணாமூச்சி, ஓடிப் பிடித்து என... இவையெல்லாம் நானும் அவனும் விளையாடும் விளையாட்டுகள். "அம்மா போதும்... நாளைக்கு விளையாடலாம்" என்று அவன் ஆசை தீரும் வரை, சலிக்க மாட்டேன் நான்.

இருவரும் ஒன்றாகத்தான் டி.வி. பார்ப்போம். கார்ட்டூன், காமெடி, அனிமல் பிளானட், படம் என்று என்ன பார்த்தாலும், அதன் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டேதான் பார்ப்போம்.

வீட்டுத் தோட்டச் தொட்டிகளில் முளைத்து வரும் குட்டி குட்டி செடிகளை, "இது உன் பொறுப்பு. டெய்லி நீதான் தண்ணி ஊத்தி பார்த்துக்கணும்..." என்று அவனிடம் சொல்ல, "அம்மா... புது லீஃப் வந்துடுச்சு...", "மொட்டு விட்டிடுச்சும்மா...", "ஃபர்ஸ்ட் பூவை நான் பறிச்சு சாமிக்கு வைக்கறேம்மா..." என்று தினம் தினம் ஒரு உற்சாகக் குரலோடு தோட்டத்தில் இருந்து ஓடி வருகிறான், சந்தோஷத்தை அள்ளிக்கொண்டு.

குழந்தையிலிருந்தே அவனது கிறுக்கல்கள், வரைந்த படங்கள், படித்த பாட புத்தகம் என்று எல்லாவற்றையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்... அவன் வளர்ந்த பின் அவனிடம் காட்டி இருவரும் மகிழ!

'பிள்ளைகளுக்கு பால்யம் இல்லையே, அவர்கள் விளையாட நண்பர்கள் இல்லையே' என்று கவலைப் படுவதைவிட, பெற்றோர்கள் நாமே அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும்தானே? அது நமக்கும் குழந்தைக்குமான பிணைப்பை, புரிதலை இன்னும் வலுவாக்கும்தானே?!

குழந்தையுடன் விளையாடுங்கள்... குழந்தையாக விளையாடுங்கள்!

- ரேணுகா சிவா

ந‌ன்றி அவ‌ள் விக‌ட‌ன்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:47 AM 2 comments
Labels: அனுப‌வ‌ம், ச‌மூக‌ம்

செவ்வாய், 11 மே, 2010

அர‌ச‌ர்க‌ள் Vs அர‌சிய‌ல்வாதிக‌ள்

அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் பெய‌ருக்கு முன்னால் ஏக‌ப்ப‌ட்ட‌ ப‌ட்ட‌ பெய‌ர்க‌ளை சேர்த்துக் கொள்ளும் வ‌ழ‌க்க‌ம் கொண்டிருந்த‌வ‌ர்க‌ள்.அது பெரும்பாலும் அவ‌ர்க‌ள் த‌லைமையேற்று ந‌ட‌த்திய‌,போர்க‌ளில் பெற்ற‌ வெற்றியை ப‌றை சாற்றுவ‌தாக‌ இருக்கும்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் நிறைய‌ ப‌ட்ட‌ப் பெய‌ர்க‌ளை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ஆனால் அதுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்காது.ஏதாவ‌து அல்ல‌க்கை கொடுத்த‌ "தானே உக்காந்த‌ தானைத் த‌லைவ‌ன்" ப‌ட்ட‌த்தை கூட‌ வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ரில் போட்டுக் கொள்வார்க‌ள்.
************************
அர‌ச‌ர்க‌ள் -  ப‌ல‌தார ம‌ணம் முடிக்கும் வ‌ழ‌க்க‌ம் உடைய‌வ‌ர்க‌ள் எனினும் ப‌ட்ட‌த்து அர‌சிக்கே அதிக‌ அதிகார‌ம்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் அப்ப‌டியே,ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ம் செய்து கொள்ப‌வ‌ர்க‌ள்.ஆனால் இங்கு எல்லாருக்கும் அதிகார‌ம் உண்டு.ம‌னைவிக‌ளும்,துணைவிக‌ளும் கிச்ச‌னில் இருந்த‌ ப‌டியே அர‌சில் த‌லையிடும் அதிகார‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்.
**********************************
அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் வாரிசுக‌ளிலிருந்து ஒருவ‌ருக்கு ப‌ட்ட‌த்து இள‌வ‌ர‌சாக‌ முடி சூட்டி,அவ‌ருக்கு எல்லா வித‌ ப‌யிற்சிக‌ளையும் அளித்து,அர‌ச‌ர் ஆக்கிய‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ப‌தவிக்கு வ‌ர‌ த‌குதி,திற‌மை எல்லாம் தேவையில்லை. அர‌சிய‌ல்வாதிக்கு வாரிசாக‌ இருப்ப‌தே பெரிய‌ த‌குதி தான்.ஏழாவ‌து பொண்டாட்டியின் எட்டாவது வாரிசுக்கும் ஏதாவ‌து ஒரு ப‌த‌வி நிச்ச‌ய‌ம்.
***************************************
அர‌ச‌ர்க‌ள் -  அர‌ண்ம‌னைக‌ளில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள்,த‌ங்க‌ள் பாதுகாப்புக்கென‌ த‌னியே ப‌டை வைத்திருந்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ஆர‌ம்ப‌த்தில் குடிசையில் வாழ்ந்தாலும்,ப‌த‌வி வந்த‌ பின் அர‌ண்ம‌னை போன்ற‌ பெரிய‌ வீடுக‌ளில் வாழ்ப‌வ‌ர்க‌ள்.அர‌சின் இச‌ட் பிரிவு பாதுகாப்பில் இருந்தாலும்,த‌னியே குண்ட‌ர் ப‌டை வைத்துக் கொள்ப‌வ‌ர்க‌ள்.
**********************************************
அர‌ச‌ர்க‌ள் -  வெளியிலிருந்து வ‌ரும் எதிரியை வெற்றி கொள்ள‌, கூட்டு சேர்ந்து போராடிய‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் எதிரியை,தேர்த‌லில் வெற்றி கொள்ள‌ கூட்ட‌ணி வைத்துக் கொள்ப‌வ‌ர்க‌ள். ஆனால் எதிரியையும்,கூட்டாளியையும் சுழ‌ற்சி முறையில் மாற்றிக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
***************************************************
அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் முன்னோர்க‌ளை ம‌தித்த‌வ‌ர்க‌ள்.முன்னோர்க‌ள் காட்டிய‌ வ‌ழியில் சென்று,அவ‌ர்க‌ளை விட‌ பெரிய‌ வெற்றியை அடைந்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ம‌ட்டும் முன்னோர்க‌ளை ம‌திப்ப‌வ‌ர்க‌ள்.அவர்க‌ளை காட்டிலும் அதிக‌ சொத்துக்க‌ளை குவித்துக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
**********************************************************
அர‌ச‌ர்க‌ள் -  "ம‌யிர் நீப்பின் உயிர் வாழா க‌வ‌ரி மான்" போல‌ வாழ்ந்த‌வ‌ர்க‌ள்.
அர‌சிய‌ல்வாதிக‌ள் -  வெட்க‌ம்,மான‌ம்,சூடு,சொர‌ணை என்ப‌த‌ற்கும் த‌ங்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என்ப‌தாக‌ வாழ்ப‌வ‌ர்க‌ள்.
************************************************************
அர‌ச‌ர்க‌ள் -    அர‌சாட்சி என்ற‌ பெய‌ரில் ம‌க்களாட்சி செய்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ம‌க்களாட்சி என்ற‌ பெய‌ரில் அர‌சாட்சி செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
 ************************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:21 AM 11 comments
Labels: அர‌சிய‌ல், மொக்கை

திங்கள், 3 மே, 2010

தென்னையைப் பெத்தா இள‌நீரு,பிள்ளையைப் பெத்தா க‌ண்ணீரு

வ‌ருச‌ம் பூரா ந‌ம்ம‌ளே தான் பாத்துக்க‌ணுமா ஏன் உங்க‌ த‌ம்பி வீட்ல‌ கொஞ்ச‌ நாள் போய் இருந்தா என்ன‌வாம்?

மெட்ராஸ் அம்மாவுக்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது அவ‌ன் தான் ப‌ண‌ம் அனுப்ப‌றான் இல்ல‌ அப்புற‌ம் என்ன‌?

ப‌ண‌ம் அனுப்புனா ம‌ட்டும் போதுமா? போன த‌ட‌வை கூட்டிட்டு போய்ட்டு ஒரு மாச‌த்துல‌ கொண்டு வ‌ந்து விட்டுட்டாக‌.ஒரு மாச‌ம் வ‌ச்சிக்கிருதே க‌ஷ்ட‌மா இருக்க‌ன்னா கால‌ம் பூரா பாக்குற‌ என‌க்கு எப்ப‌டி இருக்கும்?

பெத்த‌ அம்மாவை யார் வீட்டில் வைத்துக் கொள்வ‌து என்ற‌ பிர‌ச்சினை.

இன்னும் சில‌ வீட்டில் அப்பா சென்னையில் பெரிய‌ ம‌க‌ன் வீட்டில் இருக்கும் போது,அம்மா ம‌துரையில் சின்ன‌ ம‌க‌ன் வீட்டில் இருப்பாங்க‌.அந்திம‌க் கால‌த்தில் ம‌னம் விட்டு பேச‌,த‌ங்க‌ளின் க‌ட‌ந்த‌ கால‌த்தை அசை போட‌, துணை தேவைப் ப‌டும் நேர‌த்தில், த‌னித் த‌னியே கால‌னை எதிர்பார்த்து கால‌ம் த‌ள்ள‌ வேண்டியிருக்கும்.
இந்த அவசர உலகத்தில் பெத்தவங்களை கவனிக்கக்கூட பிள்ளைகளுக்கு நேரம் இல்லை. வ‌ய‌தான‌ கால‌த்தில் பெற்றோரை த‌விக்க‌ விடும் பிள்ளைக‌ளைப் ப‌ற்றி பேசுவ‌து தான் இந்த‌ மூன்று ம‌லையாள‌ப் ப‌ட‌ங்க‌ளும்.

கேர‌ளா க‌ஃபே மொத்த‌ம் ப‌த்து க‌தைக‌ளை உள்ளட‌க்கிய‌து,அதிலொன்று ப்ரிட்ஜ்.

வ‌ய‌தான,க‌ண் பார்வைய‌ற்ற‌ தாயை பார்த்துக் கொள்ள முடியாம‌ல் திண்டாடும் ஒருவ‌ன்,அந்த‌ தாயின் க‌ட‌ல் காணும் (க‌டைசி)ஆசையை தீர்ப்ப‌தாக‌க் கூறி அழைத்து செல்வான்.க‌ட‌ற்க‌ரைக்கு சென்று அலையில் கால் ந‌னைய‌ச் செய்து,சாலையோர‌ உண‌வ‌க‌த்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து,தியேட்ட‌ருக்கு ப‌ட‌ம் பார்க்க‌ அழைத்து கொண்டு போவான்.இடைவேளையில் குடிப்ப‌த‌ற்கு ஏதாவ‌து வாங்கி வ‌ருகிறேன் என்று சொல்லிட்டு,த‌ன் அம்மாவை தியேட்ட‌ரிலேயே விட்டுட்டு அழுது கொண்டே வெளியேறி விடுவான்.

மற்றொரு ப‌க்க‌ம் தாயில்லாத‌ சிறுவ‌ன் வ‌ள‌ர்க்கும் பூனை,அவ‌னது த‌ந்தைக்கு பிடிக்காத‌தால் பூனையை வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ சிறுவ‌னிட‌ம் இருந்து ப‌றித்துக் கொண்டு போய் வீட்டிலிருந்து வெகு தூர‌த்தில் விட்டு வ‌ருவார்.பூனையை பிரிந்து த‌விக்கும் சிறுவ‌ன் காய்ச்ச‌லில் வ‌ழுவான்.சிறுவ‌னின் த‌விப்பைக் க‌ண்டு அவ‌ன‌து த‌ந்தை மீண்டும் பூனையை எடுத்து வ‌ரும் நோக்கில்,பூனையை விட்ட‌ இட‌த்தில் போய் தேடி,பூனை கிடைக்காத‌தால் ஏமாற்ற‌த்தோடு வீடு திரும்பும் போது,தாயை தியேட்ட‌ரில் விட்டுட்டு போகிற‌வ‌ன் ப‌ஸ்ஸில் அந்த‌ ப‌க்க‌மாக‌ செல்வான்.

க‌டைசியில் அந்த‌ க‌ண்பார்வைய‌ற்ற‌ தாய் க‌‌ட‌ற்க‌ரையில் உட்கார்ந்திருக்க‌, பூனை அருகில் விளையாடிக் கொண்டிருப்பதாக‌ ப‌ட‌ம் முடியும்.


ம‌ன‌சின‌க்க‌ரே




ச‌த‌ய‌ன் அந்திக்காடு இய‌க்கிய‌ "ம‌ன‌சின‌க்க‌ரே" என்ற‌ ப‌ட‌த்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.ஒன்று பணக்கார வீட்டைப் பற்றியது,இன்னொன்று சாதாரண ஏழைக் குடும்பத்தைப் பற்றியது.

கொச்சு திரேசா (ஷீலா) கணவனை இழந்த,அறுபது வ‌ய‌தைக் கடந்த பெரிய‌ பணக்காரி. பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,வேலைக்காரி என‌ பெரிய‌ ப‌ங்க‌ளாவில் வ‌ச‌தியாக‌ வாழும் திரேசா,பாச‌த்துக்கும்,எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கும் ஏங்குப‌வ‌ர்.வ‌ய‌சான‌ கால‌த்தில் கிழவி வீட்டில் வேளா வேளைக்குச் சாப்பிட்டு,பேசாம‌ல் இருக்க வேண்டும் என‌ பிள்ளைக‌ள் எதிர்பார்க்கிறார்க‌ள்.தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.

இன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் (இன்னொசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.மாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.

ஒரு காட்சியில் கே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம்,சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையாக‌ தோழியிட‌ம் சொல்லிட்டு,பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று க‌ண் க‌ல‌ங்குவார்.


இந்த‌ இர‌ண்டு குடும்ப‌ங்க‌ளிலும் வ‌ரும் பிர‌ச்சினைக‌ள் முற்றி,க‌டைசியில் திரேசா த‌ன் வ‌ச‌தியான வாழ்க்கை,த‌ன் அன்பை புரிந்து கொள்ளாத‌ பிள்ளைக‌ளை உத‌றி விட்டு உண்மையான பாச‌த்தை நேடி ரெஜியின் அம்மாவாக‌ சென்று விடுவார்.

 ராப்ப‌க‌ல்




க‌ம‌ல் இய‌க்கிய‌ "ராப்ப‌க‌ல்" என்றொரு அருமையான‌ ப‌ட‌ம்.பிள்ளைக‌ள் எல்லாம் வெவ்வேறு ஊர்க‌ளில் செட்டிலாகி விட‌,அர‌ண்ம‌னை போன்ற‌ வீட்டில் த‌னித்து வாழும் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள் (சார‌தா),அவ‌ருக்கு துணையாக‌ கிருஷ்ண‌ன் (ம‌ம்முட்டி) என்ற‌ வேலைக்கார‌ன்.சிறு வ‌ய‌திலிருந்தே அந்த‌ வீட்டில் வேலை செய்யும் கிருஷ்ண‌னை த‌ன் சொந்த‌ ம‌க‌ன் போல‌ பாவிக்கிறார் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள்,த‌ன் சொந்த‌ பிள்ளைக‌ளிட‌ம் கிடைக்காத‌ அன்பும்,பாச‌மும் அவ‌ருக்கு கிருஷ்ண‌னிட‌ம் இருந்து கிடைக்கிற‌து.இந்த‌ சூழ்நிலையில் ஒட்டு மொத்த‌ குடும்ப‌மும் வீட்டில் ஒன்று கூடி அந்த‌ வீட்டை விற்று விட்டு,ச‌ர‌ஸ்வ‌தி அம்மாளை ஒரு ம‌க‌னின் வீட்டிற்கு கூட்டிச் செல்ல‌ முடிவெடுத்து,செய‌ல் ப‌டுத்துகிறார்க‌ள்.

கிருஷ்ண‌னிட‌ம் அழுது கொண்டே விடை பெறும் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள்,ம‌க‌னின் ந‌க‌ர‌த்து வீட்டிலிருந்து ஒரே இர‌வில் காணாம‌ல் போய் விடுவார்.இத்த‌னை வ‌ருஷ‌ம் அம்மாவை பொன்னு போல‌ பார்த்துக் கொண்டேன், உன்னால‌ ஒரு நாள் பார்த்துக்க‌ முடிய‌லையா?ன்னு ச‌ண்டை போட்டு விட்டு த‌ன் வீட்டுக்கு திரும்பும் கிருஷ்ணனை எதிர்பார்த்து,த‌ன் மீதி வாழ்நாளை அவ‌ருட‌ன் அவ‌னின் அம்மாவாக‌ க‌ழிக்க‌ விரும்பி காத்திருப்பார் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள்.

பெத்து,வ‌ள‌ர்த்து,ப‌டிக்க‌ வைத்து,வேலை வாங்கி கொடுத்து,ஆளாக்கிய‌ பெற்றோர்க‌ளை க‌வனிக்க‌ வேண்டிய‌து பிள்ளைக‌ளின் க‌ட‌மை என்ப‌தை உறுதி செய்ய‌ அர‌சு ச‌ட்ட‌ம் போட‌ வேண்டியிருக்கிற‌து.

பெற்றோரை கவனிக்காமல்விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க, 'பெற்றோர் மற்றும் முதியோர் வாழ்க்கைப் பொருளுதவிச் சட்டம்' ஒன்றை 2007-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்துக்கான முழு விதிமுறைகளையும் 2009-ம் ஆண்டு இறுதியில்தான் மத்திய அரசு வெளியிட்டது. அந்தச் சட்ட விதிமுறை, 'வயதான பெற்றோரைக் கவனிக்காமல்விடும் பிள்ளைகளைப்பற்றி பெற்றோர் புகார் செய்தால், பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யலாம்!' என்கிறது. இந்தச் சட்டத்தைப்பற்றி மக்கள் மத்தியில் பொதுவான விழிப்பு உணர்வு இன்னும் ஏற்படாத நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக நாமக்கல் மாவட்டத்தில் அப்பாவைத் தவிக்கவிட்ட மகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கைதுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர் சகாயம்!

ஒரு விச‌ய‌ம்' 'நாளைக்கு இதே முதுமை நமக்கும் வரும்" என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:33 AM 15 comments
Labels: அனுப‌வ‌ம், சமூக‌ம், சினிமா
Widget by Abu-farhan
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ▼  மே (9)
      • மீண்டும்....(முகில‌னுக்காக‌)
      • த‌மிழ் வ‌ழிக் கொலை
      • ந‌ன்றி ந‌வில‌ல்
      • காண‌வில்லை
      • ச்சும்மா
      • +2வுக்கு அப்புற‌ம் ----- வ‌ழிகாட்டி
      • அம்மாக்க‌ளுக்கு
      • அர‌ச‌ர்க‌ள் Vs அர‌சிய‌ல்வாதிக‌ள்
      • தென்னையைப் பெத்தா இள‌நீரு,பிள்ளையைப் பெத்தா க‌ண்ணீரு
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio