skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

திங்கள், 30 நவம்பர், 2009

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது-2


கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளைநாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-


1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையைதவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். TableSalt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாகBragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்(gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.


3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமானஉணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,இது மிகவும் ஆபத்தானது..


4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழுதானியங்கள், விதைகள்,பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமானசெல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளைதவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:04 AM
Labels: க‌ட்டுரை, ம‌ருத்துவ‌ம்

ஞாயிறு, 29 நவம்பர், 2009

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சைமட்டுமே உள்ளது என்பதைமறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNSHOPKINS) சொல்கிறார். உங்க‌ள் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:




1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரணடெஸ்டில் தெரிய வராது, அவைசில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்சிகிச்சைக்குப் பின், டாக்டர்நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையானஅர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்றுமட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.


2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கானசெல் உருவாகிறது.


3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாகஇருக்கும்போது கேன்சருக்கான செல்அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கானவாய்ப்பும் தடுக்கப்படுகிறது.


4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்துகுறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவுமற்றும் வாழ்க்கை முறைகாரணிகளாகிறது.


5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்துகுறைப்பாட்டை நீக்கலாம். தேவையானசத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களைமட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பைபோன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்குடல், கிட்னி, இதயம்,மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது


7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமானசெல்கள், உறுப்புகள்,திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது


8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்(tumor) அளவைக் குறைக்கசெய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சைகேன்சர் கட்டியினை அழிக்கபெரும்பாலும் உதவுவதில்லை.


9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சுமூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லதுஅழிக்கப் பட்துவிடும். இதனால்மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.


10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்மற்ற இடங்களில் பரவ ஒருகாரணமாகி விடுகிறது.

தொட‌ரும்....



Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:39 AM
Labels: க‌ட்டுரை, சமூக‌ம், மருத்துவ‌ம்
ஒரு நாடகமன்றோ நடந்தது !!!!!!!



ராகுல் : என்ன பார்க்கிறிங்க ......... எல்லாம் இந்த ஒரு ஜாண் வயித்துக்காகத்தான் மக்களே....

(மனசுக்குள்) ங்கொய்யால பசி உயிர் போகுது இது தான் கடைசி சட்டி நேரா இவங்க வீட்டுக்கு சாப்பிடத்தான் போகணும் அன்னிக்கு மாதிரியே மண் சட்டிக்குள்ள பிஸ்ஸாவை வைத்து வெளுத்து கட்டிரணும்...






Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:42 AM
Labels: அர‌சிய‌ல், நகைச்சுவை

சனி, 28 நவம்பர், 2009

குழ‌ந்தை மன‌து

மால‌திக்கு அலுவ‌ல‌க‌த்தில் இருப்பு கொள்ள‌வில்லை
வெளியே இடி,மின்ன‌லுட‌ன் ம‌ழை பெய்து கொண்டு இருந்த‌து.

க‌டிகார‌த்தை நோக்கினாள் இன்னும் அரை ம‌ணி நேர‌ம் இருக்கிற‌து அலுவ‌ல‌க‌ம் முடிய‌
நேர‌மான‌தும் முத‌ல் ஆளாக‌ வெளியேறினாள் ம‌ழைய‌ எதிர் கொள்ள‌ த‌யாராய்
ரெயின் கோட்டுடன்

மின்ன‌லும் இடியுமாய் ந‌ல்ல‌ ம‌ழை அதோடு காற்று வேறு மால‌திக்கே பய‌மாயிருந்து

பார்க்கிங்கை அடைந்து ஹ‌ரிணி எப்ப‌டி வீட்டுக்கு எப்ப‌டி போனாளோ,குழ‌ந்தை பய‌ந்து கொள்வாளோ என்று நினைத்துக் கொண்டே த‌ன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.


வீட்டுக்கு அருகிலேயே ப‌ள்ளி இருப்ப‌தால் அவ‌ள‌து ம‌க‌ள் ஹ‌ரிணி ந‌ட‌ந்தே
சென்று வ‌ருவது வ‌ழ‌க்க‌ம்

ம‌ழைக்காக‌ கட‌வுளையும் ரோடுக்காக‌ அர‌சிய‌ல்வாதிக‌ளையும் திட்டிக் கொண்டே வீடு இருக்கும் தெருவில் திரும்பினாள்

அங்கு தூர‌த்தில் ஹ‌ரிணி மின்ன‌ல் அடிக்கும் போது நிற்ப‌தும் பின்பு நட‌ப்ப‌துமாய் ம‌ழையில் ந‌னைந்து கொண்டே சென்று கொண்டிருந்தாள்,ரெயின் கோட்டை வேறு த‌லையில் இருந்து நீக்கியிருந்தாள்

ந‌னையாதே என்று சொன்னாள் கேட்ப‌தே இல்லை என்று ம‌ன‌துக்குள் திட்டிக் கொண்டே அவ‌ளை நெருங்கி என்ன‌ ப‌ண்றே ஹ‌ரிணி எதுக்கு நின்னு நின்னு போறே என்று அத‌ட்டினாள்

இல்ல‌ம்மா வான‌த்துல‌ இருந்து யாரோ போட்டோ எடுக்கிறாங்க‌ அதான்மா என்றாள் முக‌ம் கொள்ளாப் புன்ன‌கையுட‌ன்.






Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:44 PM 6 comments
Labels: ஒரு ப‌க்க‌ க‌தை

சித்தர்கள் வரலாறு - போகர்

சீன தேசத்து “போ யாங்” என்கிற போகர்

இவ்வரலாறு செய்திகளனைத்தும் சதுரகிரி தலபுராணத்தை விளக்கும் புத்தகத்திலிருந்து படித்து அதிலிருந்து சாற்றை எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்க்கு பேருதவியாக இருந்த சக்தி விகடனில் தொடராக வந்த "சதுரகிரி யாத்திரை" என்பதிலிருந்தும் பல குறிப்புக்களை எடுத்துக்கொண்டேன்.

அகஸ்திய முனிவர் தமது சௌமிய சாகரத்தில் போகரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். காலங்கியின் சீடர் சித்தர்களில் முதன்மையானவர். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.


சீன நாட்டிலுள்ள வெள்ளை நிற மக்கள் போரின் மரபு என்பாரகள். உலகத்தில் பதினெட்டு வகையான வெள்ளை மனிதர்கள் உண்டு. அவர்களிலே சீனர்களும் ஒருவகையாவர். போ_யாங் என்ற பெயர் போ_யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவியிருக்கலாம் என்பதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.



போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. இன்று நாம் தரிசிக்கும் பழனி (திருஆவினன்குடி) மலை அருள்மிகு தண்டாயுதபாணி முருகனை நவபாஷானங்களால் கட்டி சிலையை வடித்தார், எனவே பழனிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் போகரின் சமாதியிலும் சென்று வழிபட்டு நம்மை மேருகேட்ரிக்கொள்ளுவோம்.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.


இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார். “தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தவம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி, அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும் என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே, இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். “யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் (mercury) பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் (mercury) கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுத்து அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.

பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது↓


இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைக்கும். செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.

பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

போகர் வரலாறு முற்றிற்று.



சித்துக்கள் தொடரும்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:24 AM 1 comments
Labels: க‌ட்டுரை, சித்த‌ர்

வியாழன், 26 நவம்பர், 2009

மக்களே லஞ்சத்துக்குப் பழகிவிட்டார்கள்!

இந்தியாவில் ஊழல் கறை அதிகம் படிந்த மாநிலம்... தன்மானம் மிகு தமிழகம்!

''எங்கோ லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரையும், வி.ஏ.ஓ-வையும் கைது செய்வதால் மட்டுமே லஞ்சத்தை முழுதாக ஒழிக்க முடியாது. இன்று மக்களே லஞ்சத்துக்குப் பழகிவிட்டார்கள். முதலில் இது மாற வேண்டும்!''- உண்மை பேசுகிறார்முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல். ''ஆயிரம், லட்சங்களில் அளிக்கப்பட்ட லஞ்சம், இன்று சர்வசாதாரணமாக கோடிகளைத் தொட்டுவிட்டது. அதுவும் 100 கோடி, 10 ஆயிரம் கோடிகள்அளவுக்குக் கூட லஞ்சம் தரப்படுகிறது. தேர்தல் நன்கொடை, பிறந்த நாள் பரிசு என விதவிதமான பெயர்களில் கோடிக்கணக்கில் பணம் திரட்டுகின்றனர். இதெல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம்? இப்போது தேர்தலே கேலிக் கூத்தாக்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று லஞ்சம் கொடுத்து ஓட்டுப் போடச் சொல்கிறார்கள். அப்படி வெற்றி பெற்று வருபவர் எப்படி நேர்மையாக இருப்பார்? முதலீடு செய்ததை அதிக லாபத்துடன் அறுவடை செய்யத்தான் பார்ப்பார். உடனே 'அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும்' என்பார்கள். இது முட்டாள்தனமான வாதம். தேர்தலில் நிற்கும் மோசமான சில அரசியல்வாதிகளுக்காக எதற்கு மக்கள் பணம் செலவழிக்கப்பட வேண்டும்?

'முதலில் லஞ்ச வழக்கில் மாட்டினால் வாழ்க்கையே அவ்வளவுதான்!' என்று மிரளும் அளவுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும். 1984-ல் நடந்ததாகச் சொல்லப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் முத்திரைத்தாள் மோசடி வழக்கும். இப்படிப் பல வழக்குகள் ஜவ்வு போன்று இழுத்தடிக்கப்படுகின்றன. லஞ்ச வழக்கில் 100 பேர் கைது செய்யப்பட்டால், அவர்களில் சராசரியாக 6 பேர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். உடனடி விசாரணை, உடனடித் தீர்ப்பு... என்று நீதித் துறை வேகப்படுத்தப்பட வேண்டும். 'சும்மா அரெஸ்ட் பண்ணுவாங்க... கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வந்துடலாம்' என்ற நிலை மாற்றப்படும் வரை யாருக்கும் பயம் இருக்காது!'' என்கிறார் தடாலடியாக!

-விக‌ட‌ன்

தென்னகத்தில் கட்சியைவிட்டுக் கட்டம் கட்டப்பட்ட பிரமுகர், அண்ணனைப் பார்த்திருக்கிறார். ''26 கோடிக்காகவா என்னை நீக்கணும்? அதை நான் செட்டில் பண்ணிட மாட்டேனா?'' என்ற கேள்வியைக் கேட்டதும் நடுங்கிப் போனார்களாம் அருகில் இருந்தவர்கள்!

-விக‌ட‌ன்

எங்கே செல்லும் இந்த‌ பாதை ......... யாரோ யார் தான் அறிவாரோ.....
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 2:55 PM 0 comments
Labels: க‌ட்டுரை, விக‌ட‌ன்

சென்னை-பெங்களூரில் குறைந்த விலை பிளாட்டுகள்!

வாங்குவோர் வாங்கலாம்
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காஸ்மோ சிட்டி எனும் பெயரில் குறைந்த விலையில் பிளாட்டுகள் கட்டித் தரும் திட்டத்தைத் துவங்கியுள்ளது புராவிடன்ட் ஹவுஸிங் லிமிடெட்.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உருவாக்கப்படும் காஸ்மோ சிட்டியில் 2 மற்றும் 3பெட்ரூம் பிளாட்டுகளை குறைந்த விலையில் கட்டித் தருகிறது இந்நிறுவனம்.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஜெயகர் ஜெரோம் இப்படிக் கூறுகிறார்:

சென்னை மாதிரி பழமையும் பாரம்பரியமும் மிக்க நகரங்களுக்கு ஒரு படுக்கையறை வீடுகள் சரிவராது என்பதால், இரு படுக்கையறை மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளை கட்டித் தர முடிவு செய்தோம். இவற்றையும்கூட குறைந்த விலையில் இருக்குமாறு கட்டி வருகிறோம்.

பெங்களூரில் ஏற்கெனவே இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அங்கு அடுத்த கட்டமாக ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளைக் கட்டும் திட்டமுள்ளது. இந்த வீடுகள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்திலிருந்து கிடைக்கும். புதிய விமான நிலையத்தையொட்டி இந்த வீடுகள் அமையும்.

பெருநகரங்கள் தவிர, கொச்சி, கோவை போன்ற நகரங்களிலும் இம்மாதிரி குறைந்த விலை வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளோம். கோவையில் பெரும்பாலும் தனி வீடுகளைத்தான் விரும்புகிறார்கள். அவர்களையும் வாங்க வைக்கும் விதத்தில் பிளாட்டுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம், என்றார் ஜெயகர்.

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நிலத்தின் மதிப்பு முன்பை விட 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக ஜெயகர் குறிப்பிட்டார். - மெய்யாலுமா

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு கதையாயிடாம பார்த்துகோங்க மஹா ஜனங்களே
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:17 AM 1 comments
Labels: அனுப‌வ‌ம்

புதன், 25 நவம்பர், 2009

சித்தர்கள் வ‌ர‌லாறு


சித்தர்கள் என்பவர்கள் யார்
வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்தால் சாகின்ற
பிறவி அல்ல---இந்த சீவன்
சர்வம் சிவமயம் சிவாய நமக‌
பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.


சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.


சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.


சாதி சமயம் சாத்திரம் சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள்,பண்டாரங்கள் பண்டிதர்கள் சன்னியாசிகள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஓதுவார்கள் கலைஞர்கள் கவிஞர்கள் அரசர்கள் மறவர்கள் ஆக்கர்கள் புலமையாளர்கள் அறிவியலாளர்கள் பொது மக்கள்ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில்இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன்ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும். சித்தர்களின் கொள்கை பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

சரி சித்தர்களை காண்போமா
முதலில் பதினெட்டு சித்தர்களின் பட்டியல்களை பார்ப்போமே
1. திருமூலர். 2. போகர் 3. கருவூர்சித்தர் 4. புலிப்பாணி 5. கொங்கணர் 6. மச்சமுனி 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் 9. அகத்தியர் 10. தேரையர் 11. கோரக்கர் 12. பாம்பாட்டி சித்தர் 13. சிவவாக்கியர் 14. உரோமரிசி 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர் 17. குதம்ப்பைச் சித்தர் 18. பதஞ்சலி சித்தர்

தி ரு மூ ல ர்
சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை (பசுக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், அதனால் தான் நமது தமிழ்நாடு அரசாங்கமும் தனது பால் உற்பத்திக்கு “ஆவின் பால்” என்று பெயர் வைத்தது). மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருள்ளியுள்ளார், அவையாவன

1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

3) அன்பே சிவம்

ஆகியவைகளே ஆகும்.

திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது.

இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல் "திருமூலர் திருமந்திரம்" என்று வழங்கப்பட்டது.

இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 80002. திருமூலர் சிற்ப நூல் – 10003. திருமூலர் சோதிடம் – 3004. திருமூலர் மாந்திரிகம் – 6005. திருமூலர் சல்லியம் – 10006. திருமூலர் வைத்திய காவியம் – 10007. திருமூலர் வைத்திய கருக்கிடை – 6008. திருமூலர் வைத்திய சுருக்கம் – 2009. திருமூலர் சூக்கும ஞானம் – 10010. திருமூலர் பெருங்காவியம் – 150011. திருமூலர் தீட்சை விதி – 10012. திருமூலர் கோர்வை விதி – 1613. திருமூலர் தீட்சை விதி – 814. திருமூலர் தீட்சை விதி – 1815. திருமூலர் யோக ஞானம் – 1616. திருமூலர் விதி நூல் – 2417. திருமூலர் ஆறாதாரம் – 6418. திருமூலர் பச்சை நூல் – 2419. திருமூலர் பெருநூல் – 3000
போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த
பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருமூலர் வரலாறு நிறைவுற்றது.


சித்துக்கள் தொடரும்............

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 11:20 AM 1 comments
Labels: க‌ட்டுரை

என் இனிய பெரும் குடி மக்களே

என் இனிய பெரும் குடி மக்களே

என்ன நடக்கிறது நம் தமிழகத்துலே
ஒரு காலத்தில் நம் தமிழகம் குடிமக்களின் சொர்க்க பூமியாய் இருந்தது கொடுத்த காசுக்கு எவ்வளவு பிராண்ட்கள் Old Monk ,Cardinal , MC அப்பப்பா அதையெல்லாம் எண்ணி பார்க்கையிலே ஐயோகோ நான் என்ன செய்வேன் என் தொண்டை தட தடக்கிறது மண்டை கிடு கிடுக்கிறது

ஆனால் இன்று என்ன நடக்கிறது இங்கே .......

மற்ற மாநிலங்களிலே "நல்ல" சரக்கை "கள்ள" மார்க்கெட்டில் விக்குறாங்க ஆனால் இங்கே "கள்ள" சரக்கை "நல்ல" மார்க்கெட்டில் விக்குறாங்க என்ன கொடுமை அய்யா இது

தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவற்கொரு குணம் உண்டு என்று வாழ்ந்தவர்கள் நாம் நம்மை போய் ?????

இன்றும் இளைனர்களின் நாடி நரம்புகளை எல்லாம் சுண்ட வைக்கற அளவு என்னால் பேச
முடியும் ஆனால் விதி ???
கொஞ்ச காலமாக நல்ல சரக்கே அடிக்காதிதில் என் நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து விட்டது

கடைசியாக ஒரு செகேச்லோவேகியா நாட்டு கவிதை
வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஓல்ட் மங் குவார்ட்டர்
செல்வம் எலுமிச்சை ஊருகாய்
இது போதுமடி எனக்கு

இத்துடன் என் உரையை முடித்து கொள்கிறேன் நன்றி
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:55 AM 1 comments
Labels: கவிதை

செவ்வாய், 24 நவம்பர், 2009

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்.அவளைப் போல்ஒருஅழகிய பெண்னை யாரும்பார்த்ததும் இல்லை கேட்டதும்இல்லை.அந்தப் பெண் பக்கத்துகிராமத்தைச்சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்.இது தெரிந்ததும் மொத்தகிராமமும் அந்தக் காதலைஎதிர்க்க ஆரம்பித்தது.இதனால்வேறு வழிதெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒட தீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல்காணாமலும் போய்விட்டனர்.


உடனேஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால்கண்டு பிடிக்கவேமுடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க்காதலை ஏற்றுக் கொள்ள முடிவுசெய்து செய்தித்தாளில்விளம்பரமும்கொடுத்தனர்.அதைப் பார்த்தகாதல் ஜோடி உடனே ஊர்திரும்பியது. சந்தோஷப் பட்டஊர் மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமானமுறையில் திருமணம் செய்யமுடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையானபொருட்களை வாங்கநகரத்திற்குச்சென்றிருந்தனர்.அப்போதுஎதிர்பாராதவிதமாக ஒரு லாரிமோதி அந்த வாலிபன் அந்தப் பெண்எதிரிலேயே உயிர் துறந்தான்.உடனே அந்தப் பெண்னும் மனநிலைபாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகுநினைவு திரும்பிய அந்தப் பெண்குடும்பத்தினருடன் வசித்துவந்தாள்.


திடீரென்று ஒரு நாள்அப்பெண்னின் தாய் ஒரு கனவுகண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள்மகள் அவளுடைய காதலன் நினைவாகவைத்திருக்கும் உடையில்இருக்கும் இரத்த்க் கறையைஉடனே துவைக்க வேண்டும்என்றது,இல்லா விட்டால் மோசமானவிளைவுகள்ஏற்படும் என்றும் எச்சரிக்கைசெய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதேதேவதை அந்தப் பெண்னின்தந்தையிடமும் கனவில்எச்சரித்தது.ஆனால் அவரும்அதைக் கண்டுகொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின்கனவிலேயே தோன்றிஎச்சரித்தது.அவள் உடனேதாயிடம் கனவைப் பற்றிக்கூறினாள். அதன் பிறகே அதன்முக்கியத்துவம்உணரப்பட்டது.அவள் தாய் அதைதுவைக்கக் கூறினாள்.உடனே அந்தப் பெண்னும் அதைத்துவைத்தாள். இருந்தும் தேவதைமறுபடியும் அடுத்த நாள்கனவில்வந்து கறை சரியாகப் போகவில்லைஎன்று எச்சரித்தது.மறுபடியும் அப்பெண்அத்துணியைத்துவைத்தாள்.இருந்தும் கறைபோகவில்லை. அடுத்த நாள் காலையில்அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத்திறந்தாள்.


அப்போது



கனவில்வரும் அதே பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகம்கனவில் வருவதைப் போல் கனிவாகஇல்லாமல்வெளிறிப் போய் இருந்தது.உடனேஇவள் பயத்தினால் அலறினாள்.



அந்தத் தேவதை கோபத்துடன்கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்எக்ஸல் போடு கறை போயிடும்"என்றது.



இதைப் படித்ததும் உடனே என்னைஉதைக்கத் தோணுமே உங்களுக்கு!நானே இதை எனக்குஅனுப்பியவரைத்தேடிக்கிட்டு இருக்கேன்

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:57 PM 3 comments
Labels: காதல்

ٌ திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

ٌ திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! ٌ



சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!ٌ



என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ



சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!ٌ



பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!


ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !ٌ



கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் ! ٌ



மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "ٌ



இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ



கணவா... - எல்லாமே கனவா.......? கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?ٌ



12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்.... 4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ... 2 வருடமொருமுறை கணவன் ... நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ



இது வரமா ..? சாபமா..? அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ



கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா? நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய் திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ



விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு... வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ



இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்


ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!


ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?ٌ



விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?


ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ



பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்! உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ



விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:32 PM 3 comments
Labels: துபாய்

சனி, 21 நவம்பர், 2009

இதயம்

A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees . The transcript of the chat is given below. Useful for everyone.

Qn: What are the thumb rules for a layman to take care of his heart?

Ans: 1. Diet - Less of carbohydrate, more of protein, less oil 2. Exercise - Half an hour's walk, at least five days a week; avoid lifts and avoid sitting for a longtime 3. Quit smoking 4. Control weight 5. Control blood pressure and sugar

Qn: Is eating non-veg food (fish) good for the heart?

Ans: No

Qn: It's still a grave shock to hear that some apparently healthy person gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.

Qn: Are heart diseases hereditary?

Ans: Yes

Qn: What are the ways in which the heart is stressed? What practices do you suggest to de-stress?

Ans: Change your attitude towards life. Do not look for perfection in everything in life.

Qn: Is walking better than jogging or is more intensive exercise required to keep a healthy heart?

Ans: Walking is better than jogging since jogging leads to early fatigue and injury to joints

Qn: You have done so much for the poor and needy. What has inspired you to do so?

Ans: Mother Theresa , who was my patient

Qn: Can people with low blood pressure suffer heart diseases?

Ans: Extremely rare

Qn: Does cholesterol accumulates right from an early age (I'm currently only 22) or do you have to worry about it only after you are above 30 years of age?

Ans: Cholesterol accumulates from childhood.

Qn: How do irregular eating habits affect the heart ?

Ans: You tend to eat junk food when the habits are irregular and your body's enzyme release for digestion gets confused.

Qn: How can I control cholesterol content without using medicines?

Ans: Control diet, walk and eat walnut.

Qn: Can yoga prevent heart ailments?

Ans: Yoga helps.

Qn: Which is the best and worst food for the heart?

Ans: Fruits and vegetables are the best and the worst is oil. Qn: Which oil is better - groundnut, sunflower, olive?

Ans: All oils are bad .

Qn: What is the routine checkup one should go through? Is there any specific test?

Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok. Check BP, Treadmill test after an echo.

Qn: What are the first aid steps to be taken on a heart attack?

Ans: Help the person into a sleeping position , place an aspirin tablet under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a coronary care unit since the maximum casualty takes place within the first hour.

Qn: How do you differentiate between pain caused by a heart attack and that caused due to gastric trouble?

Ans: Extremely difficult without ECG.

Qn: What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, s edentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.

Qn: Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.

Qn: Marriages within close relatives can lead to heart problems for the child. Is it true?

Ans : Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may not have a software engineer as a child

Qn: Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart ? What precautions would you recommend?

Ans : When you are young, nature protects you against all these irregularities. However, as you grow older, respect the biological clock.

Qn: Will taking anti-hypertensive drugs cause some other complications (short / long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.

Qn: Will consuming more coffee/tea lead to heart attacks?

Ans : No.

Qn: Are asthma patients more prone to heart disease?

Ans : No.

Qn: How would you define junk food?

Ans : Fried food like Kentucky , McDonalds , samosas, and even masala dosas.

Qn: You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.

Qn: Does consuming bananas help reduce hypertension?

Ans : No.

Qn: Can a person help himself during a heart attack (Because we see a lot of forwarded emails on this)?

Ans : Yes. Lie down comfortably and put an aspirin tablet of any description under the tongue and ask someone to take you to the nearest coronary care unit without any delay and do not wait for the ambulance since most of the time, the ambulance does not turn up.

Qn: Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to heart problems?

Ans : No. But it is ideal to have normal hemoglobin level to increase your exercise capacity.

Qn: Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So, does walking while doing daily chores at home or climbing the stairs in the house, work as a substitute for exercise?

Ans : Certainly. Avoid sitting continuously for more than half an hour and even the act of getting out of the chair and going to another chair and sitting helps a lot.

Qn: Is there a relation between heart problems and blood sugar?

Ans: Yes. A strong relationship since diabetics are more vulnerable to heart attacks than non-diabetics.

Qn: What are the things one needs to take care of after a heart operation?

Ans : Diet, exercise, drugs on time , Control cholesterol, BP, weight.

Qn: Are people working on night shifts more vulnerable to heart disease when compared to day shift workers?

Ans : No.

Qn: What are the modern anti-hypertensive drugs?

Ans : There are hundreds of drugs and your doctor will chose the right combination for your problem, but my suggestion is to avoid the drugs and go for natural ways of controlling blood pressure by walk, diet to reduce weight and changing attitudes towards lifestyles.

Qn: Does dispirin or similar headache pills increase the risk of heart attacks?

Ans : No.

Qn: Why is the rate of heart attacks more in men than in women?

Ans : Nature protects women till the age of 45. Qn: How can one keep the heart in a good condition?

Ans : Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke and, go for health checkup s if you are past the age of 30 ( once in six months recommended) ....

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:00 AM 0 comments
Labels: இதயம்

வெள்ளி, 20 நவம்பர், 2009

மேரேஜ் இன்விடேஷ‌ன்


மேரேஜ் இன்விடேஷ‌ன்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 11:22 AM 1 comments
Labels: மேரேஜ் இன்விடேஷ‌ன்

Learning Alphabets


Learning Alphabets
You all might have forgotten about alphabets...
Let me teach you now ......

A ==> Aristocrat


B ==> Bagpiper

C ==> contessa

D ==> Director's Special

E ==> Eight PM

F ==> Four Roses

G ==> God Father

H ==> Haywards

I ==> Imperial Blue

J ==> Johny Walker

K ==> King Fisher

L ==> Lincoln Lager

M ==> Master Brew

N ==> Narragansett Bock

O ==> Old Monk

P ==> Pioneer Ale

Q ==> Quat

R ==> Red Label

S ==> Scotch

T ==> Trommers White Label

U ==> Utica CSAB

V ==> VAT 69

W ==> WATKINS

X ==> XXX

Y ==> Yotoc

Z ==> Zingaro

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 11:15 AM 0 comments
Labels: Funny

ஆரம்பிக்கிறேன்..............................

..............

........................................... ஆரம்பிக்கிறேன்

எல்லோரும் பார்த்துகோங்க நானும் ரவுடிதான்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:51 AM 1 comments
Labels: Intro
Widget by Abu-farhan
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ▼  நவம்பர் (15)
      • கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது-2
      • கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!
      • ஒரு நாடகமன்றோ நடந்தது !!!!!!! ராகுல் : என்ன பார்க்...
      • குழ‌ந்தை மன‌து
      • சித்தர்கள் வரலாறு - போகர்
      • மக்களே லஞ்சத்துக்குப் பழகிவிட்டார்கள்!
      • சென்னை-பெங்களூரில் குறைந்த விலை பிளாட்டுகள்!
      • சித்தர்கள் வ‌ர‌லாறு
      • என் இனிய பெரும் குடி மக்களே
      • மனதை அதிரவைத்த காதல் கதை
      • ٌ திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
      • இதயம்
      • மேரேஜ் இன்விடேஷ‌ன்
      • Learning Alphabets
      • ஆரம்பிக்கிறேன்..............................

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio